search icon
என் மலர்tooltip icon

    கணினி

    • சியோமி பேட் 5 மாடல் இரண்டு வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேட் 6 ஆன்ட்ராய்டு டேப்லெட் மாடலை நாளை (ஜூன் 13) அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டேப்லெட் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், சியோமி பேட் 5 மாடலின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் சியோமி பேட் 5 மாடல் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சியோமி பேட் 5 மாடலின் 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 1000, 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 500 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் புதிய சியோமி பேட் 5 மாடலை முறையே ரூ. 25 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும். சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி இந்த மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சியோமி பேட் 5 அம்சங்கள்:

    புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி, சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பென் கொண்டு குறிப்பு எடுப்பது, எழுதுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது என ஏராளமான ஆப்ஷன்களை இயக்க முடியும். சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.
    • இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.

    ரெட்மி G27 மற்றும் G27Q கேமிங் மானிட்டர்களை தொடர்ந்து சியோமியின் துணை பிராண்டு ரெட்மி முற்றிலும் புதிய மற்றும் குறைந்த விலை மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ரெட்மி A27Q என்று அழைக்கப்படுகிறது. இதில் 2K ரெசல்யூஷன் மற்றும் IPS ஸ்கிரீன் உள்ளது.

    ரெட்மி A27Q 2K IPS அம்சங்கள்:

    புதிய ரெட்மி A27Q 2K IPS மானிட்டர் அன்றாட பணிகளை மேற்கொள்ளவும், பொழுதுபோக்கு சார்ந்த பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள IPS ஸ்கிரீன் 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் தலைசிறந்த விஷூவல்களை அதன் உண்மை நிறங்களில் பிரதிபலிக்கிறது. இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.

    இத்துடன் HDR 10 சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இது தரவுகளுக்கு டெப்த் மற்றும் தரத்தை மேம்படுத்தி காண்பிக்கிறது. இதில் 8-பிட் கலர் டெப்த் மற்றும் 100 சதவீத sRGB சப்போர்ட், 95 சதவீதம் DCI-P3 சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.

    ரெட்மி A27Q மானிட்டரில் 75Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் ப்ளூ லைட் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இது கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. இதன் மூலம் நீண்ட நேரம் மானிட்டரை பயன்படுத்த முடியும். கனெக்டிவிட்டிக்கு DPI.4 இன்டர்ஃபேஸ், HDMI இன்டர்ஃபேஸ், யுஎஸ்பி ஏ இன்டர்ஃபேஸ், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் உள்ளது.

    இதில் உள்ள யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் 65 வாட் ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த மானிட்டரை வால் மவுன்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் இதன் விலை 869 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 047 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இரு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன், 3840x2160 பிக்சல்கள், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
    • கனெக்டிவிட்டிக்கு டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், யுஎஸ்பி 3.0 ஹப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் தனது முற்றிலும் புதிய 4K மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாணிட்டர்கள் அல்ட்ராகியர் 27GR93U மற்றும் அல்ட்ராகியர் 32GR93U என்று அழைக்கப்படுகின்றன. பெயருக்கு ஏற்றார்போல் இரு மாணிட்டர்களிடையேயான வித்தியாசம் அவற்றின் ஸ்கிரீன் அளவுகள் தான் எனலாம்.

    எல்ஜி 27GR93U மாடலில் 27 இன்ச் பேனலும், அல்ட்ராகியர் 32GR93U மாடலில் 31.5 இன்ச் அகலம் கொண்ட பெரிய டிஸ்ப்ளேவும் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன், 3840x2160 பிக்சல்கள், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இந்த மாணிட்டரில் IPS பேனல், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இத்துடன் 1 ms GtG வரையிலான ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது. இதன் மூலம் சிறப்பான கேமிங் அனுபவம் கிடைக்கும்.

    இரண்டு மாணிட்டர்களிலும் AMD FreeSync பிரீமியம் மற்றும் NVIDIA G-Sync சப்போர்ட் உள்ளது. இவை சீரான கேம்பிளே அனுபவம் வழங்க செய்கிறது. இத்துடன் கனெக்டிவிட்டிக்கு டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், யுஎஸ்பி 3.0 ஹப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஸ்டாண்டுகள் வழங்கப்படுகின்றன.

