என் மலர்
தொழில்நுட்பம்
- ஜியோ புத்தாண்டு சலுகையில் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
- இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 புத்தாண்டு சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ பிரீபெயிட் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பழைய வருடாந்திர பிரீபெயிட் சலுகைகளை ஜியோ மாற்றியமைத்துள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக ஜியோ புத்தாண்டு சலுகையில் பயனர்களுக்கு 24 நாட்கள் வரை கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நீண்ட கால பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையான ரூ. 2,999-இல் கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில், பயனர்கள் வழக்கமான 365 நாட்கள் இன்றி கூடுதலாக 24 நாட்கள் வரை நீண்ட கால சலுகையை பயன்படுத்தலாம். இதன் மூலம் வருடாந்திர ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு மொத்தத்தில் 389 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.
- நத்திங் போன் 2a அம்சங்களும் இடம்பெற்று இருந்தன.
- முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
நத்திங் நிறுவனத்தின் போன் 2a மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நத்திங் நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின. இத்துடன் நத்திங் போன் 2a அம்சங்களும் இடம்பெற்று இருந்தன.
அதன்படி புதிய நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் AMOLED பேனல், 1084x2412 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் உள்ள டிஸ்ப்ளேவை BOE மற்றும் Visionox உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் பிளாக் நிற வேரியண்ட் ரூப்ரேன் பிளாக் என்றும் வைட் நிற வேரியண்ட் அசுனிம் வைட் வால்பேப்பர்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
முதற்கட்டமாக நத்திங் போன் 2a மாடல் இந்தியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் "நத்திங் டு சீ" என்ற நிகழ்வுக்கு நத்திங் தயாராகி வருகிறது. எனினும், இந்த நிகழ்வில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
- செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
- அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றி தெரியவந்துள்ளது.
உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வதில் அதிவேகமாக முடிவெடுக்கின்றனர். செயலிகள் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை பொருத்தும், பயனர் தேவைகளை எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதை பொருத்தும் செயலி ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளப்படும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பயனர்கள் எந்த அளவுக்கு செயலிகளை இன்ஸ்டால் மற்றும் அன்-இன்ஸ்டால் செய்கின்றனர் என்ற வழக்கம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும், ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கையில் 92.7 சதவீதம் ஆகும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர். தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள உலகில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகளவில் சுமார் 240 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஸ்னாப்சாட் தளத்தை பயன்படுத்துவோரில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்சாட் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடியுள்ளனர். இது இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும் போது குறைவு ஆகும்.
- போக்கோ M சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. போக்கோ M6 5ஜி பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP ஏ.ஐ. கேமரா, இரண்டாவது சென்சார் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

போக்கோ M6 5ஜி அம்சங்கள்:
6.74 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்
ARM மாலி G57 MC2 GPU
அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம்
அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
5MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போன் கேலக்டிக் பிளாக் மற்றும் ஒரியன் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என்று துவங்குகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 50 ஜி.பி. வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
- மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.
சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.
அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
"நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
- இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வி நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோர் எவ்வித கூடுதல் கட்டணம் மற்றும் சந்தா செலுத்தாமல் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
ஒரு வருடத்திற்கான ஒ.டி.டி. பலன்கள் மட்டுமின்றி இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இதே போன்ற வருடாந்திர பலன்களை கொண்ட சலுகையை வழங்கி வருகின்றன.

புதிய சலுகை குறித்து வி வலைதளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில், ரூ. 3 ஆயிரத்து 199 விலை கொண்ட ரிசார்ஜ் சலுகையில் மொத்தம் 730 ஜி.பி. டேட்டா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
இதுதவிர புதிய சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வார காலத்தில் பயன்படுத்தி முடிக்காத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர் உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
லாவா நிறுவனத்தின் ஸ்டாம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

லாவா ஸ்டாம் 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
லாவா ஸ்டாம் 5ஜி ஸ்மார்ட்போன் கேல் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 13 ஆயிரத்து 499 என்று துவங்குகிறது. இதன் விற்பனை டிசம்பர் 28-ம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது. இத்துடன் வங்கி சலுகையாக அதிகபட்சம் ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- சாம்சங் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாடல்களை அறிமுகம் செய்தது.
- ஒப்போ ஃபைண்ட் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒவ்வொரு ஆண்டை போலவே, இந்த ஆண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மாடல்கள் அறிமுகமாகின. முன்னணி நிறுவனங்கள் துவங்கி புதிதாக களமிறங்கிய நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களை எந்த மாடலை வாங்குவது என்று குழம்ப செய்தன. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த மாடல்கள் ஒருபுறம் கவனம் ஈர்த்தன.
மறுப்பக்கம் யாரும் எதிர்பாராமல் அறிமுகமாகி பிறகு, நல்ல வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்களும் சந்தையில் கணிசமான விற்பனையை பதிவு செய்தன. அந்த வரிசையில், 2023 ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

