search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக் காதல்"

    • சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
    • ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    திருப்பதி:

    இலங்கையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் (கட்டிட மேஸ்திரி) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார். இதற்காக சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

    விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர்.

    இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    தற்போது எல்லை தாண்டிய காதல் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர்.

    • நஸ்ருல்லாவுடன் சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு.
    • இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.

    பெஷாவர் :

    கணவர், குழந்தைகளை கைவிட்டு பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் மதம் மாறி முகநூல் காதலரை கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டார்.

    காதலரை நாடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், இங்கேயே வாழ ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்துவிட்டு காத்திருக்கிறார். இதை அப்படியே புரட்டிப்போட்டது போல இருக்கிறது, அஞ்சுவின் கதை.

    உத்தரபிரதேச மாநிலம் கைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த அஞ்சு (வயது 34).

    இவர் திருமணத்துக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் கணவர் அரவிந்த்குமாருடன் வசித்தார். இந்த தம்பதிக்கு 15 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு அஞ்சுவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் முகநூலில் (பேஸ்புக்) அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை, ஜெய்ப்பூர் நகருக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு கிளம்பிச் சென்றார் அஞ்சு. ஆனால் அவர் சென்றது, பாகிஸ்தானில் உள்ள தனது முகநூல் காதலரை காண்பதற்கு. அதற்காக, குடும்பத்தினருக்கு தெரியாமல், முறைப்படி விண்ணப்பித்து ஒரு மாத விசாவையும் அஞ்சு பெற்றுள்ளார். நஸ்ருல்லாவின் சொந்த ஊர், கைபர் பக்துங்வா மாகாணம் அப்பர் திர்மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற குக்கிராமம். அறிவியல் பட்டதாரியான நஸ்ருல்லா, 5 சகோதரர்களில் இளையவர். திருமணம் ஆகாதவர்.

    நஸ்ருல்லா வீட்டுக்கு சென்று தங்கிய அஞ்சு, அங்கிருந்தபடி, தான் அவரை காதலிப்பதாக பேட்டியும் அளித்தார். ஆனால் 'தோழி'யான அஞ்சுவை திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறினார்.

    ஆனால் ஒரே நாளில் அதிரடியாக காட்சிகள் மாறின.

    'பாத்திமா' என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய 'அஞ்சு', நேற்று மாவட்ட கோர்ட்டில் நஸ்ருல்லாவின் உறவினர்கள், வக்கீல்கள், போலீசார் முன்னிலையில் முறைப்படி அவரை கரம் பிடித்தார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.

    நேற்று முன்தினம், நஸ்ருல்லாவுடன் கைபர் பக்துங்வா சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு. அங்கு போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், கரம் கோர்த்தபடி அந்த ஜோடி உற்சாகமாக உலா வந்தது.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள போவுனா கிராமத்தில் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர், 'எனது மகளுடன் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு நேரடித் தொடர்பில்லை. அவர் மனரீதியாக பிரச்சினை உள்ளவர். விசித்திரமான நடத்தை கொண்டவர். என் மருமகன் எளிமையான மனிதர். அவர் மீது தவறு எதுவும் கிடையாது' என்றார்.

    இதற்கிடையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அஞ்சு, 'நான் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். இந்தியாவில் உள்ள எனது உறவினர்களையும், குழந்தைகளையும் ஊடகத்தினர் யாரும் தொந்தரவுபடுத்த வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    புதிய மண்ணில், புது வாழ்வை தொடங்கிவிட்டார், 'பாத்திமா' ஆகிவிட்ட 'அஞ்சு'. ஆனால் இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, அதன்பின் காதலில் விழுந்துள்ளார்
    • பாஸ்போர்ட் உள்ளதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை

    திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது.

    உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அரவிந்த். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்வாவில் உள்ள, அவரது நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்பர் திர் மாவட்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, பேஸ்புக் மூலமாக நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மீது காதல் கொண்டதால், அவரை பார்க்க பாகிஸ்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை போலீசார் விடுவித்துள்ளனர். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் உள்ளார்.

    இந்த செய்தி வெளிவர ராஜஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, அவரது கணவர் அரவிந்த் கூறுகையில் ''அஞ்சு கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உள்ளது. தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினேன். அப்போது அவர் லாகூரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை'' என்றார்.

    அஞ்சுவிற்கு 15 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற திருமணம் முடிந்த பெண், பப்ஜி விளையாட்டு மூலம் இந்திய நபர் மீது காதல் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்து வருகிறார்.

    • கடந்த 19-ந் தேதி சம்பளத்தை வாங்கிக்கொண்டு வாலிபர் கடையை விட்டு வெளியேறினார்.
    • வாலிபரின் தாயாருக்கு தொடர்பு கொண்ட போது, தனது மகன் இங்கு வரவில்லை என்று பதில் வந்தது.

    குனியமுத்தூர்:

    கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூரில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுஜ் யாதவ்(18) என்ற வாலிபர் 3 மாதத்திற்கு முன்பு ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தார்.

    கடையில் அந்த வாலிபருக்கு சமோசா போடும் வேலை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி சம்பளத்தை வாங்கிக்கொண்டு, உத்தரப் பிரதேசம் சென்று அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அந்த வாலிபர் கடையை விட்டு வெளியேறினார்.

    கடையின் மானேஜர் ராஜ்குமார் என்பவர் இரண்டு நாட்கள் கழித்து அந்த வாலிபரை செல்போனில் பேசுவதற்கு முயன்றார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே அந்த வாலிபரின் தாயாருக்கு தொடர்பு கொண்ட போது, தனது மகன் இங்கு வரவில்லை என்று பதில் வந்தது. உடனே சந்தேகம் அடைந்த பேக்கரி மேனேஜர் ராஜ்குமார் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் அனுஜ் யாதவை தேட தொடங்கினர்.

    அந்த சமயம் பீகாரில் இருந்து குனியமுத்தூர் போலீசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பீகாரில் இருந்து மஞ்சு கர்சியா என்ற இளம் பெண் போலீசாரிடம் பேசினாள். தான் பீகாரில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை பார்ப்பதாகவும், கடந்த 3 மாதமாக அனுஜ் யாதவும், நானும் பேஸ்புக் மூலமாக காதலித்து வருகிறோம். அதனால் அவர் என்னை தேடி என்னிடம் வந்து சேர்ந்துவிட்டார். அவரை யாரும் தேட வேண்டாம் என்று தகவல் தெரிவித்தார்.

    இந்த தகவலை கேட்ட குனியமுத்தூர் போலீசார் பேக்கரி மேனேஜர் ராஜ்குமாரிடம் நடந்த விவரங்களை கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    ×