    புதிய எல்ஜி அல்ட்ராகியர் மாணிட்டர்கள் எல்ஜி பிரிட்டன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதுபற்றிய இதர விவரங்கள் இடம்பெறவில்லை. 

    • புதிய ஐஒஎஸ்-இல் சிரி சேவையை இயக்க ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதும்.
    • புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐஒஎஸ் 17 வெர்ஷன் அறிவிக்கப்பட்டது. புதிய ஐஒஎஸ்-இன் பெரும்பாலான செயலிகளில் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் படி இன்கமிங் அழைப்புகளில் தற்போது ஒவ்வொரு காண்டாக்டிற்கும் குறிப்பிட்ட போஸ்டர்களை செட் செய்து கொள்ள முடியும். வாய்ஸ்மெயில் சேவையில் கூகுள் ஏற்கனவே வழங்குவதை போன்றே வாய்ஸ்மெயில் தகவல்களை எழுத்து வடிவில் காண்பிக்கிறது.

    மெசேஜஸ் அம்சத்தில் மிக எளிமையாக பதில் அனுப்புவது, ஆடியோ மெசேஜ்களுக்கு எழுத்து வடிவம் பெறுவது, இன்-லைன் லொகேஷன் விவரங்கள் மற்றும் செக்-இன் வசதி உள்ளது. இத்துடன் ஃபேஸ்டைமில் நேரலை தகவல்களை வழங்க முடியும். இத்துடன் ஸ்டிக்கர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் எமோஜிக்களை ஸ்டிக்கர் மற்றும் எஃபெக்ட்களாக மாற்ற முடியும்.

    சிரி சேவையை இயக்க இனி ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதுமானது. மேலும் ஒவ்வொரு முறையும் கமாண்ட் செய்யாமல், அடுத்தடுத்த கேள்விகளை கேட்க சிரி அதற்கு பதில் அளிக்கும். புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன் நேம்டிராப் அம்சம் கொண்டு பயனர்கள் காண்டாக்ட் விவரங்களை அவர்களது ஐபோனினை மற்றவர் ஐபோன் அருகில் கொண்டு சென்றாலே பரிமாறிக் கொள்ளலாம். இதே போன்று புகைப்படங்களையும் மிக எளிதில் ஷேர் செய்யலாம்.

    புதிய ஐஒஎஸ்-இல் டைப்பிங் செய்வதும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக ஏ.ஐ. சார்ந்த மாடலிங் ஆட்டோகரெக்ஷன் வசதியை வழங்குகிறது. டைப் செய்யும் போது ஏதேனும் புரியாத வார்த்தை இருப்பின், அதனை ஐஒஎஸ் 17 கண்டறிந்துவிடுகிறது. புதிய ஐஒஎஸ் 17-இல் உள்ள ஜர்னல் ஆப் கொண்டு பயனர்கள் அவர்களது உணர்வுகளை பதிவு செய்ய முடியும். 

    • மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.
    • புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் சக்திவாய்ந்த M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2023 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023), முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 15.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் 8-கோர் சிபியு மற்றும் 10-கோர் ஜிபியு கொண்ட M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டச் ஐடி, மேஜிக் கீபோர்டு மற்றும் 18 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது.

    6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரிடிசைன் செய்யப்பட்ட 13 இன்ச் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    இத்துடன் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலும் முந்தைய வெர்ஷனை போன்றே மிட்நைட், ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1299 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • சியோமி நிறுவனம் தனது பேட் 6 டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய சியோமி பேட் 6 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மாடல் இந்திய சந்தையில் ஜூன் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டேப்லெட் மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி இந்தியா வெளியிட்டு உள்ளது.

