search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாடுதுறை தொகுதி"

    • பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு சீர்காழி நகரத்தில் உள்ள 24 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ஒவ்வொரு வார்டு பகுதியிலும் அவரை வரவேற்கும் விதமாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது வெடிக்கப்பட்ட பட்டாசிலிருந்து சிதறிய தீப்பொறி அருகில் இருந்த அய்யாதுரை என்பவரது வீட்டின் கூரையில் விழுந்துள்ளது.

    இதை யாரும் கவனிக்காத நிலையில் வேட்பாளரும் உடன் வந்தவர்களும் அங்கிருந்து வேறு பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். சில நிமிடங்களில் அய்யாதுரையின் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் துரிதமாக செயல்பட்டு வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும் கூரையை பிரித்து அப்புறப்படுத்தியும் தீயை அணைத்தனர்.

    இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் தப்பியது. அதேநேரம் தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வாகனம் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உரிய நேரத்தில் செல்ல முடியாமலும், குறுகிய சாலை என்பதால் தீ பிடித்த வீட்டிற்கு எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், மக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
    • மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இதில், ஏற்கனவே தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

    அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த்,

    நெல்லை - ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார்.

    ஆனால், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மயிலாகுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழங்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுகிறார்.

    வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஆர்.சுதா நாளை மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • எங்கள் கட்சியில் தேர்தல் வந்தால் போட்டியிட வாய்ப்பு கேட்டு படையெடுக்கும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.
    • திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த தொகுதி எம்.பி.யான திருநாவுக்கரசருக்கு இடமில்லை.

    சென்னை:

    தலைவர்களின் அழுத்தத்தால் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ஆனால் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பெயர் அறிவித்த பிறகுதான் மனுதாக்கலுக்கான ஏற்பாடுகளை வேட்பாளர் செய்ய வேண்டும். அதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாக இருக்கிறது.

    இன்று கட்டாயம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இந்த இழுபறிக்கான காரணம் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சியில் தேர்தல் வந்தால் போட்டியிட வாய்ப்பு கேட்டு படையெடுக்கும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மாநில செல்வாக்கு மற்றும் டெல்லி செல்வாக்கை வைத்து எப்படியாவது முட்டி மோதி சீட் வாங்கி விடுவார்கள்.

    இந்த தேர்தலில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த தொகுதி எம்.பி.யான திருநாவுக்கரசருக்கு இடமில்லை. நெல்லை தொகுதியை எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.

    இப்போது இருப்பது மயிலாடுதுறை ஒரே தொகுதிதான். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் மற்றும் மண்ணின் மைந்தரான மணிசங்கர அய்யர், பிரவீண் சக்கரவர்த்தி, சி.டி.மெய்யப்பன், தங்கபாலு அனைவரும் இந்த தொகுதிக்காக மல்லுக்கட்டுகிறார்கள். எல்லோரும் தவிர்க்க முடியாதவர்கள். டெல்லியிலும் செல்வாக்கு பெற்றவர்கள். தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? யாரை தவிர்ப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். பேசாமல் குலுக்கல் முறையில் அறிவிக்கலாம் என்றார் நகைச்சுவையாக.

    ×