என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    சியோமி எம்ஐ 10ஐ இந்திய வெளியீடு ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை சியோமி நிறுவனத்தின் இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்து இருக்கிறார். இது இந்தியாவுக்கென உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என அவர் மேலும்  தெரிவித்து இருக்கிறார்.

    புதிய சியோமி ஸ்மார்ட்போன் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் இது அமேசான் மற்றும் எம்ஐ ஸ்டோர் தளங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

     சியோமி எம்ஐ 10ஐ

    சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
    - 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4820mAh பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்01 மற்றும் கேலக்ஸி எம்01எஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் இயர்போன் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. இரு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் வயர்லெஸ் இயர்போன் விலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி எம்01 விலை ரூ. 500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 7499 என்றும் கேலக்ஸி எம்01எஸ் விலை ரூ. 1499 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 8999 என்றும் மாறி இருக்கிறது. இரு மாடல்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் மாற்றப்பட்டு விட்டது.
     கேலக்ஸி பட்ஸ் லைவ் இதேபோன்று கேலக்ஸி பட்ஸ் பிளஸ் ரூ. 8,990 என்றும் விலை ரூ. 11,990 என மாறி இருக்கிறது. இரு இயர்போன்களின் விலையும் முறையே ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் புது விலை ஆப்லைன் சந்தையில் மாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது. இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 17,999 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய வை20ஏ ஸ்மார்ட்போன் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    விவோ நிறுவனத்தின் வை20ஏ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 436 பிராசஸர், அட்ரினோ 505 ஜிபியு, 3 டிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 எஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     விவோ வை20ஏ

    இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய விவோ வை20ஏ ஸ்மார்ட்போன் நெபுளா புளூ மற்றும் டான் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் விவோ வை20ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சில்லறை விற்பனை மையங்கள், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் இதர ஆன்லைன் தளங்களில் ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சகஜமாகி வருகின்றன. தற்சமயம் பெரும்பாலான சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கின்றன. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 ஸ்மார்ட்போன் மாடல்களுடன் சற்றே குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் என அழைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் 4ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 4ஜி எல்டிஇ மட்டும் வழங்கப்பட்டால் இதன் விலை கணிசமாக குறையும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனின் ஆடம்பர எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் ரஷ்யா பிராண்டு கேவியர் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இது சுத்தமான தங்கத்தால் உருவான ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. 

    சர்வதேச சந்தையில் இந்த ஹெட்போன் விலை 1,08,000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஹெட்போன் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உருவாக்கப்பட்டு இருப்பதாக கேவியர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     கேவியர் ஏர்பாட்ஸ் மேக்ஸ்

    இந்த ஹெட்போனின் இயர்கப்கள் சுத்தமான தங்கத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் உருவாக்கும் ஹெட்போனில் இயர்கப்கள் அலுமினியம் கொண்டு உருவாக்கப்படுகின்றன. மேலும் மெஷ் ஹெட்பேண்ட் பகுதி மிகவும் அரிய லெதர் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கேவியர் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் வைட் அல்லது பிளாக் ஹெட்பேண்ட் நிறத்தில் கிடைக்கிறது. எனினும், இயர்கப்கள் இரு வேரியண்ட்களிலும் தங்க நிறம் கொண்டிருக்கும். முன்னதாக ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் இந்திய சந்தையில் ரூ. 59,900 எனும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்திய சந்தையில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மாரட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ. 21,999 விலையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

    அறிமுகமானது முதல் பலமுறை கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தற்சமயம் இதன் விலை ரூ. 17,999 என மாறி இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆன்லைன் மட்டுமின்றி விலை குறைப்பு விற்பனை மையங்கள், சாம்சங் ஒபேரா ஹவுஸ், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் அமலாக இருக்கிறது. 

     கேலக்ஸி ஏ31

    சிறப்பம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடலில் 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், ARM மாலி-G52 GPU, 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0, டூயல் சிம் ஸ்லாட், 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 8 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2, 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4, 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4, 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
    மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனம் விரைவில் தனது ரியல்மி 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரியல்மி 7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி 8 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.

    RMX3092 எனும் மாடல் நம்பர் கொண்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது ரியல்மி 8 மாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10  ஒஎஸ், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் சோதனையில் 2874 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 8088 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. 

    இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய தரத்தை உறுதிப்படுத்தும் பிஐஎஸ் வலைதளத்திலும் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் பிளாட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளே மற்றும் அதிவேக வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

     ஸ்மார்ட்போன்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இவற்றுடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 11, 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400  பிக்சல் பிளாட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 108MP பிரைமரி கேமராவுடன் சியோமி நிறுவனத்தின் எம்ஐ11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.


    சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம்  செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், லிக்விட் கூல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 8 ஜிபி ரேம், 128 / 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சியோமி எம்ஐ 11

    புதிய சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,  4600 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    சியோமி எம்ஐ11 ஸ்மார்ட்போன் மிட்நைட் கிரே, ஹாரிசான் புளூ மற்றும் பிராஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 3999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 44,970 என துவங்குகிறது. 
    5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன்படி இரு மாடல்களில் 4500 எம்ஏஹெச் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    தற்சமயம் இரு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான பேட்டரி மாடல்கள் டியுவி ரெயின்லாந்து வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி 4500mAh பேட்டரி CN110 எனும் மாடல் நம்பரும், 5000mAh பேட்டரி WT340 எனும் மாடல் நம்பரை கொண்டு உருவாகி இருக்கிறது. 

