search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குகள் பதிவு"

    • மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதி முறைகள் ஆகியவற்றை பின்பற்றி நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறையினர் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி நெல்லை புறநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 27 வழக்குகளும், மாநகரப்பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தென்காசி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 200 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன்.

    • வாகன பதிவு எண் எழுதுவதில் விதிமீறல்; மதுரையில் 1,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    • ஒரே நாளில் ரூ.35ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிக மான வாகனங்கள் இயக்கப்படுகிறது. அவற்றுக்கான வாகன பதிவெண் பலகையில் எழுத்துக்கள் இப்படித்தான் இடம்பெற வேண்டும் என்று மோட்டார் வாகனச்சட்டம் வரையறுத்துள்ளது.

    அதன்படி 70 சிசி-க்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களின் முன்புறம், 3.0 மிமீ உயரம்- 5 மி.மீ தடிமன்- 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் மற்றும் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    அதேபோல வாகனங்க ளின் பின்புறம் 35 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகளும், 40 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் 65 மி.மீ உயரம், 10 மி.மீ தடிமன், 10 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் அமைய வேண்டும்.

    சொந்த வாகனமாக இருந்தால் வெள்ளை பலகையில் கறுப்பு நிறத்திலும், வணிக வாகனமாக இருந்தால் மஞ்சள் பலகையில் கறுப்பு நிறத்திலும் எழுத்துகள் இருக்க வேண்டும். அவை தெளிவாக இருப்பது கட்டாயம். ஆனால் மதுரை மாவட்டத்தில் வலம் வரும் பெரும்பாலான வாகனங்களின் பதிவு எண் பலகையில், எண் கணிதப்படி ராசியான எண்ணை பெரிதாகவும் மற்றவற்றை சிறியதாகவும் எழுதுகின்றனர்.

    தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்ள, தூய தமிழில் பதிவெண் எழுதுகின்றனர்.

    அடுத்தபடியாக கட்சி சின்னம், கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி, சினிமா நடிகர்கள் மற்றும் சுவாமி ஆகிய படங்கள் ஒட்டப்படுகிறது. அரசு அதிகாரிகள் பணியாற்றும் துறையை எழுதுகின்றனர். பதிவெண்ணில் முதல் 3 இலக்கம் 0 ஆக இருந்தால், அதைச்சேர்த்து எழுதாமல் 4-வதாக உள்ள எண்ணை மட்டும் பெரிதாக எழுது கின்றனர். 8055 என்ற எண்ணை BOSS என்று எழுதுகின்றனர்.

    மோட்டார் வாகனச் சட்டத்தில் வழங்கப்பட்ட வரன்முறைகளைத் தாண்டி பதிவெண் பலகையில் இடம்பெறும் கூடுதலான எழுத்து கூட விதிமீறல் தான். அதன்படி முதல் முறை என்றால் ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.

    அபராதம் என்பதற்கும் மேலாக விபத்து நேரும் பட்சத்தில் பதிவெண் தெளிவாக இருந்தால் மட்டுமே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, பாதிப்பை ஏற்படுத்திய நபர் பற்றிய விபரம் தெரியவரும். ஆனால் வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை கண்டு கொள்வது இல்லை. பதிவெண் போர்டை விளம்பரம்- அறிவிப்பு பலகையாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளும் விதிவிலக்கு அல்ல.

    எனவே வாகன பதிவுஎண் பலகையில் விதிகளை மீறி பதிவு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி மதுரை மாநகரில் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், செல்வின் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் வாகன பதிவு எண் பலகை அதிரடி சோதனை கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    அதன்படி இதுவரை 1699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர் தல்லாகுளம் சரகம் ஆகிய பகுதிகளில் நேற்று போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரே நாளில் 735 வாகனங்கள் சிக்கின. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் மட்டும் ஒரே நாளில், ரூ. 35 ஆயிரம் அபராதத்தொகை வசூலாகி உள்ளது.

    அடுத்தபடியாக தகுதிச்சான்று பெற வருவோர் வாகனங்களில் இதுபோன்ற விதிமீறல் இருந்தால் சான்று வழங்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    • ரூ.7.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • பல்வேறு இடங்களில் சிக்னல்கள் பழுதாகியிருக்கிறது.

    கோவை,

    கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில், 16.11 லட்சம் வழக்குகள் பதிவானது. இதன் மூலமாக ரூ.6.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

    கடந்த 2022-ம் ஆண்டில் அதிவேகம் வகையில் 18,903 வழக்குகள், ஓவர் லோடு ஏற்றியதாக 106 வழக்குகள், சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றி சென்றதாக 3,486 வழக்குகள், குடிபோதையில் வாகனத்தில் சென்றதாக 7,736 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 15,634 வழக்குகள், சிக்னல் மீறியதாக 56,065 வழக்குகள், ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியதாக 4,87,338 வழக்குகள், சீட்பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டியதாக 35,170 வழக்குகள், அதிக உயரத்திற்கு லோடு ஏற்றி சென்றதாக 7,676 வழக்குகள் என மாநகரில் மொத்தமாக 10.48 லட்சம் வழக்குகள் பதிவானது.

