என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Redmi



    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதில் பாப்-அப் ரக முன்புற கேமரா மற்றும் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

    முன்னதாக ரெட்மி தலைவர் லு வெய்பிங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இதில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அதிவேக செயல்திறன், நீண்ட பேட்டரி பேக்கப், சிறப்பான கேமரா உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது.



    இத்துடன் 6.39 இன்ச் FHD பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது.

    முன்னதாக சியோமி இந்தியா துணை தலைவர் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே வெளியான விவரங்களில் சியோமி நிறுவனம் பாப்-அப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டிருந்தது.

    ரெட்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீனாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும். #Xiaomi



    சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் குவால்காம் இந்தியா தலைவர் ராஜன் வகேடியாவை தான் சந்தித்து பேசியதாக தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். இச்சந்திப்பில் சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர் வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    அந்த வகையில் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை.



    எனினும், கடந்த வாரம் வெளியான விவரங்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் பாப்-அப் கேமரா மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் புதிய மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம்.

    புதிய சியோமி ஸ்மார்ட்போன் Mi 9எஸ்.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் சீனாவில் இது Mi 9X என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு வேரியண்ட் தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என என்றும் இவை புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதுகுறித்து மிங் சி கியூ வெளியிட்டிருக்கும் தகவல்களில் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் போன்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் மேம்பட்ட ஏர்பாட்ஸ் மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் சார்ந்து மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் 5.2 கோடிகளை கடக்கும் என தெரிகிறது. இது 2020 ஆம் ஆண்டில் 7.5 கோடியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.



    இதுதவிர ஆப்பிள் நிறுவனம் பவர்பீட்ஸ் ப்ரோ எனும் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 9 மணி நேரத்திற்கான பேக்கப், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் செக்யூர்-ஃபிட் இயர்ஹூக்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பவர்பீட்ஸ் ப்ரோ ஐவரி, பிளாக், மாஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249.95 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமெரிக்கா மற்றும் 20 நாடுகளில் விரைவில் துவங்க இருக்கிறது.
    ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷனை அறிமுகம் செய்தது. #OPPO



    ஒப்போ நிறுவனம் எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் புளு நிறத்தில் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிரேடியன்ட் எஃபெக்ட்கள் மற்றும் அவெஞ்சர்ஸ் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.



    ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேப்டன் அமெரிக்காவை தழுவிய கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த கேஸ் கேப்டன் அமெரிக்காவின் ஷீல்டு போன்ற உருவம் கொண்டிருக்கிறது. இதனை போனின் ஹோல்டர் போன்று  பயன்படுத்திக் கொள்ளலாம். 

    இத்துடன் மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் பெட்டியில் அவெஞ்சர்ஸ் சின்னம், ஸ்டேம்ப்டு பேட்ஜ் மற்றும் சிறப்பு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் FHD+  பானரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0, இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் 128 ஜி.பி. மாடல் விலை 1399 மலேசியன் ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.23,665) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலின் பின்புறம் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி வை3 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.12um பிக்சல், f/2.2, PDAF
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/2.8″
    - கைரேகை சென்சார், இன்ஃபாரரெட் சென்சார்
    - ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் எலிகன்ட் புளு, போல்டு ரெட் மற்றும் பிரைம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.
    ரியல்மி பிராண்டின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 என அழைக்கப்படுகிறது. #Realme



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான சி1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    புதிய ரியல்மி சி2 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டியூ-டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட், 3 ஜி.பி. ரேம், கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. 

    புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. செல்ஃபி, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி சி2 சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 1560x720 பிக்சல் 19.5:9 டியூ-டிராப் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர்
    - 650MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, PDAF
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.12μm
    - ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் டைமன்ட் புளு மற்றும் டைமன்ட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.5,999 என்றும் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இதன் விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,300 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #Motorola



    மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மோட்டோ இசட்3 மற்றும் இசட்3 பிளே ஸ்மார்ட்போன்களை மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்தது. மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் லீக் ஆக்யுள்ளது. அதன்படி மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் மோட்டோ மாட்ஸ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் மோட்டோ இசட்4 மாடலில் மோட்டோரோலாவின் 5ஜி மாட் மூலம் 5ஜி சேவையை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. தரத்திலான OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    புகைப்படங்களை எடுக்க மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒற்றை பெரிய பிக்சலில் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும் என கூறப்படுகிறது. முன்புறம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் குரூப் செல்ஃபி மோட் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இவற்றுடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. மோட், நைட் விஷன் மோட், 6எம்.பி. போட்டோஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம். இவற்றை சக்தியூட்ட 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புதிய ஸ்மார்ட்போனிலும் மோட்டோரோலா 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பிளாஷ் ப்ரூஃப் கொண்ட நானோ கோட்டிங் உள்ளிட்டவற்றை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங் மற்றும் லென்ஸ் சேவைகள் வழங்கப்படும் என தெரிகிறது. இதுமட்டுமின்றி மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்‌ஷன்ஸ், மோட்டோ எக்ஸ்பீரியன்சஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: 91mobiles
    சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. #Samsung



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ60 மற்றும் கேலக்ஸி ஏ40எஸ் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் அறிமுகம் செய்துள்ளது.

