search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaganyaan project"

    • அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் ஷட்டில்' போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
    • சிறிய செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத், நிருபர்களிடம் கூறியதாவது:-

    விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிப்பது, தொழில் முனைவோரை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இஸ்ரோவிற்கும் வருமானம் கிடைக்கும். இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

    மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக அதற்கான சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ராக்கெட் 12-14 கி.மீ. வரை சென்று அதன் பாதுகாப்பு அமைப்புகளை சோதிக்கும்.

    தொடர்ந்து 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடுத்த சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

    அமெரிக்காவின் 'ஸ்பேஸ் ஷட்டில்' போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த ராக்கெட் சில நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்பி வரும்.

    இஸ்ரோவின் வரவிருக்கும் விண்வெளி பயணங்களில், விண்வெளி நிறுவனம் 'ஆதித்யா எல்-1', வழிகாட்டும் செயற்கைகோள்கள், அதிக எடை கொண்ட ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி.யுடன் வணிக ரீதியான ஏவுதல் மற்றும் சிறிய செயற்கைகோள் ஏவுகணை வாகனத்துடன் (எஸ்.எஸ்.எல்.வி.) ஒரு பணியை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

    சிறிய செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதேபோல், '72 ஒன் வெப்' செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு - ரூ.1,000 கோடிக்கு மேல் எல்.வி.எம் 3 ராக்கெட்டுடன் நல்ல வணிக வாய்ப்பு உள்ளது.

    விண்வெளி நிறுவனம் அதன் செயல்திறனில் சமரசம் செய்யாமல் செலவை குறைக்க சில மறுசீரமைப்புகளை செய்து வருகிறது.

    குறிப்பாக ராக்கெட்டின் மேல் பகுதி நீண்ட காலம் இருக்கும் என்பதால் அதனை சுற்றுப்பாதை தளமாக பயன்படுத்துவது குறித்த எண்ணம் 4 ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. அதன்படி தற்போது அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி.55 ராக்கெட்டின் மேல் தளத்தில் அறிவியல் சோதனைகள் நடத்துவதற்கான 7 கருவிகள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஆயுட்காலம் குறைவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ககன்யான் என்பது இந்தியாவில் மக்களுக்கான முதல் விண்வெளி பயண திட்டம் ஆகும்.
    • இஸ்ரோ 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

    பெங்களூர்:

    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற மேல்சபையில் ஒரு கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில், "இஸ்ரோ ஏற்கனவே இந்தியாவின் துணை சுற்றுப்பாதை விண்வெளி சுற்றுலாவுக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது.

    ககன்யான் என்பது இந்தியாவில் மக்களுக்கான முதல் விண்வெளி பயண திட்டம் ஆகும். மக்களின் விண்வெளி பயணங்களுக்கு தேவையான பல்வேறு தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.

    இந்நிலையில் இஸ்ரோ, 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-

    இந்தியாவின் சொந்த விண்வெளி சுற்றுலா பயணத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சுற்றுலா திட்டம் பாதுகாப்பானது. மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் தொடங்கி விடும். இதன் மூலம் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும். விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும்.

    இஸ்ரோ மூத்த அதிகாரிகள் அரசின் விண்வெளி சுற்றுலா முயற்சிக்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். உலக சந்தையில் விண்வெளி டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை போட்டி போட்டு இந்தியா நிர்ணயம் செய்யும். விண்வெளி சுற்றுலா பயணம் மேற் கொள்பவர்கள் தங்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், "அரசின் விண்வெளி சுற்றுலா திட்டம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிடப்படும்" என்றனர்.

    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்  டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
    ×