search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உடல் பிரச்சனை"

    ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
    கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு, பெண்களுக்கு எளிதில் அழிக்க முடியாத வடுக்களை விட்டுச்செல்கிறது. அதற்கான ஒரே மருந்து, மீண்டும் கருத்தரித்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதுதான். ஆனால், இன்றைய காலகட்டத்தில், கருச்சிதைவு/கருக்கலைப்புக்குப் பின்னர் கருத்தரிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

    “பெண்களின் கரு எதிர்பாராதவிதமாக கலைந்துபோவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் கர்ப்பிணி மட்டுமல்லாமல், அந்தக் கருவுக்குக் காரணமான ஆணுடைய விந்துவின் ஆரோக்கியமும் கருச்சிதைவுக்கு சில சமயம் காரணமாக இருக்கலாம். மற்ற காரணிகள், கரு வளர்ச்சி தொடர்பானவையாக இருக்கலாம். இதில் ‘Anatomical Factors’ என்று சொல்லப்படும், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்ரீதியான பாதிப்புகள், 10-லிருந்து 15 சதவிகித கருச்சிதைவுகளுக்குக் காரணமாக இருக்கலாம். அதாவது, கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது, மாதவிடாய்ப் பிரச்னைகள் போன்றவை இதில் அடங்கும்.

    அடுத்தது, ‘Auto-immunal Factors’. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருவளர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி இல்லாமல், கருச்சிதைவு உண்டாவது. 10-லிருந்து 15 சதவிகிதக் கருச்சிதைவுகளுக்கு இந்த ‘ஆட்டோ இம்யூனல் ஃபேக்டர்ஸ்’ காரணமாக இருக்கலாம். தொற்று காரணமாக 0.5-லிருந்து 5 சதவிகிதக் கருச்சிதைவுகள் நேரலாம். ஹார்மோன் சமச்சீரின்மை, தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளிட்டவை 20 சதவிகிதக் கருச்சிதைவுகள் உண்டாகக் காரணமாகலாம். என்றாலும், கிட்டத்தட்ட 50 சதவிகிதக் கருச்சிதைவுகள் காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் இருக்கின்றன.

    பொதுவாக, கருத்தரிப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சிக்கலில்லாத பிரசவத்துக்கும், பெண்ணின் வயதுக்கும் நிறைய தொடர்பு உண்டு. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு இயல்பாகவே கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க, கருமுட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொய்வுநிலையை எட்டும். இதனால்தான் 30, 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பு என்பது சற்றே சவாலான விஷயமாகிறது. ஆனால், சரிவிகித, உட்டச்சத்துமிக்க உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டால், கருமுட்டையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். லண்டனில் நடந்த ஆய்வு ஒன்று, கருச்சிதைவுக்கும் வயதுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அட்டவணை இங்கே…

    கருச்சிதைவும் கருக்கலைப்பும் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கக்கூடியவை. ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும். சராசரியாக, ஒரு கருச்சிதைவுக்கு அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகே கருத்தரிப்பு நிகழ வேண்டும்.

    ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கணவன் - மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் பெண்களும், கருத்தரிப்புக்குப் பின்னர் கர்ப்பகால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தம்பதியில் இருவரில் ஒருவருக்கு தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்பிணி, உட்சுரப்பியல் பரிசோதனை (Endocrinology Test) செய்துகொள்ள வேண்டும். கருவுக்கு மரபணு தொடர்பான சிக்கல் இருக்கிறதா என்பதை `Karyotyping Test’ மூலம் அறிந்துகொள்ளலாம்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்ணின் மனநிலை நிம்மதியாக இருக்கவேண்டியது அவசியம். எனவே ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர், அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளே அவரைச் சூழ்ந்திருக்க வேண்டும்; எதிர்மறையான பேச்சுகளையும் அச்சுறுத்தல்களையும் குடும்பமும் சுற்றமும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
    பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை.

