என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
- அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றி தெரியவந்துள்ளது.
உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வதில் அதிவேகமாக முடிவெடுக்கின்றனர். செயலிகள் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை பொருத்தும், பயனர் தேவைகளை எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதை பொருத்தும் செயலி ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளப்படும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பயனர்கள் எந்த அளவுக்கு செயலிகளை இன்ஸ்டால் மற்றும் அன்-இன்ஸ்டால் செய்கின்றனர் என்ற வழக்கம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும், ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கையில் 92.7 சதவீதம் ஆகும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர். தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள உலகில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகளவில் சுமார் 240 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஸ்னாப்சாட் தளத்தை பயன்படுத்துவோரில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்சாட் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடியுள்ளனர். இது இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும் போது குறைவு ஆகும்.
- இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
- மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.
சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.
அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
"நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
- இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வி நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோர் எவ்வித கூடுதல் கட்டணம் மற்றும் சந்தா செலுத்தாமல் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
ஒரு வருடத்திற்கான ஒ.டி.டி. பலன்கள் மட்டுமின்றி இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இதே போன்ற வருடாந்திர பலன்களை கொண்ட சலுகையை வழங்கி வருகின்றன.

புதிய சலுகை குறித்து வி வலைதளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில், ரூ. 3 ஆயிரத்து 199 விலை கொண்ட ரிசார்ஜ் சலுகையில் மொத்தம் 730 ஜி.பி. டேட்டா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
இதுதவிர புதிய சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வார காலத்தில் பயன்படுத்தி முடிக்காத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
- ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.
- வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் வி-யின் ஒ.டி.டி. பலன்களை வழங்கும் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
சத்தமின்றி அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையின் விலை ரூ. 202 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது வி வழங்கி வரும் வழக்கமான சலுகைகள் போன்றில்லாமல் ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.

கோப்புப்படம்
ஒ.டி.டி. பலன்களை வழங்கும் வி சலுகையுடன் வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது. இத்துடன் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைகளை வழங்குகிறது. இதில் வாய்ஸ் காலிங், எஸ்.எம்.எஸ். அல்லது டேட்டா போன்ற எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகை ஒரு மாத காலத்திற்கு வேலிடிட்டி கொண்டுள்ளது.
வி. ரூ. 202 சலுகையுடன் எந்தெந்த ஒ.டி.டி. பலன்கள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதில் சோனி லிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஹங்காமா மற்றும் பல்வேறு ஒ.டி.டி. பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. இந்த சலுகை வி செயலி மற்றும் வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
- ஆப்பிள் வாட்ச்களை இறக்குமதி செய்ய சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை.
- விற்பனையை மீண்டும் தொடங்கும் பணிகளில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ இடையே சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் (ஐ.டி.சி.) நடைபெற்று வந்த காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அமெரிக்க சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களால் வாங்க முடியாது. அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் இரு சாதனங்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 9டு5மேக் வெளியிட்டுள்ள தகவல்களில், பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பாக மசிமோ நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமைகளை ஆப்பிள் மீறியது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மசிமோ காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் விற்பனையை மீண்டும் தொடர்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிசம்பர் 25-ம் தேதிக்குள் இறுதி முடிவை எடுக்க இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆப்பிள் மற்றும் மசிமோ இடையே காப்புரிமை சார்ந்த பிரச்சினை கடந்த 2020 ஆண்டு முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- பயனர்களுக்கு 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது.
- மூன்று பிரீபெயிட் சலுகைகளை ஜியோ அறிவித்தது.
ஜியோ நிறுவனம் புதிய ஜியோடிவி பிரீமியம் சந்தாவை இந்திய சந்தையில் அறிவித்து இருக்கிறது. இந்த ஒற்றை சலுகையில் பயனர்களுக்கு அதிகபட்சமாக 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் மூன்று பிரீபெயிட் சலுகைகளையும் ஜியோ அறிவித்து இருக்கிறது.
புதிய சலுகைகள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 398 என்று துவங்குகிறது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மட்டுமின்றி பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5 மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகள் இன்று (டிசம்பர் 15) முதல் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளுடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய சலுகைகளின் விலை ரூ. 398, ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். பலன்கள் மற்றும் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.
ரூ. 398 சலுகையுடன் 12 ஒ.டி.டி. சந்தாக்களும், ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 சலுகைகளுடன் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகிறது. ஒரு வருட ரிசார்ஜ் சலுகையுடன் ஜியோ எளிய மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. மூன்று பிரீபெயிட் ரிசார்ஜ்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோடிவி பிரீமியம் சந்தா ஜியோ சிம் பயனர்களுக்கானது ஆகும். இத்துடன் ரூ. 148 விலையில் டேட்டா ஆட் ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. டேட்டா மற்றும் 12 ஒ.டி.டி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை 28 நாட்கள் ஆகும். ஜியோடிவி பிரீமியம் சலுகைகள் நாளை (டிசம்பர் 16) முதல் வழங்கப்படுகிறது.
- சாம்சங் சாதனங்களில் குறைபாடு ஆபத்தை விளைவிக்கும்.
- பல்வேறு மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மத்திய அரசின் கம்ப்யுட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-In எச்சரிக்கை குறிப்பு CIVIN-2023-0360-இல் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ். கொண்ட சாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த குறைபாடுகள் ஹேக்கர்களுக்கு பயனர்களின் மிகமுக்கிய தகவல்களை அபகரிக்கும் வசதியை வழங்க வாய்ப்பளிக்கும் என்று CERT-In ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். சாம்சங் சாதனங்களில் இந்த குறைபாடுகள் பல வகைகளில் ஆபத்தை விளைவிக்கும் என்று CERT-In அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இவை ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ். கொண்டிருக்கும் சாம்சங் சாதனங்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ், கேலக்ஸி ஃப்ளிப் 5, கேலக்ஸி ஃபோல்டு 5 மற்றும் பல்வேறு மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
செக்யுரிட்டி அப்டேட்கள்:
சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் செக்யுரிட்டி அப்டேட்களை பயனர்கள் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சாதனத்தில் அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் -- டவுன்லோட் அன்ட் இன்ஸ்டால் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

