தமிழ்நாடு செய்திகள்
ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20% மானியம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச ஜவுளித்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
* ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.