இந்தியா

5 ஆண்டு காலம் ஆட்சியில் தூங்கிய கும்பகர்ணன் ஜெகன்மோகன் ரெட்டி

Published On 2024-04-08 05:36 GMT   |   Update On 2024-04-08 05:36 GMT
  • கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன்.
  • மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் தொகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா, பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. ஜெகன் மோகன் ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது.

விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. கொலைகாரர்கள் வெளியில் திரிகிறார்கள்.

கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன். நியாயம் ஒரு பக்கம். அநியாயம் இன்னொரு பக்கம். ராஜசேகர ரெட்டியின் பிள்ளை ஒரு பக்கம்.


விவேகானந்த ரெட்டியை கொன்ற கொலையாளிகள் இன்னொரு பக்கம். மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.

ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆண்டு கால ஆட்சியில் கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டு இருந்தார். தேர்தலுக்காக இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளார்.

அப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். உங்கள் நலன்களுக்காக பாடுபட இந்த சர்மிளாவை தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News