எச்சரிக்கை அவசியம்:
அப்டேட் இன்ஸ்டால் செய்யும் வரை, பயனர்கள் பாதிக்கப்பட்ட சாதனங்களில் முன்பின் தெரியாத செயலிகளை இயக்கும் போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சாதனத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகள் அனைத்தையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட், இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இணைய முகவரி:
அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்களை க்ளிக் செய்ய வேண்டாம். இந்த இணைய முகவரிகள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடும் வலைதளத்திற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
- பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு முழுக்க வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை வழங்குகிறது.
- அவ்வப்போது சலுகை பலன்களை மாற்றுவதை பி.எஸ்.என்.எல். வழக்கமாக கொண்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கி வரும் ஒருவருட சலுகையில் வேலிடிட்டியை மாற்றியுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலம், விசேஷ நாட்களை ஒட்டி பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளில் வேலிடிட்டி நீட்டிப்பதை அவ்வப்போது செய்து வருகிறது.
ரூ. 2 ஆயிரத்து 999 பி.எஸ்.என்.எல். ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினசரி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 40Kb-யாக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையின் வேலிடிட்டி முன்னதாக 365 நாட்களாக இருந்தது.

அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் ரிசார்ஜ் வேலிடிட்டி 365 நாட்களுடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மார்ச் 1, 2024 வரை வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். செல்ஃப் கேர் செயலியில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் இதர பலன்களும் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்களில் வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் ஆடியோ சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள்.
- ஒன் கார்டு பயனர்கள் கூடுதல் பலன்களை பெறலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனினை இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது இந்திய பயனர்களுக்காக சிறப்பு கம்யூனிட்டி சேல் அறிவித்து இருக்கிறது.
இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் 10 ப்ரோ, ஒன்பிளஸ் ஆடியோ சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒன்பிளஸ் வலைதளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு கம்யுனிட்டி சேல், டிசம்பர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஒன் கார்டு பயனர்கள் கூடுதல் பலன்களை பெற முடியும்.

