என் மலர்
புதிய கேஜெட்டுகள்
48 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டு-டோன் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் அமெரிக்க வடிவமைப்பாளர் ஸ்டீவன் ஹாரிங்டனுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
புதிய லிமிடெட் எடிஷன் இயர்பட்ஸ் ஸ்டீவன் ஹாரிங்டன் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் டிசைன்கள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய தோற்றம் தவிர லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் எந்த மாற்றமும் பெறாமல் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்பட் 40 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் டூ-டோன் பர்ப்பிள் மற்றும் மிண்ட் நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இதற்கு ஏற்ற நிறத்தில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.
அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் உருவாக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் குவிக்சில்வர் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. புது நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இது நோக்கியா 6.3 அல்லது 6.4 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய ரென்டர்களின் படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா செட்டப், 6.45 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 690ஜி பிராசஸர், அட்ரினோ 619 GPU கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 6.4 5ஜி என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புகைப்படங்களை எடுக்க புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜெபிஎல் பிராண்டின் புதிய சி115 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த இயர்போனுடன் மெல்லிய சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் 5.8எம்எம் டிரைவர் மற்றும் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் ஆட்டோனோமஸ் கனெக்டிவிட்டி, மோனோ மற்றும் ஸ்டீரியோ மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அழைப்புகளை மேற்கொள்ளும் போது ஒரு இயர்பட் மட்டும் பயன்படுத்த முடியும்.
இதன் இயர்பட்ஸ் மட்டும் ஆறு மணி நேர பிளேபேக் வழங்குகின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 15 மணி நேரத்திற்கு கூடுதல் பிளேபேக் கிடைக்கிறது. அந்த வகையில் புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் மொத்தம் 21 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

அழைப்புகள், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் மியூசிக் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா சேவைகளை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய ஜெபிஎல் சி115 விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிளாக், மின்ட், ரெட் மற்றும் வைட்
போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய வை20ஜி மற்றும் வை31 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் விவோ வை20ஜி மாடலில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ வை31 ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2408 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி + 2 எம்பி சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ வை31 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கிறது.
விவோ வை31 மாடலிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய விவோ வை31 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் ரேசிங் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
விவோ வை20ஜி மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.
ப்ளிப்கார்ட் தளத்தில் Big Saving Days சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது. இந்த விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் மற்றும் பல்வேறு அக்சஸரீக்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
அதன்படி ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மாடல் துவக்க விலை ரூ. 27,999 என மாறி இருக்கிறது. ஐபோன் எக்ஸ்ஆர் 64 ஜிபி மாடல் ரூ. 36,999 என்றும் ஐபோன் 12 மினி ரூ. 64,900 என்றும் ஐபோன் 11 (64ஜிபி) மாடல் விலை ரூ. 48,999 என மாறி உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 44 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் ரோக் போன் 3 (12ஜிபி + 128ஜிபி ) மாடல் ரூ. 47,999 விலையிலும், அசுஸ் ரோக் போன் 3 ( 8ஜிபி + 128 ஜிபி) ரூ. 43,999 விலையில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் குறைக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ. 54,999 விலையில் கிடைக்கிறது. போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ. 500 துவங்கி அதிகபட்சம் ரூ. 1500 வரையிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று ரியல்மி, மோட்டோரோலா, ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கும், லேப்டாப், டேப்லெட் மற்றும் அக்சஸரீக்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கேலக்ஸி போல்டு எல்டிஇ வேரியண்ட்டிற்கும் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் கேலக்ஸி போல்டு 5ஜி வேரியண்ட்டிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 சாட் பபுள்கள், மேம்பட்ட யூசர் இன்டர்பேஸ், உரையாடல்களுக்கென தனி பகுதி என பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. முன்னதாக கேலக்ஸி இசட் போல்டு 2, கேலக்ஸி எஸ்20 சீரிஸ், கேலக்ஸி இசட் ப்ளிப் மற்றும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது.
சாம்சங் தனது கேலக்ஸி போல்டு ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 2019 வாக்கில் ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்தது. பின் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது. இந்திய பயனர்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங், எல்ஜி மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த ஆண்டு அதிகளவு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களுக்கான ப்ரோடோடைப்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதற்கென மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை வாங்கி, நீண்ட காலத்திற்கு அவை எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.

