search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிணாமுல் காங்கிரஸ்"

    • என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
    • குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழை அவர்கள் கொண்டு வர சொன்னால், முதலில் பாஜக வேட்பாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சான்றிதழ்கள் கொடுத்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

    பாஜகவினரே குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் நாம் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்று மம்தா தெரிவித்தார். 

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராமர் பெயரை எடுத்துக் கொண்டு ராம நவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை.
    • பாகீரதி நதியில் இந்துக்களை மூழ்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 282 தொகுதிகளுக்கு 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 4-வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்காளத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் இன்று 4 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    காலை 11.30 மணிக்கு வடக்கு 24 பர்கான்சில் உள்ள பராக்பூரில் பாரதிய ஜனதா வேட்பாளர் அர்ஜூன் சிங்குக்கு ஆதரவாக மோடி ரோடு ஷோவில் ஈடுபட்டார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் பராக்பூர் நிலம் வரலாற்றை எழுதியது. சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்தது. திரிணாமுல் காங்கிரஸ் இங்கு என்ன செய்தது என்று பாருங்கள். வங்காள தேசத்தின் பொருளாதா ரத்தை வலுப்படுத்துவதில் மேற்கு வங்காளம் முக்கிய பங்காற்றிய காலம் ஒன்று இருந்தது.

    இன்று திரிணாமுல் காங்கிரஸ் ஊழல்களின் மையமாக மாறியுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஒரு காலத்தில் அறிவியல் கண்டு பிடிப்புகள் இருந்தன. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் முழுவதும் வெடிகுண்டு தயாரிக்கும் உள்நாட்டு தொழில் உள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராமர் பெயரை எடுத்துக் கொண்டு ராம நவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டனர்.

    சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் காலம் இங்கு இருந்தது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி பாதுகாப்பின் கீழ் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் செழித்து வருகின்றனர்.

    மேற்கு வங்காளத்தில் 2019-ம் ஆண்டை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பெறுவோம்.

    இன்று நான் மேற்கு வங்காள மக்களுக்கு 5 உத்தரவாதங்களை வழங்குகிறேன். நான் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது.

    எஸ்.சி., எஸ்.டி.க்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. நான் இங்கும் வரை நீங்கள் ராமரை வணங்குவதையும், ராமநவமி கொண்டாடுவதையும் யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை யாராலும் ரத்து செய்ய முடியாது. நான் இங்கு இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) ஒழிக்க முடியாது.

    மோடிக்கு எதிராக ஜிகாத் வாக்கு கேட்கிறார்கள். பாகீரதி நதியில் இந்துக்களை மூழ்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். அவர்களின் தைரியத்தை கற்பனை செய்து பாருங்கள். அவர்களின் தைரியத்துக்கு யார் ஆதரவு கொடுத்தார்கள்.

    சந்தேஷ்காலி குற்றவாளிகளை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. அந்த கட்சியின் குண்டர்கள் சந்தேஷ் காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அச்சுறுத்தினார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதைத் தொடர்ந்து 1 மணியளவில் அவர் ஹூக்ளி சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 3-வதாக பிரதமர் மோடி ஆரம்பாக்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் அருப்குமாரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.

    இன்று மாலை 4 மணிக்கு அவுராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதி களுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை 10 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. நாளை நடைபெறும் தேர்தலில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பீகார் செல்கிறார். மாலை 6.45 மணிக்கு பாட்னாவில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம்.
    • கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது.

    பெங்கால் சூப்பர் ஸ்டார் தேவ் (தீபக் அதிகாரி) திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டல் (Ghatal) மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 3-வது முறையாக தொடர்ந்து களம் காண்கிறார்.

    இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரத்த வங்கிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ரத்த தானம் செய்வது மிகப்பெரிய பணி. மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ரத்த தானம் செய்வது யாரோ ஒருவருக்கு புதிய வாழ்வு கொடுப்பதாகும்.

    இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம். கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது. ஆகவே, மரங்கள் நடும் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். நான் 9 லட்சம் வாக்குகள் பெற்றால், 9 லட்சம் மரங்கள் நடுவேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இவரை எதிர்த்து பா.ஜனதா ஹிரன் சட்டர்ஜி என்ற பெங்கால் நடிகரை களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் ஆதரவில் சிபிஐ தபன் கங்குலியை நிறுத்தியுள்ளது. இந்த தொகுதிக்கு மே 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • திரிணாமுல் கட்சிக்கு வாக்களிப்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது என்றார்.
    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பா.ஜ.க.வின் பி டீம் என திரிணாமுல் குற்றம்சாட்டியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த முறை 400 இடங்கள் கிடைக்காது. ஏற்கனவே பிரதமர் மோடியின் கையிலிருந்து 100 இடங்கள் நழுவிவிட்டன.

