search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் பஸ் மோதல்"

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர்கள் வெங்கடேசன் (21), பாஸ்கர்.

    இவர்கள் 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார்.

    காஞ்சீபுரம் - அரக்கோணம் சாலையில் புதுப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து காளஹஸ்தி நோக்கி சென்ற தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், வெங்கடேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த விபத்தில் பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து தொடர்பாக காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மற்றும் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டுசாமி. இவரது மகன் சாய்ஹரிகரன் (வயது 22). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் அவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு சாய் ஹரிகரனும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் முத்துராஜ் (20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் புறப்பட்டுச் சென்றனர்.

    இரவு 10 மணி அளவில் அவர்கள் மயிலாடியை கடந்து சிறிது தூரம் வந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து பெருமணல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாய்ஹரிகரனும், முத்துராஜூம் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த சாய்ஹரிகரனை அந்த பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் ஜெகதீஷ் (30) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர் பொன்மனை பகுதியைச் சேர்ந்தவர். விபத்தில் பலியான முத்து ராஜ், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஆவார்.

    நாகர்கோவிலில் நடந்த மற்றொரு விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார். இளங்கடை பாவாகாசீம் நகரைச் சேர்ந்தவர் பீர்முகம்மது (82). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து மருந்து வாங்குவதற்காக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பறக்கை நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பீர்முகம்மது பலியானார்.

    பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தனியார் பஸ் கம்பெனி மேலாளர் தலை நசுங்கி பலியானார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புறங்கனி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவர் தனியார் பஸ் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் சாத்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த செந்தில் தலையில் பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று பஸ் விபத்தில் இறந்த செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த திருமலை அகரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பெரியசாமிக்கும், கொள்ளத்தங்குறிச்சி பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டின் பெற்றோர்களும் முடிவு செய்தனர். அதற்காக பெரியசாமி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெரியசாமிக்கும், விஜயகுமாரிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் நந்திமங்கலம் சென்றிருந்தார்.

    அங்கிருந்து பெரியசாமி சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இரவு 9.50 மணியளவில் அவரது மோட்டார் சைக்கிள் திருமலையகரம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லூர் நோக்கி சென்ற அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பெரியசாமி தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச் சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×