என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் இந்திய விற்பனை விவரங்ளை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. கூகுள் மற்றும் ஜியோ கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் ரூ. 6,499 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரூ. 1,999 மற்றும் 18/24 மாதங்கள் மாத தவணை முறை வசதியுடன் கிடைக்கிறது.
மாத தவணை ரூ. 300 இல் இருந்து துவங்குகிறது. இத்துடன் பிராசஸிங் கட்டணம் ரூ. 501 வசூலிக்கப்படுகிறது. மாத தவணை இன்றி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனினை ரூ.6,499 விலையில் வாங்கிட முடியும். ஜியோபோன் நெக்ஸ்ட் நவம்பர் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோமார்ட் டிஜிட்டல் நெட்வொர்க்கின் 30 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோ ஸ்டோர் ஆப்லைன் மையங்களிலும் கிடைக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர்
- அட்ரினோ 308 ஜி.பி.யு.
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) மற்றும் பிரகதி ஓ.எஸ்.
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 8 எம்பி ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாம்சங் தனது கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 29,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பு ஆப்லைன் சந்தை மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த விலை குறைப்பு அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 24,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதே விலை சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாற்றப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிளேசிங் பிளாக் மற்றும் ஐசி புளூ நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நிகான் நிறுவனத்தின் இசட்9 மிரர்லெஸ் கேமரா இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
நிகான் இசட்9 புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிளாக்ஷிப் கேமரா மாடல் ஆகும். இதில் 45.7 எம்.பி. சி-மாஸ் சென்சார், 3.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட மாணிட்டர், எலெக்டிரானிக் வியூ-பைண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
நிகான் இசட்9 மாடல் இன்டர்-சேன்ஜ் செய்யக்கூடிய லென்ஸ்களுடன் கிடைக்கிறது. இந்த கேமரா 8K 30 பிக்சல் வீடியோ கேப்ச்சர் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு தொடர்ச்சியாக 125 நிமிடங்களுக்கு வீடியோ பதிவு செய்ய முடியும். புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் போது நிகான் இசட்9 மொத்தத்தில் ஒன்பது விதமான பொருள்களை அடையாளம் கானும் என நிகான் தெரிவித்துள்ளது.

மெக்கானிக்கல் ஷட்டர் இன்றி நிகான் வெளியிட்டு இருக்கும் முதல் புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா இது ஆகும். இந்திய சந்தையில் புதிய நிகான் இசட்9 விலை ரூ. 4,75,995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் மாதத்தில் இந்த கேமரா நிகான் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும்.
ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1.75 எம்எம் அளவு மெல்லிய பெசல்கள் உள்ளன.
இதன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளேவில் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மீடியாடெக் டிமென்சிட்டி 920 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் பெற்று இருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், லிக்விட் வி.சி. கூலிங் உள்ளது.
புதிய நோட் 11 ப்ரோ சீரிசில் உலகின் முதல் ஹாலோகிராபிக் சஸ்பென்ஷன் உற்பத்தி முறை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், என்.எப்.சி. உள்ளது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெலிமேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ மாடல் 5160 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டிருக்கிறது.
விலை விவரங்கள்
ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் மிஸ்டீரியஸ் பிளாக், பாரஸ்ட் கிரீன், டைம்லெஸ் பர்பில் மற்றும் மில்கி வே புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 250 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 18,710, 8 ஜிபி + 128 ஜிபி விலை 296 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22,245 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி விலை 328 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 24,572 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் மிஸ்டீரியஸ் பிளாக், பாரஸ்ட் கிரீன் மற்றும் டைம்லெஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 296 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 22,245, 8 ஜிபி + 128 ஜிபி விலை 328 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24,572, 8 ஜிபி + 256 ஜிபி 359 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,915 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வீடியோ கால் செய்யும் போது சுந்தர் பிச்சை செய்த தவறை சுட்டிக்காட்டி, ட்வீட் ஒன்றை அவரே பதிவு செய்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு பெருந்தொற்று ஆரம்பித்தது முதல் நண்பர்கள், குடும்பத்தாருடன் இணைப்பில் இருக்க வீடியோ கால் மட்டுமே ஒற்றை தீர்வாக மாறி போனது. வீடியோ கால் சேவைக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஜூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கூகுள் மீட் மற்றும் பல்வேறு இதர செயலிகள் அசுர வளர்ச்சி பெற்றன.
வீடியோ காலிங் சேவைகளை அதிகம் சார்ந்து இருக்கும் சூழலில் பலர் இவற்றில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களில் அவ்வப்போது சிக்குவதும் வாடிக்கையாகி இருக்கிறது. இதுபோன்ற சிக்கலில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் சிக்கியிருக்கிறார்.

