தமிழ்நாடு செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2026-02-10 16:18 IST   |   Update On 2026-02-10 16:18:00 IST
  • பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதலில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்.
  • ஒரே இடத்தில் 3 வருடத்திற்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.

இதனால் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தற்போது SIR பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. அதன்பின் தேர்தல் ஆணையர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு சென்று தேர்தல் நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.

இந்த நிலையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய 6 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News