என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொங்கல் போனஸ்"
- பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு அதற்காக ரூ. 221 கோடி நிதி ஒதுக்கியது.
- 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் பொங்கல் கொண்டாட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் போனஸ் அறிவிக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு பள்ளிகளில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கும் பொங்கல் போனசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு அதற்காக ரூ. 221 கோடி நிதி ஒதுக்கியது. அரசு ஊழியர்கள், தொகுப்பூதியம், தினக்கூலிகள் மற்றும் பகுதிநேர ஊழியர்கள் என அனைவருக்கும் போனஸ் உண்டு.
ஆனால் 2012-ம் ஆண்டு முதல் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டுமே போனஸ் மறுக்கப்படுகிறது. மற்ற பகுதிநேர ஊழியர்களை போல், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கை ஆகும்.
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தமிழக முதலமைச்சர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு மற்றும் பணிமாறுதல் வழங்கப்படும் என அறிவித்ததால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியது.
அதுபோல் பொங்கல் போனஸ் விஷயத்திலும் தமிழக முதலமைச்சர் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்தால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்துவார்கள்.
இதற்கான கோரிக்கையை நேரிலும், கடிதம், இ-மெயில் மூலமாகவும் டிசம்பர் 15-ந்தேதி முதல் வைத்து வருகிறோம். பொங்கல் பண்டிகை வர உள்ளது.
இனியும் தாமதிக்காமல் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் பொங்கல் கொண்டாட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் போனஸ் அறிவிக்க வேண்டும்.
மேலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக சேர்க்கப்பட்ட, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் இந்த கோரிக்கை எழுந்து இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கொண்டாபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உறுப்பினர்க ளுக்கு பொங்கல்போன ஸ்மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் குமார் வரவேற்றார்.பேரூராட்சி வார்டு மன்ற உறுப்பினர் நரசிம்மன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பா ளர்களாக பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் கலந்து கொண்டு மேற்படி சங்கத்திலுள்ள பால் உற்பத்தியாளர்ளுக்கு ஊக்கத்தொகையினை போனசாக வழங்கினர்.
போனஸ்தொகை யானது பால் உற்பத்தியில் லிட்டருக்கு ரூ. 1 என கணக்கிடப்பட்டு ரூ, 7-லட்சத்து 94-ஆயிரத்து 370-ரூபாய் 429 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஆய்வாளர் கீதா, நிர்வாக குழு உறுப்பினர்கள், முன்னாள் செயலாளர் குமார் மற்றும் ஈராளச்சேரி, பெருகரும்பூர், துறைபெரும்பாக்கம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
- தமிழக அரசுப்பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி,
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* முழு மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
* சி, டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், தனி என அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்