search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy Fold"

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சீர் செய்யப்பட்ட வெர்ஷன் புதிய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து விற்பனையை தள்ளிவைத்தது. ஸ்மார்ட்போனை மடிக்கும் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை கண்டறியப்பட்டு விட்டதாக சாம்சங் நிறுவன அதிகாரி ஏற்கனவே தகவல் வழங்கிய நிலையில், தற்சமயம் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் புதிய வெளியீட்டு விவரம் வெளியாகி இருக்கிறது.

    அதன்படி சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தென்கொரியாவில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் புதிய வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய கேலக்ஸி ஃபோல்டு அமெரிக்காவில் மூன்று நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஃபோல்டு மாடலில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய அந்நிறுவனம் ஸ்மார்ட்போன் ஃபிரேம் அடியில் பாதுகாப்பான பிளாஸ்டிக் கோட்டிங் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.



    கேலக்ஸி ஃபோல்டு மாடலின் ஹின்ஜ் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய கீழ் பகுதியில் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இரு டிஸ்ப்ளேக்களின் இடையில் தூசு போன்றவை நுழையாது. இதனால் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேல்கஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அந்நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் புதிய தகவல் வழங்கி இருக்கிறது. #Samsung



    சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி புதிய தகவலை வழங்கி இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதாக விமர்சகர்கள் தகவல் தெரிவித்த நிலையில், இதன் வெளியீடு அமெரிக்காவில் தள்ளிவைக்கப்பட்டது.

    அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி இறுதி முடிவெடுக்கும் கட்டத்தில் சாம்சங் இருப்பதாக அந்நிறுவனம் தற்சமயம் தெரிவித்திருக்கிறது. இதனால் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்டதை விட சீக்கிரமே வெளியாகும் என தெரிகிறது.

    “கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் கண்டறியப்பட்டு விட்டது. இதனை சரி செய்வது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியாக அதிக காலம் ஆகாது.” என சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜே. கோ தெரிவித்தார். 



    கேலக்ஸி ஃபோல்டு வெளியீடு பற்றி டி.ஜே. கோ சரியான தேதியை இதுவரை அறிவிக்கவில்லை என்றபோதும், அவர் வழங்கியிருக்கும் தகவல் சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை உணர்த்துவதாக அமைந்து இருக்கிறது. சாம்சங் தனது கேல்கஸி ஃபோல்டு வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போது டிஸ்ப்ளே பிரச்சனையை எப்படி சரி செய்தது பற்றி விவரங்களை வழங்கும் என தெரிகிறது. 

    முன்னதாக கேல்கஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்தவர்களுக்கு வெளியீடு பற்றிய தகவல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என சாம்சங் தெரிவித்திருந்தது. தற்சமயம் டி.ஜே. கோ வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு  வெளியீட்டு தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி சாம்சங் முக்கிய முடிவெடுத்திருக்கிறது. #Samsung



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,38,314) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் வரலாற்றில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு இருக்கிறது. 

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற வகையில் வடிவமைப்பு மற்றும் புதுமையில் பலரையும் கவர்ந்த கேலக்ஸி ஃபோல்டு எளிதில் உடைந்து போன விவகாரம் விமர்சகர்கள் மற்றும் செய்தியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவின் மேல் ஒட்டப்பட்ட மெல்லிய ஸ்கிரீனை நீக்கியதும் டிஸ்ப்ளே உடைந்து செயலிழந்து போனது.



    புத்தம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே உடைந்து போனதைத் தொடர்ந்து இன்று ஷாங்காயில் நடைபெற இருந்த கேலக்ஸி ஃபோல்டு வெளியீட்டு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட இருந்தது.

    பல்வேறு விமர்சகர்கள் கேலக்ஸி ஃபோல்டு டிஸ்ப்ளே எளிதில் சேதமடைவதாக தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்களை முழுமையாக புரிந்து கொள்ள உள்புற சோதனை செய்யப்பட வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக கேலக்ஸி ஃபோல்டு வெளியீட்டை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என சாம்சங் தெரிவித்துள்ளது.

    கேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு தேதி வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும் டிஸ்ப்ளேவின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளவோம் என்றும் சாம்சங் தெரிவித்திருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #GalaxyFold



    சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு மாடலை இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் துவங்கியது. அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போதே அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டி.ஜே. கோ கேலக்ஸி ஃபோல்டு மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தார்.

    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA பிளஸ் டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம்.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமராக்கள், இரண்டு செல்ஃபி கேமராக்கள் மற்றும் முன்புற கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:

    - 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே
    - 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 12 ஜி.பி. ரேம்
    - 512 ஜி.பி. மெமரி
    - 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், AF, OIS, f/1.5 - f/2.4
    - 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9
    - 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா, f/2.2
    - 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2 
    - AKG டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் 
    - 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)
    - 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி



    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

    இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,40,760) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. #GalaxyFold #FoldableSmartphone



    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை மட்டும் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற டெவலப்பர்கள் நிகழ்வில் சாம்சங் காட்சிப்படுத்தியது. 

    இதன் தொடர்ச்சியாக கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை விரிவாக அறிமுகம் செய்திருக்கிறது. கேலக்ஸி ஃபோல்டு என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் அளவுகளில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை சக்தியூட்ட இருபுறங்களிலும் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டு, பிரத்யேக தொழில்நுட்பம் இருபேட்டரிகளில் இருந்து மின்சக்தியை ஒருங்கிணைக்கும் பணியை செய்கிறது.



    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு ஆடம்பர சாதனம் என்றே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம். புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய முறையில் உற்பத்தி செய்யப்பட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

    ஸ்மார்ட்போனினை தேவைப்படும் போது மடித்து பயன்படுத்த ஏதுவாக மிக கடினமான கீல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் முதுகெலும்பு போன்று செயல்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கீல் தெரியாதபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் பார்க்க அழகாகவே காட்சியளிக்கிறது.



    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:

    - 7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED பேனல்
    - 4.6 இன்ச் சூப்பர் AMOLED பேனல்
    - 12 ஜி.பி. ரேம்
    - 512 ஜி.பி. மெமரி
    - 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, டூயல் பிக்சல் AF, OIS, f/1.5 - f/2.4
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, PDAF, OIS, f/2.4
    - 10 எம்.பி. f/2.2 + 8 எம்.பி. டெப்த் கேமரா, f/1.9 (உள்புறம் இரு கேமரா செட்டப்)
    - 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2  
    - ஆண்ட்ராய்டு பை
    - 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)

    சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை சீராக இயங்க வைக்க கூகுளுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் உள்ளிட்டவை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் சீராக இயங்க வைக்க செயலிகள் பிரத்யேகமாக ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளன.



    கேலக்ஸி ஃபோல்டு விற்பனை விவரங்கள்:

    சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26, 2019 முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,41,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் கிரீன், புளு, சில்வர் மற்றும் பிளாக் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் 4ஜி எல்.டி.இ. மற்றும் 5ஜி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது.
    ×