என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- பழனியாண்டி கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
- கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது
திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டமன்ற உறுப்பினரின் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம்.
கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் மு.கஸ்டலின், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா?
இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது. கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
- பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
- திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?
கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் கனிமக்கொள்ளையை படம் பிடித்த நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மக்கள் பிரதிநிதி ஒருவரே ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பிரதிநிதியான செய்தியாளர்களை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கனிமக்கொள்ளை நடப்பதை அம்பலப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை. அந்தக் கடமையை செய்த செய்தியாளர்களை அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளை பிடுங்கி, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமான முறையில் தாக்குகிறார். தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கான காணொலி ஆதாரமும் வெளியாகியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?
ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை, கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்? திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா?
நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியையும், அவரது அடியாள்களையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
- எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
- பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
- தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சண்முகத்திடம் ரூ.45.60 லட்சத்தை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் எதிர்நோக்கியுள்ள எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவுமில்லை. வேலையின்மை இந்தியாவின் தலையாய பிரச்சனையாக உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபரிவிதமான வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்கள் முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கா அத்துமீறல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை, தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான எந்த ஆலோசனையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
125 நாட்கள் வேலை உயர்வு திட்டத்தை புதிதாக அமல்படுத்திவிட்டு அதற்காக ரூபாய் 95 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அந்த திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க முடியும். 125 நாட்கள் வேலை திட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக வரவேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.
தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள நிதியில் இருந்து 30 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது. கிராமப்புற ஏழை மக்களை ஏமாற்றுவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.
பட்ஜெட்டில் மதுரை கோவை மெட்ரோ ரெயில் திட்டம் பற்றி அறிவிப்பு இல்லை. ஓசூரில் விமான நிலையம் அமைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு புல்லட் ரெயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விட்ட புல்லட் ரெயில் விபத்துக்குள்ளாகி நிற்கிறது. தமிழகத்திற்கு என அறிவிக்கப்பட்ட ஒரே அறிவிப்பு என்பது புல்லட் ரெயில் திட்டம் மட்டுமே. அதை அறிவித்தபடி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஓசூர் விமான நிலையம் மெட்ரோ ரெயில் திட்டங்கள் போன்றவை ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. தமிழ்நாடு அரசை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநில அரசாங்கங்களை பழி வாங்குவது என்ற நோக்கத்தில் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விரோதமான அணுகுமுறையையும், பழிவாங்கும் போக்கையும் கடைபிடிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி மறுப்பதும் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதும்.
தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது. மற்ற கட்சிகளை இணைப்பது குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிடாது.
இன்று இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி வைப்புத்தொகை வைத்துள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். இந்த தொகை எங்கிருந்து அவர்களுக்கு வந்தது. கம்யூனிஸ்டுகளுடன் கடுகளவு கூட ஒப்பிட அருகதை இல்லாத கட்சி பா.ஜ.க.
இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
- டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27-ந் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28-ந் தேதி அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, "யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனது பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்" என குறிப்பிட்டு வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
- வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகிய மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டம் வாரியாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில் கட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் மல்லை சத்யா தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தாலும் கூட அதில் சேர்ந்து களப்பணி ஆற்றவே அவர் விரும்புவதாக தெரிகிறது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார். எழும்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திராவிட வெற்றிக்கழகம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான முடிவை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- மதம் மற்றும் தேசப்பற்று என்று காரணம் காட்டி தங்கள் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள தவிக்கிறார்கள்.
- எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் "தேசப்பற்று". பலநூறு ஆண்டுகள் கல்வி, வேலைவாய்ப்பு முதல் சமூக, சமுதாய கட்டமைப்பில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சனாதான கும்பல் வர்ணாசிரமம் முதல் குல கல்வி வரை எம் அப்பாவி மக்களை உண்டு கொழுத்து கிடந்தார்கள்.
அவர்களுக்கு சுயமரியாதை, சமூக நீதி விழிப்புணர்வு ஏற்பட்டதும் மதம் மற்றும் தேசப்பற்று என்று காரணம் காட்டி தங்கள் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள தவிக்கிறார்கள். எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள். அதைத்தான் இப்போது பா.ஜ.க. செய்கிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பஸ்சை அந்தியூர் புதுப்பாளையம் பகுதி சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார்.
- அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 9.10 மணியளவில் மேட்டூர் நோக்கி அரசு பஸ் கிளம்பியது. பஸ்சை அந்தியூர் புதுப்பாளையம் பகுதி சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார். சக்திவேல் நடத்துநராக இருந்தார். பஸ் 35 பயணிகளுடன் கிளம்பியது.