    காங்கிரசையும், சி.பி.ஐ(எம்)யையும் வெற்றிபெறச் செய்வது அவசியம்.

    காங்கிரசும், சி.பி.எம்.மும் வெற்றிபெறவில்லை என்றால் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது.

    எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதைவிட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது.

    ஆகவே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் குரலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருக்கிறார். அவர் பா.ஜ.க.வின் பி டீம் என குற்றம்சாட்டியது.

    • தபாஸ் ராய் உண்மையான தலைவர். அவருடைய கதவு கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்.
    • பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். துரதிருஷ்டவசமாக அவரது வழி தற்போது மாறுபட்டுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ். இவர் பா.ஜனதா வேட்பாளருடன் மேடையில் தோன்றியதுடன், அவரை பாராட்டி பேசியுள்ளார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குணால் கோஷை மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுளள்து.

    கட்சியின் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நீக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    கட்சியின் அடுத்த தலைமுறை தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட குணால் கோஷ், கடந்த மாதம் செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்ய விருப்பும் தெரிவித்திருந்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவருடைய செய்தி தொடர்பாளர் பதவிக்கான ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது. மற்ற பதவிகளில் நீடிக்க கேட்டுக் கொண்டது.

    இருந்த போதிலும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவரது அறிக்கைக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொல்கத்தாவின் வடக்கு தொகுதியின் சுதிப் பந்தோபாத்யாய் பேரணியில் குணால் கோஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால், பா.ஜனதா வேட்பாளர் தபாஸ் ராய் நடத்திய ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் குணால் கோஷ் பேசும்போது "தபாஸ் ராய் உண்மையான தலைவர். அவருடைய கதவு கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். துரதிருஷ்டவசமாக அவரது வழி தற்போது மாறுபட்டுள்ளது.

    தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்றும், பதவியை தக்கவைக்க எந்த விதமான நேர்மையற்ற வழிமுறைகளும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் நான் நம்புகிறேன். மக்கள் அவர்களுடைய வாக்குகளை சுதந்திரமாக வாக்களிக்கட்டும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில்தான் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே சோதனை.

    தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களவைத் தேர்தலின் போது அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (AITC) நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தேர்தல் நாளன்று, மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் உள்ள வெற்று இடத்தில், சிபிஐ நேர்மையற்ற சோதனையை நடத்தியுள்ளது.

    பலமுறை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட போதிலும், மத்திய புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும், குறிப்பாக தேர்தல் காலத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறது. அவற்தை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது.

    2ம் கட்ட வாக்குப்பதிவான நேற்று, குறிப்பாக மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங், ராய்கஞ்ச் ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கத் திரண்டிருந்தனர்.

    தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே கண்ணியமற்ற சோதனையை நடத்தியது.

    தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) வெடிகுண்டு படை உள்ளிட்ட கூடுதல் படைகளை சிபிஐ வரவழைத்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சோதனையின் போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது சம்பந்தமாக, "சட்டம் ஒழுங்கு" என்பது முற்றிலும் மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், சிபிஐ அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் மாநில அரசு மற்றும்/அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால் வெளியிடவில்லை.

    மேலும், மாநில காவல்துறையில் முழுமையாக செயல்படும் வெடிகுண்டு செயலிழக்கும் குழு உள்ளது. இது போன்ற சோதனையின் போது வெடிகுண்டு படை தேவை என்று சிபிஐ கூறியிருந்தால், முழு நடவடிக்கைக்கும் உதவியிருக்க முடியும்.

    இருப்பினும், அத்தகைய உதவி எதுவும் கோரப்படவில்லை.

    அரசு நிர்வாகம் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே இதுபோன்ற சோதனையின்போது ஊடகவியலாளர்கள் உடனிருந்தனர் என்பது மேலும் ஆச்சரியமாக உள்ளது.