சலுகை விவரங்கள்:
ஒன்பிளஸ் பேட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 35 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு அல்லது ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த மாடலின் விலை ரூ. 30 ஆயிரத்து 499 என மாறிவிடும்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடலுக்கும் குறிப்பிடத்தக்க சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு மற்றும் ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 66 ஆயிரத்து 999 விலை கொண்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ தற்போது ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு அல்லது ஒன் கார்டு பயனர்கள் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை ரூ. 3 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கிட முடியும். அதன்படி இந்த இயர்பட்ஸ் ரூ. 8 ஆயிரத்து 999-க்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 சீரிஸ் மற்றும் புல்லட் வயர்லெஸ் சீரிஸ் மாடல்களுக்கும் இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 2 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 1,499 என மாறி இருக்கிறது.
- இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு.
- புதிய ஆலையில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் கட்டமைக்க டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், டாடா குழுமம் அதற்கான பணிகளை துரிதப்படுத்தும் என தெரிகிறது.
இதற்காக தமிழ்நாட்டில் டாடா குழுமம் அமைக்கும் உற்பத்தி ஆலையில் கிட்டத்தட்ட 20 அசெம்ப்லி லைன்கள் இருக்கும் என்றும், இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த ஆலையில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டாடா குழுமத்துடன் இணைந்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆப்பிள் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவை தவிர்த்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த நினைக்கும் ஆப்பிள் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், டாடா குழுமம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரன் ஆலையை கைப்பற்றி இருக்கிறது.
அடுத்த இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே டாடா குழுமம் ஐபோன் உற்பத்தி பணிகளை விரிவுப்படுத்தும் வகையில், புதிய ஆலையை கட்டமைத்து வருகிறது.
- ரெட்மி பேட் மாடலில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் ரெட்மி பேட் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் டேப்லெட் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ரெட்மி பிராண்டின் முதல் டேப்லெட் என்ற பெருமையுடன் ரெட்மி பேட் அறிமுகம் செய்யப்பட்டது.
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுகமாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், ரெட்மி பேட் இந்திய விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய விலை விவரங்கள்:
ரெட்மி பேட் (3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 13 ஆயிரத்து 999
ரெட்மி பேட் (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 14 ஆயிரத்து 999
ரெட்மி பேட் (6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 16 ஆயிரத்து 999
இதன் மூலம் ரெட்மி பேட் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என துவங்கியது. இதன் 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம் மாடல்களின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி பேட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதோ அல்லது மாத தவணை முறைகளை பயன்படுத்தும் போதோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்டிற்கு மட்டும் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
- வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் அம்சம் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுகிறது.
- வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஒரு முறை மட்டுமே பார்க்க செய்யும் "வியூ ஒன்ஸ்" எனும் அம்சம் கடந்த 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த அம்சம் செயலியின் வாய்ஸ் மெசேஜஸ் ஆப்ஷனிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதியை செயல்படுத்தினால், பயனர்கள் வாய்ஸ் மெசேஜ்களை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும். அதன் பிறகு, வாய்ஸ் மெசேஜ் சாட்-இல் இருந்து காணாமல் போகிடும்.

வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி?
சாட் அல்லது க்ரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
இனி மேல்புறமாக ஸ்வைப் செய்து ரெக்கார்டிங்-ஐ க்ளிக் செய்ய வேண்டும்
ரெக்கார்டு ஆப்ஷனை அழுத்திப்பிடித்து ரெக்கார்டு செய்ய வேண்டும்
இனி 1 ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
1 ஐகான் பச்சை நிறத்திற்கு மாறியதும் அது வியூ ஒன்ஸ் மோடில் இருப்பதாக அர்த்தம்
இனி குறுந்தகவலை அனுப்ப செய்யும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
வியூ ஒன்ஸ் ஆப்ஷனில் அனுப்பப்பட்ட குறுந்தகவல், மீடியா அல்லது வாய்ஸ் மெசேஜ்களில் நீங்கள் அவற்றை பார்த்துவிட்டதை குறிக்கும் ரிசீப்ட் காணப்படும். இவ்வாறு காண்பிக்கப்பட்டதும், அந்த தகவல்களை மீண்டும் பார்க்க முடியாது.
இந்த மெசேஜ்கள் எதுவும் சேமிக்கப்படாது. வாட்ஸ்அப் செயலியில் மற்ற மெசேஜ்களை போன்றே வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அம்சம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.






