search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ பயிற்சி"

    • கூட்டுப் பயிற்சியில் மூன்று நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்று இருக்கின்றன.
    • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் இலக்கை கண்டறிந்து கண்காணிப்பதற்கான பயிற்சி நடந்தது.

    சியோல்:

    வடகொரியா-தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இதில் மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது. இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

    இந்நிலையில் சர்வதேச கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடு கள் இணைந்து முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது.

    வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் கூட்டுப் போர் பயிற்சி நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டுப் பயிற்சியில் மூன்று நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்று இருக்கின்றன. இதில் ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணையின் இலக்கை கண்டறிந்து கண்காணிப்பதற்கான பயிற்சி நடந்தது.

    இது தொடர்பாக தென் கொரிய கடற்படை கூறும்போது, வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டு ராணுவ பயிற்சி ஒரு வாய்ப்பாகும்.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு பதிலடி கொடுப்பதை எங்கள் கடற்படையின் திறன்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த முத்தரப்பு ஒத்துழைப்பானது எங்களின் மதிப்புகளை பிரதிபலிப்பதுடன் மண்டல நிலைத்தன்மைக்கு சவாலாக இருப்பவர்களுக்கு எதிரான தீர்மானத்துடன் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    • 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.
    • கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர்.

    பொக்ரான்:

    ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள ஜெய்சல்மார் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    பாலைவன பகுதியான இங்கு பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பது, மறைவிடங்களில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக ராணுவ வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வார்கள்.

    வழக்கம் போல ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது இங்கிருந்து 3 ஏவுகணைகள் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த ஏவுகணைகள் விண்ணில் பாதை மாறி எல்லைக்கு அப்பால் சென்று அங்கிருந்த கிராமங்களில் உள்ள வயல்வெளி பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    அந்த சமயம் பயங்கர வெடிசத்தம் போல கேட்டது. ஏவுகணை விழுந்த பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டது. இந்த 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.

    இந்த ஏவுகணைகள் 10 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும்.

    கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர். இதில் ஆஜசர் என்ற கிராமத்தில் ஒரு ஏவுகணையின் சிதறிய பாகங்களும், அருகில் இருந்த மற்றொரு கிராமத்தில் 2-வது ஏவுகணையின் பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

    ஆனால் 3-வது ஏவுகணை எங்கே விழுந்தது? என்று தெரியவில்லை. அதனை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

    ஏவுகணை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

    ×