search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார்.
    • ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களிலும் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு ஜூன் 4-ந்தேதி அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனி அணியாக களம் கண்டதால் வாக்குகள் பிரிந்து தி.மு.க.வுக்கே அது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்த அ.தி.மு.க.வின் கனவு பலிக்காமலேயே போய் விட்டது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து களம் கண்ட அ.தி.மு.க., பா.ம.க.வையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பாரதிய ஜனதா கூட்டணியில் போய் சேர்ந்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டுள்ள அவர் வெற்றி பெறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சியை தொடங்கிய டி.டி.வி. தினகரனும் பாரதிய ஜனதாவோடு கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இப்படி ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் இருவருமே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கைகோர்த்திருப்பது அந்த கட்சிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கக் கூடாது என்றே அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கட்சி மேலிடத்திடம் குறைபட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனையும் அரவணைத்துச் சென்றிருந்தால் நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணி வலுவானதாகவே மாறி இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெற்று பா.ம.க.வும் அந்த கூட்டணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு அந்த அணி கடும் போட்டியாக இருந்திருக்கும் என்றே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போதைய சூழலில் ஓட்டுகள் பிரிந்து தி.மு.க. வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகளும் தெரிவித்து உள்ளன.


    எனவே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சில அதிரடியான முடிவுகளை அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாகி இருப்பதாகவே கட்சியினர் பலர் கூறியுள்ளனர். குறிப்பாக ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மீண்டும் உருவாக்கினால் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கமாக எடுத்துக் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படாமலேயே இருக்கும் நிலையில் அவருடன் எப்படி கை கோர்த்து செயல்பட முடியும்? என்கிற கேள்விகளையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவினால் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
    • குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

    கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

    காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள்.

    அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன்.

    உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    • பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.

    ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.

    எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

    இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர். 

    • விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட பா.ம.க., விரும்புவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அதே சமயம் அந்த தொகுதியில் போட்டியிட, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வை அடுத்து பா.ஜ.க. பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று பலம் வாய்ந்த கூட்டணி உருவானது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.
    • எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.பி.வேலு மணி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்தி லிங்கத்தை சந்தித்து பேசி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த 12-ந் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல பலரும் திரண்டு சென்றார்கள். ஆனால் எஸ்.பி.வேலுமணி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வேலுமணி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அரசல் புரசலாக அ.தி.மு.க.வுக்குள் பேசப்பட்ட இந்த விவகாரம் தி.மு.க. அமைச்சரான ரகுபதி கொளுத்திப் போட்ட கருத்துக்கு பிறகு சூடு பிடித்தது.

    அவர் கூறும் போது, தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? வேலுமணியா? என்பது தெரிய வரும். பெரிய பிளவு ஏற்படும் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.

    சொன்னால் நம்புங்க..

    இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, சொன்னால் நம்புங்க நான் ஒரு போதும் அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த மாட்டேன் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.

    அதாவது எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல் செங்கோட்டையனும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார். ஆனால் என்னதான் நடக்குது பார்ப்போம் என்பது போல் தொண்டர்கள் பரிதாபமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    • இன்றைக்கு 2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார்.
    • அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படும் என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்து

    உள்ளார். மதுரையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.பி.உதயகுமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு 2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார்.

    இதை பொறுக்க முடியாமல் இதை எதிர்கொள்ள முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளி பேசி வருகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறி வரும் பைத்தியக்காரர்கள் போல பேசி வருகின்றனர்.

    எடப்பாடி யாரிடமும் பதவி கேட்கவில்லை. தொண்டர்கள்தான் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து பொதுக்குழு மூலம் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஆனால் தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்த பொழுது அ.தி.மு.க.வின் பாலை குடித்துவிட்டு, தற்போது தி.மு.க.வுக்கு சென்றவுடன் அங்கு அ.தி.மு.க.விற்கு எதிராக விஷப்பாலை கக்குவது மிகப்பெரும் பாவச்செயலாகும். அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நீதிமன்றத்தின் மூலம் கட்சியை, தலைமை கழகத்தை மீட்டெடுத்து, இன்றைக்கு 40 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எடப்பாடியார் கையெழுத்து இட்டுள்ளார். நிச்சயம் 40 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
    • வழக்கின் விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக உள்ள தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத நிதியை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார். 

    இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஆதாரங்களும் இல்லாமல் என் மீது அவதூறு பரப்பி உள்ளார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

    மன்னிப்பு கேட்காததால் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு தர்மபிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முதல் விசாரணை என்பதால் எடப்பாடி பழனிசாமி இன்று கோர்ட்டில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் ஐ.எஸ். இன்பதுரை ஆஜரானார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், காஞ்சிபுரம் தொகுதி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடி இருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூன்) 27-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக வக்கீல் இன்பதுரை அளித்த பேட்டி வருமாறு:-

    மத்திய சென்னை தொகுதியின் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    • ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
    • எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான கோவை ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்குள் எழுந்த அதிகார சண்டைகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு போராடி கட்சியை தன் வசப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.

    பெருவாரியான தொண்டர்களும் அவரது தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தனித்தனியாக செயல்பட்டாலும் அ.தி.மு.க.வை கைப்பற்ற சந்தர்ப்பங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை.

    இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடனான உறவை எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டார்.


    சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்ட ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் பா.ஜனதா வுடன் கை கோர்த்தார்கள். ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரனும் பா.ஜனதா ஆதரவுடன் போட்டியிட்டார்கள்.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா காலத்தைபோல் தலைமைக்கு பயப்படும் நிலையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை. கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்த தலைவர்களாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்க மணி போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளுக்கு உடன்படவில்லை.

    அதன்படி கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமியின் முடிவை முழு மனதாக அவர்கள் ஏற்கவில்லை. எனவே தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வில்லை என்ற புகார் எழுந்தது.

    எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான கோவை ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. அங்கு போட்டியிட்ட தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை தோற்கடிப்பதில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வரிந்து கட்டியது.

    ஆனால் பா.ஜனதாவை தோற்கடித்து தி.மு.க. வெற்றி பெறுவதை எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள் விரும்பவில்லை. எனவே தேர்தல் பணியில் தீவிரம் காட்டவில்லை. அண்ணாமலைக்கு ஆதரவாக வேலுமணி ஆதரவாளர்கள் வேலை பார்ப்பதாகவும் கூறப்பட்டது.


    இப்போது தேர்தல் முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் அடுத்தக் கட்ட அரசியல் நகர்வுகள் வேகம் பிடித்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கத்தை, எஸ்.பி.வேலு மணி ரகசியமாக சந்தித்து பேசி இருக்கிறார்.

    ஒரு காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல காரணமாக இருந்தது எஸ்.பி.வேலுமணிதான்.

    டெல்டா மாவட்டங்களில் தனக்கு தெரியாமல் கட்சி நிர்வாகிகளை எஸ்.பி.வேலுமணி மாற்றியதால்தான் வைத்திலிங்கம் கடுப்பானார். அதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தும் பலன் இல்லாததால்தான் வைத்திலிங்கம் வெளியேறினார்.

    இப்படி எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்போது சந்தித்தது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கூறும்போது, அன்றைய நிலைமை வேறு. இன்றைய நிலைமை வேறு என்றனர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மூத்த நிர்வாகிகளை வைத்திலிங்கம் மூலம் ஒன்று திரட்ட ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாகவும் அதன் பின்னணியில்தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    தேர்தல் முடிவு வந்ததற்கு பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் திட்டம் தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.

    அ.தி.மு.க.வுக்குள் நடக்கும் இந்த பனிப்போரை அமைச்சர் ரகுபதி சுட்டிக்காட்டினார். அவர் கூறும்போது, "தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை செங்கோட்டையன் தலைமையில் செல்லப் போகிறதா? வேலுமணி தலைமையில் செல்லப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மிகப்பெரிய பிளவு உருவாக வாய்ப்புகள் அதிகம் என்றார்.