    டீசர்களின் படி புதிய சியோமி பேட் 6 மாடலில் கீபோர்டு டாக் மற்றும் சியோமி ஸ்மார்ட் பென் 2-ம் தலைமுறை மாடலும் அறிமுகமாகிறது. இத்துடன் பேட் 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் சியோமி பேட் 6 மாடல் கிரே மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     

    சியோமி பேட் 6 அம்சங்கள்:

    11 இன்ச் 2880x1800 பிக்சல் 16:10 டிஸ்ப்ளே, 30/48/50/60/90/120/144Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்

    அட்ரினோ 650 GPU

    6 ஜிபி/8 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் எம்ஐயுஐ 14

    13MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன்கள்

    வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    8840 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்த டேப்லெட் மாடல் அமேசான் மற்றும் Mi வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.

    • தோற்றத்தில் ஒன்பிளஸ் பேட் மாடல் ஆப்பிள் ஐபேட் போன்றே காட்சியளிக்கிறது.
    • இதேபோன்ற மதிப்பெண்களை ஆப்பிள் ஐபேட் மாடலும் பெற்று இருந்தது.

    ஒன்பிளஸ் பேட் மாடல் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கண்டறியும் சோதனையை பிரபல யூடியூப் சேனல் நடத்தியது. அதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அனைத்து வித கடினமான சோதனைகளிலும் அசத்தி இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு டேப்லெட் சந்தையில் கிடைக்கும் சிறந்த டேப்லெட்களில் ஒன்றாக ஒன்பிளஸ் பேட் உள்ளது. சாதனங்கள் உற்பத்தியின் போதே மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக டியுரபிலிட்டி இருக்க வேண்டும். ஒன்பிளஸ் பேட் மற்றும் அதனுடன் வழங்கப்படும் ஸ்டைலோ அக்சஸரீ சமீபத்தில் ஜெர்ரிரிக்எவ்ரிதிங்கின் (JerryRigEverything) டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டது.

    அதில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் பெருமளவு டெஸ்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. புதிய டேப்லெட் மாடல் அசத்தலான டியுரபிலிட்டி கொண்டிருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், இது ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியான சாதனங்களை உருவாக்கி வருவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்து இருக்கிறது.

    தோற்றத்தில் ஒன்பிளஸ் பேட் மாடல் ஆப்பிள் ஐபேட் போன்றே காட்சியளிக்கிறது. டியூரபிலிட்டி டெஸ்டின் படி, ஒன்பிளஸ் பேட் மாடலின் ஸ்கிரீனை ஸ்கிராட்ச் செய்ததில் அது ஆறு மதிப்பெண்களை பெற்றது. இதேபோன்ற மதிப்பெண்கள் தான் ஆப்பிள் ஐபேட் மாடலும் பெற்று இருந்தது. ஒன்பிளஸ் பேட் மாடலின் டிஸ்ப்ளே நேரடி தீயில் காண்பிக்கப்பட்ட நிலையிலும், பத்து நொடிகள் வரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

     

    பத்து நொடிகளை கடந்த பிறகே, அதன் பிக்சல்கள் சரியத் துவங்கின. மேலும் இவை நிரந்தரமாக சரியாமல், சிறிதுநேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கே சீராகிவிட்டன. IPS LCD ரக பேனல் இதுபோன்றே இருக்கும். ஒன்பிளஸ் பேட் மாடலின் ஃபிரேம் ஆர்கிடெக்ச்சர், சாதனத்தை சுற்றிலும் மெட்டல் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் சிறிய பிளாஸ்டிக் பகுதி ஸ்டைலோவின் வயர்லெஸ் சார்ஜிங்கிற்காக வழங்கப்பட்டு இருக்கிறது.

    வளைத்து பார்க்கப்படும் பெண்டு டெஸ்ட் (Bend Test) சோதனையில் ஒன்பிளஸ் பேட் மாடல் அதிக உறுதியாக இருந்ததோடு, ஓரளவுக்கு தான் சிதைந்தது. டேப்லெட்-இன் பின்புறத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்த பிறகு தான் ஃபிரேம் மடிந்தது. எனினும், டிஸ்ப்ளேவுக்கு அதிக சேதங்கள் ஏற்படவில்லை. மாறாக வெளியிலும் வரவில்லை. பல்வேறு ஐபேட் மாடல்கள் இந்த சோதனையில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     

    ஒன்பிளஸ் ஸ்டைலோ மாடல் பெண்டு டெஸ்டை எதிர்கொள்ளும் போது நிலைத்திருக்கவில்லை. இதன் உள்புறம் 82 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் பிரெஷர் சென்சிங்கிற்காக காப்பர் பேட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டைலோவில் உள்ள காந்த பொருள், டேப்லெட்டுன் இணைந்திருக்க செய்கிறது.

    ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் பேட் மாடல் டியூரபிலிட்டி டெஸ்டின் பல்வேறு நிலைகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று அசத்தியது. ஆப்பிள் ஐபேட் மாடலுடன் ஒப்பிடும் போதும், இந்த டேப்லெட் அதன் உறுதித்தன்மை விவகாரத்தில் சிறந்து விளங்குவது தெரியவந்துள்ளது.

    • 2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஏ.ஆர். பற்றிய தகவலை சூசகமாக தெரிவித்தது.
    • WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சார்ந்த அறிவிப்புகளை வெளியிடலாம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC 2023) ஜூன் 5 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சுவாரஸ்யம் நிறைந்த அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரியவந்துள்ளது.

    அதன்படி 2023 WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) சார்ந்த அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. இது ஆப்பிள் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் அறிவிப்பாக இருக்கும்.

    கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் ஆக்மெண்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர்.) சார்ந்த தகவல்களை மிக ரகசியமாக WWDC வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளது. 2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஏ.ஆர். பற்றிய தகவலை சூசகமாக தெரிவித்தது. அப்போது முதல் இவ்வாறு சூசகமாக தெரிவிப்பதை ஆப்பிள் வழக்கமாக கொண்டுள்ளது.

    இந்த ஆண்டிற்கான சூசக தகவலை காண, ஆப்பிள் ஈவன்ட்ஸ் (Apple Events) வலைப்பக்கத்தினை ஐபோன் அல்லது ஐபேட் சாதனத்தில் திறக்க வேண்டும். அங்கு ஆப்பிள் மார்ஃபிங் லோகோவை தட்டினாலே ஏ.ஆர். பற்றிய தகவலை பார்க்க முடியும். இதில் ஆப்பிள் மார்ஃபிங் லோகோ, ஜூன் 5, 2023 தேதி உள்ளிட்ட தகவல்கள் அழகாக கண் முன் வந்து செல்கிறது.

    பயனர்கள் ஆப்பிள் லோகோவினை, அவர்கள் விரும்பும் வகையில் சுழற்றவும், திரையில் மென்மையாக கிள்ளி அதனை இழுக்கவும், சுருக்கவும் முடியும். இதுதவிர ஏ.ஆர். லோகோவை கிரே நிற பேக்கிரவுண்டில் அழகாக சுழல்வது போன்று பார்க்கலாம். 

    • ஒப்போ/ஒன்பிளஸ்- ஹசெல்பிலாடு, விவோ-செய்ஸ் மற்றும் சியோமி-லெய்கா போன்ற கூட்டணிகள் இணைந்து செயல்படுகின்றன.
    • ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் குறைவு.

    ஸ்மார்ட்போன் மற்றும் கேமரா உற்பத்தியாளர்கள் இடையே கூட்டணி அமைப்பது மிகவும் சாதாரண விஷயம் தான். முன்னதாக இதுபோன்ற கூட்டணிகளை பல நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன. இந்த வரிசையில் வெய்போவில் ஓரளவுக்கு நம்பத்தகுந்த டிப்ஸ்டராக அறியப்படும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேனான் கேமரா பிராண்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே ஒப்போ/ஒன்பிளஸ்- ஹசெல்பிலாடு, விவோ-செய்ஸ் மற்றும் சியோமி-லெய்கா போன்ற கூட்டணிகள் சந்தையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், ஆப்பிள், சாம்சங், ஹூவாய், அசுஸ், கூகுள், ரியல்மி, ஹானர், சோனி மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்கள் கேமரா உற்பத்தியாளர்களுடன் கூட்டணி அமைக்காமல் உள்ளன.