    இதன் மூலமாக ரூ.7.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. ஸ்பாட் பைன் என்ற வகையில் ரூ.6.10 கோடி வசூலிக்கப்பட்டது.கடந்த 2021-ம் ஆண்டில் 866 விபத்துகள் நடந்தது. இதில் 234 பேர் இறந்தனர், 691பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டில் 1,083 விபத்துகளில், 267 பேர் இறந்துவிட்டனர். 939 பேர் காயமடைந்துள்ளனர். 1

    கடந்த ஆண்டில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக குறைவாக வழக்குப்பதிவு செய்தும் அபராதம் அதிகமாக பெறப்பட்டுள்ளது. மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் சிக்னல்கள் பழுதாகியிருக்கிறது.

    மேம்பால பணிகள் அதிகளவு நடக்கிறது. வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதியில் நெரிசலில் காத்திருக்கும் வாகனங்கள் வேகமாக செல்ல முயற்சி செய்யும்போது விபத்து ஏற்படுவதாக தெரிகிறது. அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில் விபத்துகள் அதிகமாகி வருவதாக தெரியவந்துள்ளது.

    காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் சென்று வருவது அதிகமாக இருக்கிறது. அவினாசி ரோட்டில் இதர ரோடுகளை காட்டிலும் இரு மடங்கு வாகனங்கள் செல்கிறது. ஒரே ரோட்டில் அதிக வாகனங்கள் செல்வதால் பல கி.மீ தூரத்திற்கு நெரிசல் நீடிக்கிறது. மேம்பால பணி முடிந்தால் மட்டுமே இந்த ரோட்டில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டன.
    • சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 4 லட்சத்து 16 ஆயிரத்து 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டன.

    குறிப்பாக சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 4 லட்சத்து 16 ஆயிரத்து 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.5 கோடியே 78 லட்சத்து 81 ஆயிரத்து 200 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 21,945 ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதில் 21,837 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 7,400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் சாலை விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    விபத்து மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 7268 கண்காணிப்பு கேமிராக்கள் உட்பட மொத்தம் 12,923 கண்காணிப்பு கேமிராக்கள் பயன்பாட்டில் உள்ளது.

    கடந்த ஆண்டில் 39 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் ஒரு நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர்.

    966 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது சிறப்பு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்த ப்பட்ட கோட்டாட்சியர் மூலம் நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக 51 குற்றவாளிகளை கண்காணிக்கும் பொருட்டு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இணையதள மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இணைய வழி மூலமாக மோசடி செய்து ஏமாற்றப்பட்ட ரூ.55 லட்சத்து 11 ஆயிரத்து 41 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஆண்டு 240 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு காணாமல் போன 685 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டில் 3,246 பொதுமக்கள் குறை தீர்ப்பு கோரிக்கை மனு பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து சட்ட ஒழுங்கை நன்முறையில் பராமரிக்கவும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சாலை விபத்துகளை தடுக்கவும் போலீஸ் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 

    • சிறுமிகள், சிறுவர்களிடம் யாரேனும் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • யாரேனும் பொய் புகார் அளித்தால் அவர்களுக்கும் 6 மாதம் வரை தண்டனை கிடைக்கும்.

    கோவை,

    18 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்களிடம் யாரேனும் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடந்த 2012-ம் ஆண்டு முதல் போக்சோ சட்டப்பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. விரைவில் ஜாமீனில் வெளியே வர முடியாது. எனவே, யாரேனும் பொய் புகார் அளித்தால் அவர்களுக்கும் 6 மாதம் வரை தண்டனை கிடைக்கும்.

    மேலும் போக்சோ சட்டம் குறித்து பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் என கருதி பெற்றோர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க முன்வராமல் இருந்தனர்.

    எனவே, இந்த சட்டத்திருத்தத்தில் பாதிக்கப்படுபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் வெளியே தெரியக்கூடாது, ரகசியமாக விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் அதிகளவில் போலீஸ் நிலையங்களில் வர தொடங்கின. அவர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. கோவை சரகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு போக்சோ வழக்குகள் அதிகமாக உள்ளது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    போக்சோ வழக்குகள் குறித்து முன்பைவிட தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, புகார் அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு கோவை சரகமான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் 431 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக இந்த ஆண்டு 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று கடந்த ஆண்டு 17 பேருக்கு போக்சோ வழக்கில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 87 பேருக்கு போக்சோ வழக்கில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×