    ஆனால் இந்த பிரச்சினை எதையும் கண்டு கொள்ளாதது போல் எடப்பாடி பழனிசாமி மவுனமாகவே இருக்கிறார்.

    இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    நடப்பது எல்லாமும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன் பின்னணியும் அவருக்கு புரியும். அவராக அவசரப்பட்டால் நிலைமை வேறுவிதமாக மாறும். எனவே அவர்களாகவே என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும். அவர்கள் வெளியேறினால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முதலே தொண்டர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    சேலம்:

    முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.


    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முதலே தொண்டர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சால்வை, பூங்கொத்து உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து இன்று காலை முதலே எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியில் அ.தி.மு.க.தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    தொண்டர்கள் கொண்டு வந்த கேக்குகளை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். அவருக்கு கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்து மகிழ்ந்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர்.


    எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் எம்.எல்.ஏ., டாக்டர் சி விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் சோமசுந்தரம், மாதவரம் மூர்த்தி, ரவி எம்.எல்.ஏ., சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூ.சி.கே.மோகன், ராணிபேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் சசிரேகா, ஆவடி குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் புரசை வி.எஸ்.பாபு, பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவராஜ், வர்த்தக அணி இணைச் செயலாளர் பன்னீர் செல்வம், மாணவரணி துணைச் செயலாளர் சல்மான் ஜாவித், திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் ஜாவித் அஹமத், அண்ணா தொழிற் சங்க பேரவை இணைச் செயலாளர் சூரிய மூர்த்தி, மாணவரணி துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் மணிமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர் செல்வம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வீரபாண்டியன், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், மாநகர போக்குவரத்து தெற்கு மண்டல அண்ணா தொழிற் சங்க செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், ஆறுமுகம் என்கிற சின்னையன், வக்கீல் சிம்லா முத்துசோழன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மகாபலிபுரம் சேர்மன் ராகவன் எடப்பாடி பழனிசாமி 70 வது பிறந்தநாளையொட்டி 70 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக் கொண்டுவந்தார். இதேபோல் மேச்சேரி கிழக்கு பேரவை செயலாளர் ராஜாவும் 70 கிலோவில் பிரம்மாண்ட கேக் கொண்டுவந்திருந்தார். இதே போல் மேச்சேரி பேரூர் செயலாளர் சி.ஜெ.குமார் 70 கிலோவில் பிரம்மாண்ட கேக்குள் கொண்டு வந்திருந்தனர். இந்த கேக்குகளை எடப்பாடி பழனிசாமி வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.

    • தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து நன்கு படிக்கவும்.
    • நன்கு படித்து 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • வெயில் அதிகமாக இருப்பதால் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • நீர் மோர் பந்தல்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தாலும் கூடுதலாக பல இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நீர்மோர் பந்தல்கள் திறக்க உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

    இந்த ஆண்டு 70-வது பிறந்த நாள் காணும் எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை வரை சென்னையில் இருந்த அவரை மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சந்தித்து முன் கூட்டியே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் சேலம் புறப்பட்டு சென்றார்.

    வருகிற 12-ந்தேதி பிறந்த நாளன்று அவர் சேலத்தில் இருக்கிறார். வெயில் அதிகமாக இருப்பதால் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அந்தந்த பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். கோவில்களில் இன்று முதல் சிறப்பு வழிபாடு செய்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    காலை சிற்றுண்டி வழங்குதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, நோட்டு புத்தகம் வழங்குதல், முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களை பாராட்டி கவுரவித்தல், குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்குதல், ஏழை, எளியோருக்கு பிரியாணி வழங்குதல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    நீர் மோர் பந்தல்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தாலும் கூடுதலாக பல இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நீர்மோர் பந்தல்கள் திறக்க உள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை 12-ந்தேதி கோலாகலமாக கொண்டாடுவதற்கு அ.தி.மு.க.வினர் இப்போதே தயாராகி விட்டனர்.

    ×