search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலி
    X

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலி

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர்கள் வெங்கடேசன் (21), பாஸ்கர்.

    இவர்கள் 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார்.

    காஞ்சீபுரம் - அரக்கோணம் சாலையில் புதுப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து காளஹஸ்தி நோக்கி சென்ற தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், வெங்கடேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த விபத்தில் பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து தொடர்பாக காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×