என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சக்திவாய்ந்த என்ஜினுடன் புதிய டிபெண்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்28 Aug 2021 10:11 AM GMT (Updated: 28 Aug 2021 10:11 AM GMT)
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபெண்டர் மாடல் 90 மற்றும் 110 வெர்ஷன்களில் கிடைக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த, அதிவேகமான டிபெண்டர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. புதிய டிபெண்டர் மாடல் விலை ரூ. 1.82 கோடி ஆகும்.
வி8 என்ஜின் கொண்ட டிபெண்டர் மாடல் தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் கார்பதியன் எடிஷன் வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்னதாக இதே மாடல் பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய டிபெண்டர் மாடல் மூன்று மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 5 லிட்டர், வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 525 ஹெச்.பி. திறன், 625 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.
இந்த எஸ்.யு.வி. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X