தூய்மைப்பணி விழிப்புணர்வு போட்டி நடத்த முடிவு

பொதுமக்களுக்கு கோலப் போட்டி, வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்த முடிவுமாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் :

திருப்பூரில் மாதம் தோறும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் தீவிர துப்புரவு இயக்கம் மேற்கொண்டு அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் தூய்மைப் பணி மேற்கொள்ள முடிவு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாளை தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது. தூய்மைப் பணி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கோலப் போட்டி, வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகம் அடங்கிய போஸ்டர் உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com