என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது.
    • எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.

    ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தவெக பெண் தொண்டர் ஒருவரிடம் பிரச்சார கூட்டம் குறித்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.

    அப்போது, தீவிர தவெக தொண்டரான அந்த பெண்," விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வெச்சிடுவேன்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் பேசிய அவர்,"ஈரோடு பிரச்சார கூட்டத்திற்கு விஜய்க்காக வந்தேன். நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டுருக்கேன். முதல் முறை அதிமுகவிற்கும், 2வது முறை சீமானுக்கும் போட்டேன். இந்த முறை கண்டிப்பாக என் ஓட்டு விஜயக்கு தான்.

    ஆட்சிக்கு வருபவர்களால் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது. இலவசம் இலவசம்-னு சொல்றாங்க ஆனா பஸ்-ல கூட ஏத்துறது இல்ல. தண்ணீர் வசதி, சாலை வசதி இல்ல.

    விஜய் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும். மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும். எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.

    என் வீட்டில் 9 பேர் இருக்காங்க. 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவாங்க. அப்படி போடலனா சோத்துல விஷம் தான்.

    விஜய் அண்ணா வெற்றி பெற்றால் முருகருக்கு மாலைபோட்டு வரர்தா வேண்டியிருக்கேன" என்றார்.

    • களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை என்று விஜய் தெரிவித்தார்.
    • அண்மைய காலமாக விஜயை சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். ஈரோடு கடப்பாரை பெரியார். தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார்" என்று புகழ்ந்து பேசினார்.

    மேலும் பேசிய விஜய், "எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் 2026 தேர்தலில், களத்தில் இருப்பவர்களைதான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை" என்று தெரிவித்தார்.

    காலத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம் மற்றும் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியது சீமானை விமர்சிக்கும் வையில் உள்ளது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் 'விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று அவர் பேசியிருந்தார்.

    பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன் என்று சீமான் பேசியதற்கு எதிர்வினையாக தான் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
    • புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு நடந்து முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அத்துடன் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மனுக்கள் பெற்று, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்

    அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்களை தயார்படுத்தும் வகையில் தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர் அ.தி.மு.க. ஆட்சி சாதனைகளையும் பட்டியலிட்டு வருகிறார்.

    தே.மு.தி.க. சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கோணத்தில் மாடுகள் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடலம்மா மாநாடு போன்றவற்றை நடத்தி இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் மாவட்டந்தோறும் பிரசார கூட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    இதற்கிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சட்டமன்ற தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரும் கடந்த அக்டோபர் 12-ந்தேதி தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் அவர், தனது பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவு செய்கிறார்.

    தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்தவும், அதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சாந்தமாக பதிலடி கொடுத்து வரும் அவர், தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.

    குறிப்பாக தென் தமிழகத்தை குறிவைத்து சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்தும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை அழைத்து வருவதன் மூலம் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தை பயன்படுத்த தயாராகி வரும் நயினார் நாகேந்திரன் ஏற்பாடுகளை தற்போதே தொடங்கிவிட்டார்.

    நேற்று டெல்லி சென்று திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறுகையில், எனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இருவரில் ஒருவர் வருவார் என்றும் தெரிவித்தார். ராமேசுவரத்தில் காசி தமிழ்ச்சங்கமம் விழா, ராமேசுவரம்-தாம்பரம் புதிய வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா, புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழா ஆகியவற்றில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது. தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே பள்ளத்தி வயலில் தனியாருக்கு சொந்தமான 59 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

    மேலும் தற்போது இந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அங்கு 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார், உளவுத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவும் ஆய்வு செய்தார். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் உள்ளிட்ட கருவிகளை வைத்தும், டிரோன்களை பறக்கவிட்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டது.

    அதேபோல் விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர்கள், பின்புலங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிபேடு தளம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி வருகை குறித்த தகவல் தமிழக பா.ஜ.க.வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது.
    • வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு முந்தைய விபரங்கள் பெறப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் திருப்பி வழங்கிய படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முடிந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை(19-ந்தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:-

    தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.

    மேலும் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 57 ஆயிரத்து 658 வாக்காளர்கள் இறந்தவர்கள், 10 ஆயிரத்து 719 வாக்காளர்கள் இரட்டைபதிவு, 1 லட்சத்து 46 ஆயிரத்து 621 வாக்காளர்கள் இடம் பெயர்ந்தவர்கள், 58 ஆயிரத்து 675 வாக்காளர்கள் கண்டறிய முடியாதவர்கள் மற்றும் மற்றவை 601 வாக்காளர்கள் என மொத்த 2 லட்சத்து 74 ஆயிரத்து 274 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளார்கள்.