இந்நிலையில் அண்ணா மடுவு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் ராஜாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக இதற்கு மேல் பஸ்சை இயக்க முடியாது என உணர்ந்த ராஜா பஸ்சை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தினார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி அதிகமானதால் அலறினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அந்த தனியார் மருத்துவமனையில் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நல்ல வேலையாக நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் ராஜா பஸ்சை சாமர்த்தியமாக ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்ஸில் இருந்த 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அந்தியூர் பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து வேறு பஸ் வரவழைக்க பயணிகள் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- சேலம்-கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
- மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று இரவு மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் கூறும் போது, சேலத்தில் ஏற்கனவே விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் சில காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த முடியாமல் போனது. இந்த முறை வருகிற (13-ந்தேதி) மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளி இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேச உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறோம் என்றார். சேலம்-கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
இதற்கிடையே சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மேலும் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
புறநகர் பகுதியில் மகுடஞ்சாவடி பகுதியிலும், மாநகர் பகுதியில் சீலநாயக்கன்பட்டி பகுதியிலும் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எந்த இடத்திற்கு அனுமதி கொடுக்கப்படுகிறதோ, அந்த இடத்தில் பணிகளை தொடங்க நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றுகிறார்கள்.
- இது மாற்றத்திற்கான இயக்கம் என மார்தட்டிக் கொண்டு என் வழி, தனி வழி என சீமான் செயல்பட்டு வருகிறார்.
எப்போதும் நாங்கள் தனிக்காட்டு ராஜா என்பது போல 2026 சட்டமன்ற தேர்தல் களத்தையும் தனித்து சந்திப்போம் என அறைகூவல் விடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தலுக்கான வெற்றிக்கு தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற மாநில அளவிலான மாநாட்டினை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாநாடு வருகிற பிப்ரவரி 21-ந்தேதி நடைபெறுகிறது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்படுகிறது.
இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றுகிறார்கள். மேலும் இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்கிறார். 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.
மாநாடு பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. தற்போது விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழக தாக்கத்தால் அவரது வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படும் என பலரும் ஆருடம் தெரிவித்து வரும் சூழலில் தமக்கான வாக்கு வங்கியில் எந்த சேதாரமும் ஏற்படுத்த விடமாட்டோம். இது மாற்றத்திற்கான இயக்கம் என மார்தட்டிக் கொண்டு என் வழி, தனி வழி என சீமான் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் மதுரையில் மாடுகளின் மாநாடு, சென்னையில் மரங்களின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு, கல்லணை திருக்காட்டுப் பள்ளியில் நீர் மாநாடு போன்றவற்றை நடத்தி அரசியல் அரங்கை அதிரடித்தார். இது போன்ற மாநாடுகளை சிலர் கேலி செய்தாலும் இது அவருடைய வாக்கு வங்கியை பல தளத்திலும் விரிவாக்கும் முயற்சி என்பதை விவரம் அறிந்தவர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் திருச்சி ஆலம்பட்டி புதூர் மாநாட்டுக்கான கால் கோள்விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
- சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலை தொங்கி காட்சியளித்து கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில்,
* 2 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி குறித்து பலரும் கிண்டல் செய்தனர்.
* தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
* தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை வகிக்கும்.
* நாட்டை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அதிமுகவும் தேசிய அளவிலான கட்சி.
* கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் விஜய்.
* நாட்டில் என்ன நடக்கிறது என்றே த.வெ.க. தலைவர் விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியும்.
* ஒரு கட்சியின் தலைவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திருக்க வேண்டும்.
* அ.தி.மு.க. ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும்?
* விஜய் மக்களையும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை.
* விஜய் நேரில் செய்தியாளர்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம் அவருக்கு தெரியும்.
* ஊழல் வழக்கில் சிறை சென்ற செங்கோட்டையனை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து விஜய் பேசுகிறார்.
* சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை.
* சசிகலா விவகாரம் குறித்து ஏற்கனவே பலமுறை தெளிவுப்படுத்தி விட்டேன்.
* ஜெயலலிதாவின் ஆன்மா துரத்தியதால் தான் மனோஜ் பாண்டியன் தி.மு.க.விற்கு சென்று விட்டார்.
* எங்கள் மீது குறை கூற ஒன்றும் இல்லை, எந்த தவறும் செய்யாத அதிமுக மீது குறைகளை முதல்வர் தேடிக்கொண்டிருக்கிறார்.
* பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் என மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
- ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
- ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
* முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
* ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
* மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.






