search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kattupalli Harbour"

    • அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.
    • போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகத்தில், 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. கப்பல் பழுது பார்க்கும் மையமும் உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்புக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தது. அந்த கப்பலுக்கு காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பழுது நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    அதன் பழுதுகளை சரி செய்யமுதன் முறையாக அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பல் இந்தியாவில் பழுது பார்க்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு நேற்று மாலை 5 மணியளவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.

    அதில் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் அந்த போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு 2-வது முறையாக அமெரிக்க போர்க்கப்பல் பழுது நீக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×