    வாக்காளர்களின் மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றார்.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.
    • தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.

    சட்டசபை தேர்தல் வர உள்ளதால் மடிக்கணினி தர உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

    * மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

    * சில வாரங்களில் மாணவர்களுக்கு மடிக்கணினி தரப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வியின் அர்த்தம் அனைவருக்கும் தெரியும்.

    * திராவிட மாடல் அரசு மாணவர்களுக்கு நிச்சயமாக மடிக்கணினி வழங்கத்தான் போகிறது.

    * மாணவர்கள் பயன்பெறும் திட்டத்துக்கு எதிராக அவதூறை பரப்ப வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.

    * லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.

    * எடப்பாடி பழனிசாமி அல்ல அவர்களது டெல்லி ஓனர் நினைத்தாலும் மாணவர்களுக்கு லேப்டாப் தருவதை தடுக்க முடியாது.

    * Windows 11 OS உடன் உயர்தரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.

    * அதிவேக Processor மற்றும் அதிகநேரம் தாங்கும் பேட்டரியுடன் லேப்டாப் உள்ளது.

    * தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.

    * பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    * மடிக்கணினி திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மாணவர்களை ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
    • திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இந்நிலையில், ஈரோடு கூட்டத்தில் பெருந்திரளான மக்களிடம் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக

    இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
    • இந்த 125 மின்சார பஸ்களில் 45 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை.

    பூந்தமல்லி:

    டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார பஸ்களை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 626 மின்சார பஸ்கள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக, வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பஸ்களும், 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    இந்த 125 மின்சார பஸ்களில் 45 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை. மற்ற 80 பஸ்கள் சாதாரணமானவை ஆகும்.

    பூந்தமல்லி பணிமனையில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான கட்டமைப்பு, 25 சார்ஜிங் மையங்கள் மற்றும் பணிமனைகளில் விரிவாக்க பணிகள் ரூ.43.53 கோடி செலவில் முடிந்து உள்ளன. இந்த சீரமைக்கப்பட்ட பணிமனையும் திறக்கப்படுகிறது.

    • திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    • திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது.

    மனுதாரர்கள் தரப்பு, கோவில் தரப்பு, வக்பு வாரியம் தரப்பு வாதங்கள் முடிந்தநிலையில் இன்று அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

    அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் இதற்கு முன் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபம் ஏற்றும் தூண் தான் என்பதற்கு மனுதாரர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

    நில அளவை துறை ஆய்வு செய்ததில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் தமிழ்நாட்டில் பல தூண்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    1920-ல் தனிநீதிபதி ஆய்வுக்கு சென்றபோது திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூண் இருந்திருந்தால் உத்தரவில் கூறியிருப்பார்.

    மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தமிழர்கள் கலாச்சாரம் எனக்கூறி திருப்பரங்குன்றத்தில் அதே வழக்கத்தை கேட்பது ஏற்புடையதல்ல.

    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனிநீதிபதி உத்தரவிட முடியுமா? என்பது தான் எங்களது கேள்வி என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் தீபத்தூண் இல்லை என்பது தான் எங்கள் தரப்பு வாதம். தூணில் தீபம் ஏற்றுமாறு மனுதாரர் வைத்த கோரிக்கையை கோவில் நிர்வாக அதிகாரி சட்டப்படி தான் நிராகரித்துள்ளார்.

    சட்டப்படி திருப்பரங்குன்றம் வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் நடத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு அரசு தரப்பில் வாதம் நடைபெற்றது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரி அம்மன் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அலமாதி: கீழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம், கர்ல பாக்கம், தாமரைபாக்கம், கதவூர், வேலச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.

    செங்குன்றம்: சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரி அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • பள்ளி வேன் நீடூரில் இருந்து 31 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
    • விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிரி கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் பள்ளி வேன் நீடூரில் இருந்து 31 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.

    அப்போது மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே சி.பி.எஸ்.இ. பள்ளியின் வேன் வந்தபோது, பின்னால் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு தனியார் வேன் மோதியது.

    இந்த விபத்தில் சி.பி.எஸ்.சி. பள்ளி வேனில் இருந்த 27 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மாணவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவர்களுக்கு தலைமை டாக்டர் மருதவாணன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பின்னால் மற்றொரு வேனில் வந்த பள்ளி மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதையடுத்து தனியார் வேனை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் பிரபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. எனும் தீய சக்திக்கும், த.வெ.க. எனும் தூய சக்திக்கும் தான் போட்டியே என்றார் விஜய்.
    • எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.

    திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது:-

    எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.

    திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி..

    என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே.. தவெக ஒரு தூய சக்தி.

    தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.

    என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் என் மக்களின் இந்த சத்தத்தை முடக்க முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    ×