search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warships"

    இந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இந்தியா - ரஷியா நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. #India #Russia #Warship
    புதுடெல்லி:

    இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் - ரஷியாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் இடையே ரூ.3,500 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

    இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களும் கட்டப்படும். இதற்காக வடிவமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் சில உபகரணங்களை ரஷிய நிறுவனம் அளிக்கும்.

    இதுபற்றி கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சேகர் மிட்டல் கூறும்போது, “இந்திய கடற்படைக்காக இந்த 2 போர்க் கப்பல்களும் கட்டப்படுகின்றன. கப்பல் கட்டும் பணி 2020-ம் ஆண்டு தொடங்கும். முதல் கப்பல் 2026-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். மற்றொரு போர்க்கப்பல் 2027-ம் ஆண்டு இணைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
    ரஷிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 3 லட்சம் வீரர்களுடன் மிகப்பெரும் ராணுவ பயிற்சியை நடத்துகிறது. #Rissoa #LargestMilitaryDrill
    மாஸ்கோ:

    ரஷிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் ராணுவ பயிற்சியை (வாஸ்டாக்-2018) அந்த நாடு நடத்துகிறது. கிழக்கு சைபீரியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் 3 லட்சம் வீரர்கள், 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.



    மேலும் ரஷிய படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இஸ்கந்தர் ஏவுகணைகள், டி-80 மற்றும் டி-90 பீரங்கிகள், எஸ்.யு.34, எஸ்.யு.35 போர் விமானங்கள் என ஏராளமான ராணுவ தளவாடங்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் சீன ராணுவத்தை சேர்ந்த 3,200 வீரர்கள் மற்றும் மங்கோலிய ராணுவ வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது குறித்து ரஷிய ராணுவ மந்திரி செர்ஜெய் ஷோயிகு கூறுகையில், ‘36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை கற்பனை செய்து பாருங்கள். இவை அனைத்தும் முடிந்தவரை ஒரு போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கும்’ என்று தெரிவித்தார்.

    உக்ரைன் மற்றும் சிரியாவில் ரஷியாவின் மோதல்போக்கு, மேற்கத்திய நாடுகளின் நலன்களில் ரஷியாவின் தலையீடு போன்ற விவகாரங்களால் ரஷியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த போர் பயிற்சி மேலும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது. இந்த பயிற்சிக்கு நேட்டோ அமைப்பும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  #Rissoa #LargestMilitaryDrill
    ×