தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க என்ன செய்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும்- பிரதமர் மோடி

Published On 2026-03-01 20:53 IST   |   Update On 2026-03-01 20:53:00 IST
  • இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.
  • திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.

என்டிஏ பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் பிரதமர் மோடி பேசினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மருது சகோதரர்கள் பெயர்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நீதிக்கும் கண்ணியத்திற்கும் போராடிய இமானுவேல் சேகரனாரை நினைவு கூர்கிறேன்.

இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞருக்கு அஞ்சலி.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த பூரணச்சந்திரனை நினைவு கூர்கிறேன். இளைஞர் பூரண சந்திரன் செய்த உயிர் தியாகத்தை எண்ணி மனம் கனக்கிறது. அவரது குடும்பத்தினருகு்கு இரங்கல்.

பூரணச்சந்திரன் மனைவி, குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.

திமுக என்ன சதி செய்தாலும் இறுதியில் திருப்பரங்குன்றம் முருகனை வணங்கும் எம் மக்களே வெல்வார்கள்.

திமுக என்ன செய்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News