என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
Byமாலை மலர்21 Feb 2019 2:55 AM GMT (Updated: 21 Feb 2019 6:22 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. #GalaxyFold #FoldableSmartphone
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை மட்டும் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற டெவலப்பர்கள் நிகழ்வில் சாம்சங் காட்சிப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை விரிவாக அறிமுகம் செய்திருக்கிறது. கேலக்ஸி ஃபோல்டு என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் அளவுகளில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை சக்தியூட்ட இருபுறங்களிலும் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டு, பிரத்யேக தொழில்நுட்பம் இருபேட்டரிகளில் இருந்து மின்சக்தியை ஒருங்கிணைக்கும் பணியை செய்கிறது.
சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு ஆடம்பர சாதனம் என்றே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம். புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய முறையில் உற்பத்தி செய்யப்பட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போனினை தேவைப்படும் போது மடித்து பயன்படுத்த ஏதுவாக மிக கடினமான கீல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் முதுகெலும்பு போன்று செயல்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கீல் தெரியாதபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் பார்க்க அழகாகவே காட்சியளிக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:
- 7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED பேனல்
- 4.6 இன்ச் சூப்பர் AMOLED பேனல்
- 12 ஜி.பி. ரேம்
- 512 ஜி.பி. மெமரி
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, டூயல் பிக்சல் AF, OIS, f/1.5 - f/2.4
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, PDAF, OIS, f/2.4
- 10 எம்.பி. f/2.2 + 8 எம்.பி. டெப்த் கேமரா, f/1.9 (உள்புறம் இரு கேமரா செட்டப்)
- 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- ஆண்ட்ராய்டு பை
- 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)
சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை சீராக இயங்க வைக்க கூகுளுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் உள்ளிட்டவை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் சீராக இயங்க வைக்க செயலிகள் பிரத்யேகமாக ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளன.
கேலக்ஸி ஃபோல்டு விற்பனை விவரங்கள்:
சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26, 2019 முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,41,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் கிரீன், புளு, சில்வர் மற்றும் பிளாக் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் 4ஜி எல்.டி.இ. மற்றும் 5ஜி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X