விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

உலக ஈர நில தின விழாவில் நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு புலிகள் காப்பக துணை இயக்குநர் வழங்கினார். அதனையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும்.
விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் பரிசு வழங்கினார்.
விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் பரிசு வழங்கினார்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வன அலுவலகம் சார்பில் உலக ஈரநில தின விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.

இதில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஈர நிலங்கள் அரிய வகை பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு பொருத்தமான வாழ்விடத்தை வழங்குகிறது.

சதுப்பு நிலங்கள் குளிர்கால பறவைகள் மற்றும் பல்வேறு விலங்கினங்களுக்கான புகலிடமாகவும் உள்ளது. சதுப்பு நிலங்கள் நீர் சேமிப்பு செயல்பாடுகளில் முக்கிய பங்குவகிப்பது மட்டுமின்றி வெள்ளத்தில் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதன் மூலம் வெள்ள அபாயத்தையும் குறைக்கிறது. ஈரநிலங்கள் ''பூமியின் நுரையீரல்'' ஆகும். அவை வளிமண்டலத்தில் உள்ள மாசுகளை சுத்தம் செய்கின்றன.அதனடிப்படையில், ஆண்டு தோறும் பிப்ரவரி 2-ந்தேதி உலக ஈர நிலநாள் கொண்டாடப்படுகிறது. பூமிக்கு ஈரநிலங்களின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை மக்களி டையே ஏற்படுத்துவதே இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகள் பல்வேறு குளங்களின் நீர் ஆதாரமாக இருக்கி ன்றன. அதனையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்பட வன சரக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com