இந்தியா
அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் பாராளுமன்ற ஜனநாயகம் முடிவடைந்து விடும்- ப.சிதம்பரம் கருத்து
- அரசியலைமப்பை திருத்துவது பா.ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை.
- பா.ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களில் இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அரசியலைமப்பை திருத்துவது பா.ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை. பா.ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களில் இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும், இந்தியாவின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டப்படி அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் அது பாராளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.