search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மென்பொருள்"

    • வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
    • சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் .

    அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் 'இன்டெல்' மற்றும் 'ஏஎம்டி' சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.

    இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

    சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.




    இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.

    மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

    இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக, சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என  நம்பி உள்ளது.

    • செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.

    திருமங்கலம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    • மக்கள் பிரச்சினையை தெரிந்து கொள்ள மென்பொருள் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும்.

    மதுரை

    மதுரை மகபூப்பாளையம் சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசலில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாப்பாளையம் பள்ளிவாசல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஜுவாகிருல்லா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை 3-வது தளத்தில் உள்ள பொதுமக்களின் குறை தீர்க்கும் மையத்தில் புதிய தொலைபேசி எண் மற்றும் மென்பொருள் சேவை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சேவைைய தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியின் பொது மக்களுக்கான சேவையில், இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது கடினமான பணி. இதற்கு ஒரு கட்டமைப்பு அமைய வேண்டியது முக்கியம். மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் நிறைவேறாத பிரச்சினைகள்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

    பொது மக்களும் கோரிக்கை மீதான நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும். மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பை உருவாக்கிய கமிஷனருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் புகாருக்கான தனி அடையாள எண் பெறுவது முக்கியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    அடுத்தபடியாக கவுன்சிலர்கள் வாரம் ஒரு முறை மென்பொருள் சேவை மூலம் பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? என்பதை தெரிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மென்பொருள் வடிவமைப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ''ஆட்டோடெஸ்க் யூசன் 360'' என்ற மென்பொருள் வடிவமைப்பு தொடர்பாக பயிற்சி முகாமை கல்லூரியின் ஐ.சி.டி. அகாடமி நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் தொடங்கி வைத்தார். முதல்வர் விஷ்ணுராம் வாழ்த்துரை வழங்கினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

    இந்த பயிற்சி முகாமை சென்னை ஐ.சி.டி.அகாடமி நிர்வாக அதிகாரி திவ்யபிரசாத் நடத்தினார்.

    அவர் பேசுகையில், இந்த மென்பொருள் ஆட்டோ மெஷனில் உற்பத்திதுறை மற்றும் வடிவமைப்பு துறையின் பயன்பாடு பற்றியும், இதன் மூலமாக உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.இதில் எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், எந்திரவியல் துறை பேராசிரியர்கள் முத்தையா, குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி நன்றி கூறினார்.

    ×