search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு போட்டி"

    • போட்டியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

     தாராபுரம்:

    தாராபுரம் காவல்துறை மற்றும் விழுதுகள் அமைப்பு சார்பில் தகவல் உரிமை அறியும் சட்டம் குறித்து விழிப்புணர்வு வேக நடை போட்டி நடைபெற்றது.

    போட்டியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    வேக நடை போட்டி தாராபுரம் காவல் நிலையம் முன்பு புறப்பட்டு பெரிய கடை வீதி ,டி.எஸ்.கார்னர், பழைய காவல் நிலைய வீதி, கொழிஞ்சி வாடி சாலை வழியாக மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.   

    • குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி வழங்கினார்
    • மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்

     ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் வளர்மதி தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள்.

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பொதுப்பிரச்சினைகள் குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 201 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு தெரிவித்திட உத்தரவிட்டார்.

    முன்னதாக ராணிப்பேட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கொண்டு வட்டார அளவில் போட்டி கள் நடத்தப்பட்டடது.

    இதில் வெற்றி பெற்ற 72 மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வளர்மதி வழங்கினார். இதில் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக ஈர நில தின விழாவில் நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு புலிகள் காப்பக துணை இயக்குநர் வழங்கினார்.
    • அதனையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வன அலுவலகம் சார்பில் உலக ஈரநில தின விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.

    இதில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஈர நிலங்கள் அரிய வகை பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு பொருத்தமான வாழ்விடத்தை வழங்குகிறது.

    சதுப்பு நிலங்கள் குளிர்கால பறவைகள் மற்றும் பல்வேறு விலங்கினங்களுக்கான புகலிடமாகவும் உள்ளது. சதுப்பு நிலங்கள் நீர் சேமிப்பு செயல்பாடுகளில் முக்கிய பங்குவகிப்பது மட்டுமின்றி வெள்ளத்தில் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதன் மூலம் வெள்ள அபாயத்தையும் குறைக்கிறது. ஈரநிலங்கள் ''பூமியின் நுரையீரல்'' ஆகும். அவை வளிமண்டலத்தில் உள்ள மாசுகளை சுத்தம் செய்கின்றன.அதனடிப்படையில், ஆண்டு தோறும் பிப்ரவரி 2-ந்தேதி உலக ஈர நிலநாள் கொண்டாடப்படுகிறது. பூமிக்கு ஈரநிலங்களின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை மக்களி டையே ஏற்படுத்துவதே இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகள் பல்வேறு குளங்களின் நீர் ஆதாரமாக இருக்கி ன்றன. அதனையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்பட வன சரக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு இடையே விளம்பரம் மற்றும் பத்திரிகை தயாரிக்கும் போட்டிகள் நடந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. முள்ளக்காடு சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எனது வாக்கு எனது உரிமை,ஒரு வாக்கின் பலம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு இடையே விளம்பரம் மற்றும் பத்திரிகை தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.

    கல்லூரியின் நிர்வாக குழு தலைவர்கள் ஸ்டீபன்,வினோத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் நிர்வாக அதிகாரி வீரராஜன், கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் நடை பெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • காட்டுப்புத்தூர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் டெபில், பெஞ்சுகள் வழங்கப்பட்டது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி (மேற்கு) நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளிமாணவ-மாணவிகளுக்கு காட்டுப்புத்தூர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பெற்ற விழிப்புணர்வு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதாசுரேஷ் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் சுதாசிவசிவராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் நீதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல்அமீது வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.மேலும் ரூபாய் 5 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டெபில் பெஞ்சுகளை வழங்கினார்.

    இதில் தொட்டியம் பேரூராட்சித் தலைவர் சரண்யாபிரபு, தொட்டியம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால.ந திருஞானம் காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.எஸ்.டி. செல்வராஜ் தொட்டியம் நகர கழக செயலாளர் விஜய் ஆனந்த் மற்றும் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி பணியாளர்கள் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நடந்தது
    • 188 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

    பெரம்பலூர்:

    44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கைகளில் செஸ் போர்டு வடிவிலான 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர்தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவிகளின் கைகளில் செஸ் போர்டு, செஸ் போர்டில் உள்ள நாணயங்கள் போன்ற வடிவிலான மெஹந்தி வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • பொதுமக்களுக்கு கோலப் போட்டி, வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்த முடிவு
    • மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூரில் மாதம் தோறும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் தீவிர துப்புரவு இயக்கம் மேற்கொண்டு அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் தூய்மைப் பணி மேற்கொள்ள முடிவு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி நாளை தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது. தூய்மைப் பணி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கோலப் போட்டி, வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகம் அடங்கிய போஸ்டர் உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்தது.

    ×