தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் திராவிட மாடல் 2.o-க்காக கடுமையாக உழைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-12-14 20:25 IST   |   Update On 2025-12-14 20:26:00 IST
  • மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும்.
  • திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீிதியாக திமுக வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினரால் வெற்றிக்கொள்ள முடியாதது தமிழ்நாட்டில் மட்டும் தான். தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது. சங்கி படைகளை கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

அன்போது வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். இந்தயாவிலேயே சித்தாந்த ரீதியாக சண்டை போடும் ஒரே மாநில கட்சி திமுக தான்.

மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அரசியலில் சொகுசு பார்க்க வேண்டாம்; கடுமையாக உழைத்தால் தான் இடம் கிடைக்கும். கடந்த கால ஆட்சியாள்கள் செய்த தவறை திமுக இளைஞரணி கொண்டு சேர்க்க வேண்டும்.

கடந்த கால ஆட்சியர்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நடக் உள்ள அநீதிகளை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக முன்பு இல்லாத அளவிற்கு ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News