தமிழ்நாடு செய்திகள்

கைது செய்யப்பட்ட பவித்ரா, மணிகண்டன். கொலை செய்யப்பட்ட அலமேலு

கள்ளக்காதலனுடன் மாமியாரை அடித்து கொன்று தீ வைத்த மருமகள்

Published On 2024-06-24 14:38 IST   |   Update On 2024-06-24 14:38:00 IST
  • பவித்ரா-ஏழுமலை தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
  • இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்காரப்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (வயது 48). இவருக்கு ஏழுமலை (20), சேட்டு (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அலமேலுவின் மூத்த மகன் ஏழுமலை கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலுவின் அண்ணன் நடேசனின் மகள் பவித்ரா (20) என்பவரை, ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதில் பவித்ரா-ஏழுமலை தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன், ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இதை அறிந்த அலமேலு 2 பேரையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்ற பவித்ரா மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி ஆடு மேய்க்கும் இடத்திற்கு மாமியார் அலமேலு சென்றுள்ளார். அப்போது பவித்ரா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோர் ஒன்றாக இருந்துள்ளனர். இதனை கண்ட அலமேலு அவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வழக்கம்போல் 2 பேரும் வீட்டுக்கு சென்று அவரவர் வேலையை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அலமேலுவின் இளைய மகன் சேட்டு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது நீண்ட நேரம் ஆகியும் தாய் வீடு திரும்பாததால் அக்கம் பக்கம் உறவினர்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் தேடி வந்துள்ளார்.

எங்கும் அவர் கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர் மீண்டும் தனது நண்பர் ராஜேந்திரன் என்பவருடன் இரவு தனது தாயார் அலமேலுவை தேடி சென்று உள்ளனர்.

இந்த நிலையில் காட்டு பகுதியில் ஓர் இடத்தில் தீ எரிவதைக் கண்ட சேட்டு மற்றும் அவரது நண்பர் ராஜேந்திரன் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் இருந்த அலமேலுவின் உடலைக் கண்டு மிரண்டு போன 2 பேரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அலமேலு உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவப் பகுதிக்கு சென்று ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 22-ந் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாட முடியாத கள்ளக்காதலர்கள் நேற்று கொண்டாடிய பொழுது மாமியார்களிடம் சிக்கியதும். அதை மாமியார் அலமேலு கண்டித்தையும், இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொன்று தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் சிங்காரப்பேட்டை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர்.மேலும் இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News