search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்"

    ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி ஆகிய மூவருமே பிரதமர் பதவியில் குறியாக உள்ளனர் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #AntiBJPRally #MamtaBanerjee #RahulGandhi #Mayawati #RavishankarPrasad #NarendraModi
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். இதில் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் மக்களால் தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கூறினர்

    இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி ஆகிய மூவருமே பிரதமர் பதவியில் குறியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒருவரை ஒருவர் சந்தித்திராத எதிர்க்கட்சியினர் கொல்கத்தாவில் கூடியதன் நோக்கம் மோடியை அகற்றுவதே. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் பிரதமராகும் நோக்கிலேயே உள்ளனர்.

    மக்களால் தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சித் தலைவர் எவரேனும் இருந்தால் அதை அரசியல் கட்சிகள் கூறலாம் என குறிப்பிட்டார். #AntiBJPRally #MamtaBanerjee #RahulGandhi #Mayawati #RavishankarPrasad #NarendraModi
    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்  டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
    முத்தலாக் மசோதா முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாக தலையிடுவதாகவும், இந்த மசோதா தேவையில்லை என்றும் மக்களவையில் நடந்த விவாதத்தின்போது அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியதாவது:-

    முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இந்த முத்தலாக் சட்டம் நேரடியாக தலையிடுகிறது. இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது. உணர்ச்சிகரமான விஷயத்தில் கண்மூடித்தனமாக மத்திய அரசு செயல்படுகிறது. முத்தலாக் பிரச்சனையில் கணவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிப்பது நியாயமற்றது. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நான் எதிர்க்கிறேன்.

    இந்த மசோதாவை கொண்டு வருவதால் மத்திய அரசு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கண்துடைப்புக்காகவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.


    இந்த முத்தலாக் தடை மசோதா தேவையில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நிறைவேறாமல் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அன்வர் ராஜா பேசினார். இந்த விவாதத்தில் அன்வர் ராஜா தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், 20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் ஏன் அதை செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்பினார். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
    ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது. 100 கோடி முறை முயற்சித்தாலும் அவற்றை திருட முடியாது என்று தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #Aadhaar
    பனாஜி:

    கோவா மாநிலம், பனாஜியில் நேற்று நடந்த கோவா தகவல் தொழில்நுட்ப நாள் கொண்டாட்டத்தில் மத்திய தகவல், தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அவர் ஆதார் அடையாள அட்டையின் நம்பகத்தன்மை குறித்து திட்டவட்டமான கருத்து வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறும்போது, “எனது ஆதார் அட்டையில் என்ன இருக்கிறது? எனது புகைப்படம் உள்ளது. நான் ஆண் என்பதும், என் பாட்னா நிரந்தர முகவரியும் உள்ளது. என்னவெல்லாம் இல்லை என்றால், என் மதம், என் சாதி, என் வருமானம், என் ஆரோக்கியம் குறித்த தகவல்கள், பிற அந்தரங்க தகவல்கள் இல்லை” என்று குறிப்பிட்டார்.

    மேலும், “ஆனால் ஆதார் பதிவில் எனது கைவிரல் ரேகைப்பதிவுகள், என் கண்ணின் கருவிழிப்படலம் உள்ளது. அது பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. 100 கோடி முறை முயற்சித்தாலும் அவற்றை திருட முடியாது” என்றும் கூறினார்.  #Aadhaar

    ×