search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடி காணிக்கை"

    • மொட்டை அடிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
    • பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

    பழனி முருகன் கோவிலுக்கு இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சரவணப்பொய்கை மற்றும் மலையடிவாரத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை நிலையத்தில் மொட்டை அடிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மொட்டை அடிக்கக்கூடிய பக்தர்களுக்கு இணைய வழியில் டிக்கெட் வழங்கப்படுகிறது. அடிக்கடி இணைய சேவை பாதிக்கப்படுவதால் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

    இன்று காலை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இணைய சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் மொட்டை அடிக்க டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் மொட்டை அடிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும் இணைய வழியில் டிக்கெட் வழங்கும் வசதியையும் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடிக்கடி ஏற்படக்கூடிய இணைய சேவை பாதிப்பின் காரணமாக இது போன்ற கூட்ட நெரிசல்கள் ஏற்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இணைய சேவை சரி செய்யப்பட்டதை அடுத்து பக்தர்கள் மொட்டை அடித்துச் சென்றனர். 

    • சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெரு மானை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    முகூர்த்த நேரத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு மலை மீதுள்ள சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் உபயதாரர் நிதி மூலம் ரூ.93 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் கோவில் நிதி மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டிடம் கட்ட கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

    ஆந்திராவில் கோவில்களில் பணியாற்றும் சவர தொழிலாளர்கள் இன்று திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். #TempleBarbersStrike
    ஐதராபாத்:

    ஆந்திராவில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பணம், நகைகள் என பல்வேறு வகையில் காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் தலைமுடியையும் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்காக கோவில்களில் சவரத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 

    இவ்வாறு ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில்களில் மொட்டை போடும் பணியில் ஈடுபட்டுள்ள சவரத் தொழிலாளர்கள் தங்களுக்கு நிலையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

    இதனால் கோவில்களில் பணியாற்றும் சவரத் தொழிலாளர்கள் இன்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலையான ஊதியம், பணி பாதுகாப்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வேண்டுதலை நிறைவேற்ற முடியாத அதிருப்தியுடன் கோவில்களில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 

    பிஎப் மற்றும் பென்சனுடன் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களாகவே சவர தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது, ஒரு தலைக்கு 13 ரூபாய் என்ற அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் பல நாட்கள் போதிய வருவாய் இன்றி குடும்பத்தை நடத்த முடியவில்லை என்பதால் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கோரி போராட்டம் நடத்தினர்.

    ஆனால், மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் சவரத் தொழிலாளர்கள் யாரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாண கட்டாவில் (முடி காணிக்கை செலுத்துமிடம்) மட்டும் 500 நிரந்தர தொழிலாளர்கள், 100 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். #TempleBarbersStrike
    ×