இந்த டிஸ்ப்ளேக்கள் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலில் உள்ளதை போன்று கண்களுக்கு தெரியாத ஹின்ஜ் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆப்பிள் இதுவரை முழுமையான மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கவில்லை.
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனங்களை சோதனை செய்து வருவதால், இது விற்பனைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். மேலும் இந்த திட்டத்தை ஆப்பிள் எதிர்காலத்தில் ரத்து செய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வயோ பிராண்டின் இரண்டு புதிய லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன.
இந்தியாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இரண்டு புதிய லேப்டாப்களை வயோ பிராண்டு அறிமுகம் செய்து இருக்கிறது. இவை வயோ இ15 மற்றும் வயோ எஸ்இ14 லேப்டாப் என அழைக்கப்படுகின்றன.
இரண்டு புதிய வயோ லேப்டாப் மாடல்களிலும் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365, விண்டோஸ் 10 ஹோம் எடிஷன், டால்பி ஆடியோ மற்றும் ஸ்மார்ட் ஆம்ப்ளிபையர் வசதி கொண்ட ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

வயோ எஸ்இ14 ஏற்கனவே மலேசியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்சமயம் அவிட்டா நோட்புக் மாடல்களை விற்பனை செய்யும் நெஸ்ட்கோ நிறுவனம் தான் வயோ பிராண்டை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வந்து உள்ளது.
இரண்டு புதிய வயோ லேப்டாப்களும் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. வயோ இ15 மாடல் பிளாக் மற்றும் டின் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த லேப்டாப் மாடல் விலை ரூ. 66,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வயோ எஸ்இ14 மாடல் டார்க் கிரே மற்றும் ரெட் கூப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 84,690 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இரு வயோ லேப்டாப்களின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
அதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இதில் 6.8 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி ஒடிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர், இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, 108 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 10 எம்பி டெலிபோட்டோ கேமரா, 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ், 3D TOF சென்சார், 40 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 1,05,999
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,16,999
கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் எஸ் பென் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இதனை விரும்புவோர் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் பேண்டம் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கி நடைபெறுகிறது.
சோனி நிறுவனம் உலகின் சிறிய டிரோனை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சோனி நிறுவனம் 2021 சிஇஎஸ் விழாவில் ஏர்பீக் டிரோன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிரோனில் ஆல்பா மிரர்லெஸ் கேமராவை பொருத்தி அதிக தரமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். புதிய சோனி ஏர்பீக் உலகின் சிறிய டிரோன் ஆகும்.
ஆல்பா சிஸ்டம் பொருத்தப்படும் பட்சத்தில் இதை கொண்டு பொழுதுபோக்கு துறையில் பல்வேறு புதுமைகளை முயற்சிக்க முடியும். ஏர்பீக் டிரோன் மற்றும் α7S III புல் பிரேம் மிரர்லெஸ் சிங்கில் லென்ஸ் கேமரா கொண்டு எடுக்கப்பட்ட வீடியோவை சோனி வெளியிட்டு இருக்கிறது.

முதற்கட்டமாக வியாபாரங்களுக்கான புதிய தொழில்முறை புகைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்புக்கான தளத்தை இந்த ஆண்டு வெளியிட சோனி திட்டமிட்டு இருக்கிறது. இந்த திட்டம் பற்றிய புது தகவல்களை அவ்வப்போது வெளியிடுவதாக சோனி தெரிவித்து உள்ளது.
மேலும் தொழில்முறை டிரோன் பயன்பாட்டாளர்களிடம் இருந்து கருத்துக்களை பெற சோனி நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்தவர்களிடம் கூட்டு சேர இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
எல்ஜி நிறுவனத்தின் புதிய ரோலபில் டிவி சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
எல்ஜி நிறுவனம் டிரான்ஸ்பேரன்ட் 55-இன்ச் OLED டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது. ரோலபில் டிவி என்பதால் இதன் ஸ்கிரீன் தேவைப்படும் போது முழுமையாக வெளியில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டிவி 40 சதவீத டிரான்ஸ்பேரன்சி தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த டிவியின் பேனலில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இருப்பதாக எல்ஜி தெரிவித்து உள்ளது. இந்த டிவியினை பயனர்கள் வீட்டின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும்.
டிரான்ஸ்பேரன்ட் OLED தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. மேலும் இது அடுத்த தலைமுறை டிஸ்ப்ளேவாக உருமாறி தற்போதைய டிஸ்ப்ளே நுட்பத்திற்கு மாற்றாக அமையும், என எல்ஜி டிஸ்ப்ளே நிறுவன மூத்த துணை தலைவர் மற்றும் வர்த்தக பிரிவு தலைவர் ஜாங்-சன் பார்க் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாட்டின் கொரோனாதொற்று அபாயம் காரணமாக புதிய எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என எல்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
புதிய 65-இன்ச் டிவியின் ஸ்கிரீன் சிறு பெட்டியில் இருந்து மேல்புறமாக சுழன்று எழும்பும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஒவ்வொருத்தர் வீட்டின் உள்புறத்திற்கு ஏற்ப பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.






