உள்ளூர் செய்திகள்

ஆதார் கார்டு எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

Published On 2022-08-07 07:46 GMT   |   Update On 2022-08-07 07:46 GMT
  • அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆதார் திருத்தம் செய்ய பொதுமக்கள் வந்தனர். இந்த சேவை சரியாக செயல்படாததால் அவர்கள் ஆதார் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
  • இதனை உடனடியாக சரி செய்து ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தியூர், ஆக .7-

நாடு முழுவதும் அரசு தேவைகளுக்கும முக்கிய அடையாள அட்டையாக பயன்படுத்தக்கூடிய ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாள அட்டையாகவும் பயன்படு கிறது.

அந்த வகையில் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்டவை திருத்தங்கள் செய்யவும் புதியதாக ஆதார் எடுப்பவர்களும் எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக இந்த சேவை (இணைய தளம்வேலை செய்யாததால்) சரிவர செயல்படவில்லை என கூறப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட அந்தியூர் தவிட்டு பாளையம், வெள்ளை யம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம், அண்ணாமடுவு, அம்மா பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, அத்தாணி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய புதியதாக எடுப்பதற்கும் வருகிறார்கள்.

அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆதார் திருத்தம் செய்ய பொதுமக்கள் வந்தனர். இந்த சேவை சரியாக செயல்படாததால் அவர்கள் ஆதார் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

எனவே இதனை உடனடியாக சரி செய்து ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News