     நோக்கியா ஸ்மார்ட்போன்

    இரு பேட்டரிகளும் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இதுவரை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 6.3 அல்லது நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை. இரு புதிய மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

    எனினும், இந்த ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா சி1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது. 
    2020 ஆண்டின் டாப் 10 டிரெண்டிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
      

    2020 ஒருவழியாக நிறைவுக்கு வந்து விட்டது. ஆண்டு துவக்கம் முதல் இதுவரை கொரோனாவைரஸ் ஊரடங்கிலேயே கழிந்து விட்டது. நோய் தொற்று ஊரடங்கு உலக வழக்கங்கள் அனைத்தையும் அடியோடு மாற்றி விட்டது. பெரும்பாலான சேவைகள் முழுமையாக ஆன்லைன் மயமாகிவிட்டன.

    ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் தளத்தில் சிறப்பாக செயல்பட செயலிகள் பேரளவு உதவியாக இருந்தன. உடல்நலம் துவங்கி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு பிரிவுகளில் செயலிகள் 2020 ஆண்டில் செயலிகள் அதிக பிரபலமாகி இருக்கின்றன.

    டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளான கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்டவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று பொழுதுபோக்கு செயலிகள், சமூக வலைதள செயலிகளும் பிரபலமாகி இருக்கின்றன. அந்த வகையில் 2020 டிரெண்டிங் செயலிகளின் டாப் 10 பட்டியலை பார்ப்போம்.

    டிக்டாக்

    டிக்டாக்

    டிக்டாக் செயலி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், டிக்டாக் இந்த ஆண்டு அதிக பிரபல செயலியாக இருக்கிறது. இந்த ஆண்டு இதன் பயனர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. மேலும் இது 2020 ஆண்டு அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலிலும் இடம்பிடித்து இருக்கிறது. 

    இன்ஸ்டாகிராம்

    பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் போட்டோ-ஷேரிங் செயலி ஆகும். இது சமூக வலைதள செயலிகளில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் செயலிகளை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறது. பொழுதுபோக்கு மட்டுமின்றி பயனர்களின் திறமையை வெளிப்படுத்தும் தளமாகவும் இது மாறி இருக்கிறது.

     ஜூம்

    ஜூம்

    உலகில் தற்சமயம் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக ஜூம் இருக்கிறது. இந்த செயலிக்கான தட்டுப்பாடு கடந்த ஆறு மாதங்களில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் பரவலை தடுக்க மக்கள் வீட்டில் இருந்தபடி வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்க இந்த செயலி உதவுகிறது.

    வாட்ஸ்அப்

    ஜூலை 2020 நிலவரப்படி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலி உலகம் முழுக்க சுமார் 200 கோடி டவுன்லோட்களை கடந்து உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயனர்கள் அடிக்கடி பயன்படுத்தவில்லை என்ற போதும், வாட்ஸ்அப் செயலியை அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.

    நெட்ப்ளிக்ஸ்

    பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பல்வேறு தரவுகளை வழங்குகிறது. வீடியோ ஸ்டிரீமிங் செயலிகள் பிரிவில் நெட்ப்ளிக்ஸ் முதலிடம் பிடித்து இருக்கிறது. இதன் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

     பேஸ்புக்

    பேஸ்புக்

    மக்கள் தங்களின் உறவினர், நட்பு வட்டாரத்துடன் உலகின் எந்த பகுதியில் இருந்தும் தொடர்பு கொள்ள பேஸ்புக் சிறந்த தளமாக இருக்கிறது. ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் வியாபார வழக்கம் அதிகரித்து இருக்கும் சூழலில் பேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை நேரடியாக விற்கவும் முடிகிறது.

    அமேசான்

    2020 ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலிகளில் ஒன்றாக அமேசான் இருக்கிறது. இதேபோன்று நெட்ப்ளிக்ஸ் சேவைக்கு மாற்றாக அமேசான் பிரைம் வீடியோ சேவையை வழங்குகிறது. இத்துடன் அமேசான் பேண்ட்ரி மூலம் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடியும்.

    கூகுள் மீட்

    ஜூம் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் கூகுள் மீட் உலகின் முன்னணி வீடியோ கான்பரன்சிங் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றும் போது இந்த செயலி அதிக பிரபலமானது.

     பேஸ்புக் மெசஞ்சர்

    பேஸ்புக் மெசஞ்சர்

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிக்கு மாற்றான குறுந்தகவல் செயலியாக பேஸ்புக் மெசஞ்சர் இருக்கிறது. உலகம் முழுக்க இந்த செயலியை பலர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த செயலியில் பேஸ்புக் பல்வேறு புது அம்சங்களை சேர்த்தது.

    யூடியூப்

    உலகில் அதிகம் பேர் பார்க்கும் தளமாக யூடியூப் இருக்கிறது. மேலும் முன்னணி வீடியோ தளமாகவும் இது இருக்கிறது. இந்த செயலி கொண்டு பயனர்கள் தங்களின் திறமையை உலகிற்கு எடுத்துரைக்க முடியும்.
    கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த பிக்சல் 5 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர்-ஸ்கிரீன் செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றிய விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கும் காப்புரிமையில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும், இந்த அம்சம் வெளியீட்டு தயார் நிலையில், சீராக இயங்குவதாக கூறப்படுகிறது.

     கூகுள் பிக்சல் 4

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 6.0 இன்ச் FHD+ 1080x2340 பிக்சல் OLED ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 4080 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.

    அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இசட்.டி.இ. நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் சியோமி மற்றும் ஒப்போ போன்ற நிறுவனங்கள் இதே தொழில்நுட்பம் கொண்ட மாடல்களின் ப்ரோடோடைப்களை வெளியிட்டு இருக்கின்றன.

    மேலும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போனிலும் அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ×