என் மலர்
நீங்கள் தேடியது "bus motorcycle crash"
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புறங்கனி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவர் தனியார் பஸ் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் சாத்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த செந்தில் தலையில் பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று பஸ் விபத்தில் இறந்த செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