சமீபத்தில் கெர்மிட் தி பிராக் உடன் நடைபெற்ற நேர்காணலில் சுந்தர் பிச்சை பேசும் போது அன்மியூட் செய்ய மறந்துவிட்டார். பின் அதை கவனித்த சுந்தர் சிரித்தப்படி நேர்காணலை தொடர்ந்தார். இந்த சம்பவத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த சுந்தர் பிச்சை, அனைவரிடமும் அன்மியூட் செய்ய மறக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
போட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.69 இன்ச் 240x280 பிக்சல் சதுரங்க வடிவம் கொண்ட எல்.சி.டி. 2.5டி வளைந்த ஸ்கிரீன், 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் பேஸ்கள் உள்ளன.
மற்ற வாட்ச் மாடல்களை போன்றே புதிய போட் வெர்டெக்ஸ் மாடலிலும் மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல்கள், ஐ.பி.67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங், 7 ஆக்டிவ் ஸ்போர்ட் மோட்களுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

போட் வெர்டெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பேட்டரி ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. போட் வெர்டெக்ஸ் டீப் புளூ, ஆக்டிவ் பிளாக், ரேஜிங் ரெட் மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2499 அறிமுக விலையில் ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் கிடைக்கிறது.
லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக லாவா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட லாவா அக்னி 5ஜி நவம்பர் 9 ஆம் தேதி அரிமுகமாகிறது.
புதிய லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று சென்சார்கள், முன்புறம் ஒற்றை செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 4 ஜிபி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. புதிய லாவா அக்னி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறம் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்படுகிறது.
போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் புதிய போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது போக்கோ எம்3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கிறது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரில் அதன் அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி போக்கோ ஸ்மார்ட்போன் 21091116ஏசி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
The beloved M-series is back for one last time in 2021!
— POCO (@POCOGlobal) October 28, 2021
Introducing #POCOM4Pro 5G!
Time to #PowerUpYourFun!
Stay tuned on November 9th at 20:00 GMT+8 for the last POCO launch of the year! pic.twitter.com/kopKxTwFqY
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முந்தைய போக்கோ எம்3 ப்ரோ மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடலின் விலையும் முந்தைய மாடலை போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை போக்கோ எம்4 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 5ஜி கனெக்டிவிட்டி, 4 ஜிபி+64 ஜிபி மற்றும் 6 ஜிபி+128 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புது லேப்டாப் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கல்வி துறைக்கென பிரத்யேகமாக குறைந்த விலை லேப்டாப் மாடலை உருவாக்கி வருகிறது. இந்த லேப்டாப் டென்ஜின் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய மைக்ரோசாப்ட் லேப்டாப் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் டிஸ்ப்ளே, இன்டெல் செலரான் என்4120 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு யு.எஸ்.பி. ஏ போர்ட், ஒரு யு.எஸ்.பி. சி போர்ட், ஹெட்போன் ஜாக், பேரெல் ரக ஏ.சி. போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய டென்ஜின் லேப்டாப் சர்பேஸ் பிராண்டிங்கில் லேப்டாப் எஸ்.இ. பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதில் எஸ்.இ. என்பது ஸ்டூடண்ட் எடிஷன் அல்லது ஸ்கூல் எடிஷன் என்ற விரிவாக்கம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
புதிய கேல்கஸி எம்33 5ஜி குறித்து சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்.எம். எம்336பி எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2022 ஆண்டில் தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இந்த மாடலின் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மாகவே உள்ளது. முந்தைய கேலக்ஸி எம்32 5ஜி மாடல் சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். அந்த வகையில் புதிய கேலக்ஸி எம்33 5ஜி மாடல் கேலக்ஸி ஏ33 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்டு மாடலாக இருக்கும் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 70 லட்சத்திற்கும் அதிக ரெட்மி மற்றும் சியோமி பிராண்டு ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. 2018 முதல் சியோமி இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
உயர் ரக ஸ்மார்ட் டிவி-க்கள் பிரிவில் அதிக டிவிக்களை விற்பனை செய்யும் ஸ்மார்ட் டிவி பிராண்டாக சியோமி இருக்கிறது. 2018 முதல் 2021 வரை ஸ்மார்ட் டிவி விபாபாரம் இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. 'இந்தியாவில் ஸ்மார்ட் டிவி பயன்பாடு அதிகரிக்க நாங்கள் காரணமாக இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறோம்,' என சியோமி தெரிவித்து இருக்கிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 50 இன்ச், எம்.ஐ. டிவி 4ஏ 32 இன்ச், எம்.ஐ. டிவி 5எக்ஸ் 43 இன்ச் உள்ளிட்ட மாடல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக சியோமி தெரிவித்து இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீட்டு விவரங்களை அறிவித்தார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவித்தார். இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கிறது.
ஆண்டு வருவாய் கூட்டத்தில் இதுபற்றி பேசிய சுந்தர் பிச்சை, ஜியோபோன் நெக்ஸ்ட் ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய மக்களுக்கான சாதனமாக இருக்கும் என தெரிவித்தார். பீச்சர் போன் பயனர்களை பெருமளவு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வைக்க ஜியோபோன் நெக்ஸ்ட் பாலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சிக்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும். சந்தையில் மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் உருவாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலுக்கான புது டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு சார்ந்து உருவாகி இருக்கும் பிரகதி ஓ.எஸ். கொண்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் பிராசஸர், வாய்ஸ் அசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.