ஐகூ 11 5ஜி:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி மாதத்திலேயே அறிமுகமான ஐகூ 11 5ஜி பிரீமியம் டிசைன், அசத்தலான டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ஐகூ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி:
2023 பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான கேலக்ஸி S3 அல்ட்ரா 5ஜி மாடல் அசத்தலான அம்சங்கள், சிறப்பான கேமரா சென்சார்கள் மற்றும் அதிரடியான பிராசஸர் கொண்டிருக்கிறது. இது சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒன்பிளஸ் 11:
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சந்தையில் அப்போது அறிமுகமானதில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தது. மெட்டல் மற்றும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ X90 ப்ரோ:
பிரீமியம் டிசைன், அழகிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்டவை விவோ X90 ப்ரோ மாடலின் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல் இது ஆகும். முற்றிலும் புதிய டைட்டானியம் டிசைன், சக்திவாய்ந்த பிராசஸர், தலைசிறந்த கேமரா சென்சார்கள் உள்ளிட்டவை ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 5, ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன. ஃப்ளிப் போன் பிரிவில் ஒப்போ ஃபைண்ட் N3 அதன் அம்சங்கள், டிசைன் மற்றும் விலை என அனைத்து பிரிவுகளிலும் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.
- ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.
- வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் வி-யின் ஒ.டி.டி. பலன்களை வழங்கும் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
சத்தமின்றி அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையின் விலை ரூ. 202 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது வி வழங்கி வரும் வழக்கமான சலுகைகள் போன்றில்லாமல் ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.

கோப்புப்படம்
ஒ.டி.டி. பலன்களை வழங்கும் வி சலுகையுடன் வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது. இத்துடன் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைகளை வழங்குகிறது. இதில் வாய்ஸ் காலிங், எஸ்.எம்.எஸ். அல்லது டேட்டா போன்ற எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகை ஒரு மாத காலத்திற்கு வேலிடிட்டி கொண்டுள்ளது.
வி. ரூ. 202 சலுகையுடன் எந்தெந்த ஒ.டி.டி. பலன்கள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதில் சோனி லிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஹங்காமா மற்றும் பல்வேறு ஒ.டி.டி. பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. இந்த சலுகை வி செயலி மற்றும் வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
- கேலக்ஸி A14 5ஜி மாடலில் எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்படுகிறது.
- இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ரூ. 16 ஆயிரத்து 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A14 5ஜி மாடல் தற்போது ரூ. 13 ஆயிரத்து 499 விலையில் கிடைக்கிறது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலுக்கானது ஆகும். இதில் ஆக்சிஸ் வங்கி வழங்கும் ரூ. 1000 கேஷ்பேக் தொகையும் அடங்கும்.

கேலக்ஸி A14 5ஜி மாடலின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 999 என்று மாறியிருக்கிறது. இதிலும் ரூ. 1000 கேஷ்பேக் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A14 5ஜி மாடலில் 6.6 இன்ச் HD+LCD ஸ்கிரீன், இன்ஃபினிட்டி வி நாட்ச், 90Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 1330 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி A14 5ஜி மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A14 5ஜி மாடலில் சாம்சங்கின் வாய்ஸ் ஃபோக்கஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் அழைப்புகளின் போது பின்னணியில் உள்ள சத்தத்தை தடுக்கும்.
இந்த அம்சம் வீடியோ மற்றும் வாய்ஸ் காலிங் செயலிகளான கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், வாட்ஸ்அப் மற்றும் ஜூம் உள்ளிட்டவைகளிலும் சீராக வேலை செய்யும். இத்துடன் கேலக்ஸி A14 5ஜி மாடலுக்கு நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட், இரண்டு ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்டேட்களை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஆப்பிள் வாட்ச்களை இறக்குமதி செய்ய சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை.
- விற்பனையை மீண்டும் தொடங்கும் பணிகளில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ இடையே சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் (ஐ.டி.சி.) நடைபெற்று வந்த காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அமெரிக்க சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களால் வாங்க முடியாது. அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் இரு சாதனங்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 9டு5மேக் வெளியிட்டுள்ள தகவல்களில், பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பாக மசிமோ நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமைகளை ஆப்பிள் மீறியது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மசிமோ காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் விற்பனையை மீண்டும் தொடர்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிசம்பர் 25-ம் தேதிக்குள் இறுதி முடிவை எடுக்க இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆப்பிள் மற்றும் மசிமோ இடையே காப்புரிமை சார்ந்த பிரச்சினை கடந்த 2020 ஆண்டு முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு.
- வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மற்றும் ரேசர் 40 மாடல்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இரு மாடல்களின் விலையும் ரூ. 10 ஆயிரம் வரை குறைந்துள்ளது. மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா ரேசர் 40 மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
புதிய விலை விவரங்கள்:
விலை குறைப்பின் படி மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடலின் தற்போது ரூ. 79 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. மோட்டோரோலா ரேசர் 40 (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி.) மாடலின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடல் இன்ஃபனைட் பிளாக் மற்றும் விவா மஜென்டா நிறங்களிலும், ரேசர் 40 மாடல் சேஜ் கிரீன், சம்மர் லிலக் மற்றும் வென்னிலா கிரீம் நிறங்களிலும் கிடைக்கிறது. குறுகிய கால சலுகையாக இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 24-ம் தேதி வரை வழங்கப்படும்.
இத்துடன் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலை வாங்கும் போது ரூ. 7 ஆயிரம் உடனடி தள்ளுபடியும், ரேசர் 40 மாடலை வங்கும் போது ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவைதவிர வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.






