டெல்லிக்கு விரைந்தார் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு?
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
- 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை 5 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்றுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் மாலை 4 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.