    இவற்றில் ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் குறைவுதான். சோனி நிறுவனம் தனக்கென சொந்த கேமரா பிரிவை கொண்டிருக்கிறது. சீனாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருப்பதை அடுத்து, ரியல்மி, ஹானர் அல்லது ஹூவாய் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
    • வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியில் சின்க் செய்யப்படுகிறது.

    ஒபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வ சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலியை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் பிரபல ஏஐ சாட்பாட் சேவையை முன்பை விட எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி செயலி அதன் வெப் வெர்ஷன் சாட் ஹிஸ்ட்ரியை சின்க் செய்து வழங்குகிறது.

    மேலும் ஒபன் ஏஐ நிறுவனத்தின் ஒபன்-சோர்ஸ் ஸ்பீச் ரெகஃனிஷன் மாடலான (Speech Recognition Model) விஸ்பர் மூலம் ஐஒஎஸ் ஆப் வாய்ஸ் இன்புட் வசதியை வழங்குகிறது. பயனர்கள் வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியிலும் சின்க் செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெப் வெர்ஷனில் இருந்த சாட்கள் செயலியிலும் பார்க்க முடியும்.

     

    சாட்ஜிபிடி பிளஸ் சந்தாதாரர்கள் ஐஒஎஸ் செயலியில் பிரத்யேக பலன்களை பெற முடியும். இதில் ஜிபிடி-4 மேம்பட்ட திறன்கள், புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி, அதிவேகமாக பதில்களை பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சாட்ஜிபிடி செயலி உடனடி தீர்வுகள் மட்டுமின்றி, அறிவுரை, தொழில்முறை கருத்துக்கள் என்று பல்வித கேள்விகளுக்கு நேர்த்தியாக பதில் அளிக்கிறது.

    புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் இந்த செயலி கிடைக்கிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த செயலி வெளியிடப்பட இருக்கிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷன் செயலியும் விரைவில் வெளியிடப்படும் என்று ஒபன்ஏஐ தெரிவித்துள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகலாம்.
    • ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் 5 ஆம் தேதி "சிறப்பு நிகழ்ச்சி" நடத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆப்பிள் WWDC 2023 டெவலப்பர் நிகழ்வின் அங்கமாக நடைபெற இருக்கிறது. 2023 ஆண்டிற்கான ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 5 ஆம் தேதி துவங்கி ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு நிகழ்ச்சி குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில் ஆப்பிள் ஹெட்செட்டும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட் மிகவும் சக்திவாய்ந்த XR ஹெட்செட் ஆக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் இதன் விலையும் பிரீமியம் பிரிவிலேயே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த ஹெட்செட் 4K மைக்ரோ OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் சோனி, டூயல் பிராசஸர்கள் TSMC, 12 கேமராக்கள் மற்றும் வெளிப்புற பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்செட்டில் இருந்தபடி ஆக்மெண்டெட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி மோட்களிடையே ஸ்விட்ச் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஆப்பிள் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விலை 3 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்- ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போட் லூனார் கனெக்ட் ப்ரோ மாடலின் வரிசையில் புதிய ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலில் 1.91 இன்ச் HD டிஸ்ப்ளே, 2.5D வளைந்த டிசைன், 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. சீம்லெஸ் மற்றும் மெட்டல் டிசைன் கொண்டிருக்கும் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படு இருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த வாட்ச் ஹார்ட் ரேட் மற்றும் உடலின் சுவாச அளவுகளை டிராக் செய்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் நேரலை கிரிகெட் ஸ்கோர்கள், வானிலை அப்டேட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கும் வசதி உள்ளது.

     

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் அம்சங்கள்:

    1.91 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்

    2.5D வளைந்த டிசைன், மெட்டாலிக் ஃபிரேம்

    ப்ளூடூத் 5.3

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    ENx மூலம் இரைச்சல் இல்லா அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி

    100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    உடல்நல டிராகிங் செய்யும் சென்சார்கள்

    IP68 டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    300 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

    ஸ்மார்ட் அலெர்ட்கள்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதிகரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிலாக், கூல் கிரே, டீப் புளூ மற்றும் மரூன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ×