search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி  சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு போட்டி
    X

    போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவருக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    தூத்துக்குடி சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு போட்டி

    • சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு இடையே விளம்பரம் மற்றும் பத்திரிகை தயாரிக்கும் போட்டிகள் நடந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. முள்ளக்காடு சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எனது வாக்கு எனது உரிமை,ஒரு வாக்கின் பலம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு இடையே விளம்பரம் மற்றும் பத்திரிகை தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.

    கல்லூரியின் நிர்வாக குழு தலைவர்கள் ஸ்டீபன்,வினோத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் நிர்வாக அதிகாரி வீரராஜன், கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×