search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
    X

    அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

    அருளானந்தபுரம் அருகே அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பத்மநாபபுரம்:

    வேர்கிளம்பி அருகே செங்கோடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மகன் அபினேஷ்(வயது 18), பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் திக்கணங்கோட்டில் இருந்து அழகியமண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அருளானந்தபுரம் அருகே சென்ற போது எதிரே ஒரு அரசு பஸ் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. 

    இதில் அபினேஷ் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×