    இதில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க 32 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா, கிரேடியன்ட் பேக், பின்புறம் கைரேகை சென்சார், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஏ60 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது கேமரா, 5 எம்.பி. 123° அல்ட்ரா வைடு லென்ஸ், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி ஏ40எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
    - மாலி-G71 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 5 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,685) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,510) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மீடியாடெக் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்களை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது. #Mediatek



    சீனாவில் நடைபெற்ற சைனா மொபைல் சர்வதேச கூட்டணி கருத்தரங்கில் மீடியாடெக் நிறுவனம் தனது முதல் 5ஜி சிப்செட்டை அறிமுகம் செய்தது. மீடியாடெக் நிறுவனத்தின் முதல் 5ஜி சிப்செட் ஹீலியோ M70 என அழைக்கப்படுகிறது.

    மீடியாடெக் ஹீலியோ M70 சிப்செட் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு கொண்டு வரயிருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கும் என தெரிவித்துள்ளது. உலகின் முதல் 5ஜி மல்டி-மோட் சிப்செட்களில் ஹீலியோ M70 ஒன்றாக இருக்கிறது.

    5ஜி சேவையில் மீடியாடெக் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்செட்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. எனினும், சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.



    3ஜி மற்றும் 4ஜி சாதனங்களில் மீடியாடெக் சிப்களை வழங்க மீடியாடெக் நிறுவனம் கைஓ.எஸ். டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. கைஓ.எஸ். இயங்குதளம் மீடியாடெக் 3ஜி MT6572 மற்றும் மீடியாடெக் MT6731 உள்ளிட்டவற்றில் இயங்கும். இது மொபைல் போன்களில் டூயல் 4ஜி சிம் பயன்படுத்த வழி செய்யும்.

    இந்த சிப்செட் கொண்டு இயங்கும் முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டின இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு முதல் மீடியாடெக் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
    ஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் அளவில் புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 2017 இல் அறிமுகம் செய்தது. சமீபத்தில் ஐபோன் 7 உற்பத்தி இந்தியாவின் பெங்களூருவில் அமைந்திருக்கும் விஸ்ட்ரன் ஆலையில் துவங்கியது. விரைவில் ஐபோன் X மாடல் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்பிள் ஐபோன் 8 மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தாய்வானில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 8 மாடலில் 4.7 இன்ச் LCD டிஸ்ப்ளே, ஏ13 சிப்செட், PCB வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புகைப்படம் எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்சமயம் ஐபோன் 8 (64 ஜி.பி.) விலை இந்தியாவில் ரூ.41,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களின் எண்ணிக்கை விரைவில் இரண்டு கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 8 மாடல் மார்ச் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #GalaxyA70



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3D கிளாஸ்டிக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி ஏ70 சிறப்பம்சங்கள்

    - 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20: 9 இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் வைட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.28,990 என நிரணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு சாம்சங் யு ஃபிளெக்ஸ் ப்ளூடூத் ஹெட்செட்டை ரூ.999 விலையில் வாங்கிட முடியும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் இயர்பட்ஸ்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Microsoft



    சர்வதேச சந்தையில் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ்க்கு போட்டியாக சொந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

    சில நிறுவனங்கள் ஏற்கனவே வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சொந்தமாக இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்ஃபேஸ் பட்ஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.



    புதிய இயர்பட்ஸ்களை மைக்ரோசாஃப்ட் மொரிசன் என்ற பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சாதனங்களில் மைக்ரோசாஃப்ட் வானியல் சார்ந்த பெயர்களை சூட்டுவதை மைக்ரோசாஃப்ட் வாடிக்கையாக கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே ஆடியோ சாதனங்கள் சந்தையில் சர்ஃபேஸ் ஹெட்போன்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

    இதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருகிறது. இந்த இயர்பட்ஸ்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் கார்டணா வசதி நிச்சயம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வசதியை கொண்டு மொபைலில் தகவல்களை மிக எளிமையாக வாசிக்க முடியும்.

    சிரி, அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் இயர்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் மைக்ரோசாஃப்ட் சாதனத்தில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை எந்தளவு வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    புகைப்படம் நன்றி: thurrott
    ×