search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்க்கப்பல்"

    • சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.
    • நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

    தைபே நகரம்:

    சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.

    இந்தநிலையில் தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது. இதில் அதிபர் சாய்-இங்-வென் கலந்து கொண்டு பேசுகையில், தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என கூறினார்.

    இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி பாராட்டி உள்ளார்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார்.

    புதுடெல்லி:

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இது வரலாற்று மைல்கல் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு அரபிக்கடலில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சவாலான விஷயம், இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மன உறுதி, திறமையை நிரூபித்திருப்பதாக கடற்படை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக்-29கே விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இது தன்னம்பிக்கையை நோக்கிய கடற்படையின் உத்வேகத்தை குறிக்கிறது, என்றார்.

    இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

    விக்ராந்த் கப்பலில் போர் விமானம் தரையிறங்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல்களை தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகளின் உயரடுக்கு குழுவில் இந்தியாவும் இணைந்தது.

    • அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.
    • போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகத்தில், 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. கப்பல் பழுது பார்க்கும் மையமும் உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்புக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தது. அந்த கப்பலுக்கு காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பழுது நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    அதன் பழுதுகளை சரி செய்யமுதன் முறையாக அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பல் இந்தியாவில் பழுது பார்க்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு நேற்று மாலை 5 மணியளவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.

    அதில் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் அந்த போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு 2-வது முறையாக அமெரிக்க போர்க்கப்பல் பழுது நீக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×