    இந்த நேரத்தில், சோதனையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஏற்கனவே நாடு முழுவதும் செய்தியாக இருந்தது. இந்த ஆயுதங்கள் உண்மையில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதா அல்லது சிபிஐ/என்எஸ்ஜியால் ரகசியமாக புதைக்கப்பட்டதா என்பதை உறுதியாக அறிய வழி இல்லை.

    மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் முழு வரம்பும், சிபிஐ வேண்டுமென்றே ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததைக் குறிக்கிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதன் வேட்பாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் அவமதிப்பு உள்ளது.

    அதனால், தேர்தல் காலத்தில் சிபிஐ உட்பட எந்த ஒரு மத்திய புலனாய்வு நிறுவனத்தாலும் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வகையில் உடனடி வழிகாட்டுதல்கள்/கட்டமைப்பை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.
    • எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக்களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி ரோடு ஷோ நடத்தினார்.

    அப்போது அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-

    கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர். அதற்குப் பதிலாக அவர்களுடைய எம்.பி.க்கள் அர்ஜுன் சிங், பாபுல் சுப்ரியோ எங்கள் கட்சியில் இணைந்தனர்.

    சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனையை பயன்படுத்தி தபாஸ் ராய்-ஐ இணைத்துக் கொண்டது. பா.ஜனதாவின் குறைந்தது டாப் 10 தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய வரிசையில் உள்ளனர். சரியான நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கதவை திறக்கும். பா.ஜனதா மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும்" என்றார்.

    இதற்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சமிக் பட்டச்சார்யா பதில் கூறுகையில் "இது தொடர்பாக கூறுவதில் ஒன்றுமே இல்லை. மேற்கு வங்காளத்தில் தோல்வியை சந்திக்க இருக்கும் விரக்தியில் அரசியல் சொல்லாடல்தான் இது. மக்களவை தேர்தல் முடிந்த உடன், திரிணாமுல் காங்கிரஸ் அட்டை பெட்டை போல் சிதைந்து போகும்" என்றார்.

    • முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.
    • வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை?

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா தெற்கு தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அமித் ஷா, "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை வழியே ஊடுருவல் தடையின்றி தொடர்கிறது. முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார். அதன் மூலம் இங்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை பெறுவதை அவர் தடுக்கிறார்.

    வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஊடுருவலையும் ஊழலையும் நிறுத்த விரும்பினால், நீங்கள் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

    அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF), வங்கதேச - இந்திய எல்லையை கண்காணிக்கும் நிலையில் அவர் மேற்கு வங்காள மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது.
    • இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சிஏஏ மற்றும் என்ஆர்சி ரத்து செய்யப்படும். அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விரும்பவில்லை.

    அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சி 126 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

    • ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி விசாரணை நடத்துவதற்காக பா.ஜனதா 300 மத்திய குழுவை மேற்கு வங்காள மாநிலத்திற்கு அனுப்பியது.
    • ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

    ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொய்னாகுரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி விசாரணை நடத்துவதற்காக பா.ஜனதா 300 மத்திய குழுவை மேற்கு வங்காள மாநிலத்திற்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி என்ன ஆனது என்பது குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி தற்போது பதில் சொல்லியாக வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வேலைப்பார்த்த ஏழை மக்கள் இன்னும் சம்பளம் பெறவில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என பிரதமர் மோடி கூறுகிறார். அவர் முதலில கண்ணாடியைபார்க்க வேண்டும். அவரது கட்சி ஊழலால் நிறைந்துள்ளது.

    பா.ஜனதா பெங்கால் எதிர்ப்பு கட்சி. பா.ஜனதா என்ஆர்சி போர்வையில் பழங்குடியினர், தலித்கள் மற்றும் ஓபிசி-களை வெறியேற்ற திட்டமிட்டுள்ளது. என்ஆர்சி-ஐ நாங்கள் பெங்காலில் அனுமதிக்க மாட்டோம்.

    பெங்காலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் பா.ஜனதாவை எதிர்த்து வருகிறது. ஆனால், இரண்டு எதிர்க்கட்சிகள் அவற்றுடன் பணியாற்றி வருகிறது. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ளோம். ஆனால், நாட்டை காப்பாற்ற பெங்காலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள ககென் முர்மு மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
    • 'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்

    மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, தேர்தல் பரப்புரையின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

    மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது
    • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது

    சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை ஆகிய 4 மத்திய அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே தர்ணா நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் ஆகிய எம்.பி.க்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

    பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற தங்களது புகாரை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.  

    ×