    இரு காரணங்களால், பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படலாம். முதல் வகை, இருமல், தும்மல் வரும் போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். சிறுநீர் பையில் உள்ள தசைகளில் ஏற்படும் அழுத்தத்தினால் வரும் இந்த பிரச்சனை, ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ எனப்படும். இதற்கு பயந்து, நிறைய பெண்கள், நடைபயிற்சி செய்வது இல்லை; உடல் பருமன் ஆகிவிடும்.

    அதன் தொடர்ச்சியாக, பல பிரச்சனைகள் வரும். அதன்பின், டாக்டரை பார்ப்பர். காரணத்தை அலசும் போது, சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே இவை இருக்கும். பள்ளி மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பெண்கள், இந்த பிரச்சனைக்கு பயந்து, வேலையை விட்டு விடுவதும் உண்டு. வெளியில் போவதற்கு பயந்து, வீட்டிலேயே முடங்கி விடுவர்; இதனால், மன அழுத்தம் ஏற்படும்.



    சிறுநீர் கசிவிற்கான இன்னொரு காரணம், பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான, ‘பெல்விக் புளோர் எக்சர்சைஸ்’ செய்யச் சொல்வோம். இந்த உடற்பயிற்சியை செய்யாவிட்டால், வயது ஆக ஆக, தசைகள் மேலும் வலுவிழக்கும். இதுதான், கசிவிற்கு மூலக் காரணம்.

    கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் மூலம், பிரச்சனையை சரி செய்து விடலாம். பிரச்சனை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால், பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு, ‘சப்போர்ட்’ செய்வதற்கு, ‘ஸ்லிங்’ வைக்க வேண்டும்.

    அறுபது சதவீத சிறுநீர் கசிவு பாதிப்பு உள்ள பெண்களில், 45 சதவீதம் பேர், சிறுநீர் பை, கூடுதலாக வேலை செய்யும், ‘ஓவர் ஆக்டிவ் பிளாடர்’ பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இரவில் துாக்கம் கெடுவதுடன், நீர்ச்சத்தும் குறையும். 
    மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
    மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிடாய், உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இக்காலத்தில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது இயல்பு தான். மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்பாடு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பருக்கள் ஒரு வார காலம் அல்லது அதற்கு குறைவான காலத்திலேயே மறைந்து விடும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் இது ஏற்படுவதில்லை.

    மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகள் (PMS – ப்ரீ மென்ஸ்சுரல் சிம்ப்டம்ஸ்) என்பது அநேகமாக அனைத்து பெண்களுக்கும் அனுபவிக்கும் ஒன்றாகும். மாதவிலக்கு என்பது ஹார்மோன் சம்பந்தமாக ஏற்படும் மாற்றங்கள். அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் மாற்றங்களும் அதிகம்.

    மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம்:

    * மார்பகங்கள் மென்மையாகுதல் அல்லது மார்பகங்களில் வலி
    * எரிச்சல் அல்லது காரணமில்லாத கோபம்
    * ஒரு வித சோகம்
    * மன அழுத்தம் / பதற்றம்
    * உணவுகளின் மீது தீவிர நாட்டம்

    மேற்கூறிய மாறுதல்களை நீங்கள் அனுபவிக்க கூடும். சில பெண்களுக்கு மாதந்திர மாதவிடாயின் போது குமட்டல் மற்றும் வாந்தியும் கூட ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் பல நேரம் சந்தோஷங்களை அளிக்காது. இக்காலம் பெண்களுக்கு கடுமையானதாக இருக்கும்.

    நீங்கள் வீட்டையும் வேலையையும் சேர்ந்து கவனிக்க வேண்டுமென்றால், உங்கள் நிலைமை இன்னும் கஷ்டம் தான். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதுமான விழிப்புணர்வு இருந்தால், மாதவிடாயின் போது ஏற்பாடு மாற்றங்களை சுலபமாக சமாளிக்கலாம்.

    இக்காலத்தில், பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொண்டால், பல பிரச்சனைகள் தீரும்.

    வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகளின் தாக்கங்கள் குறையும். மாதவிடாயின் போது ஏற்படும் மாற்றங்களை சந்திக்க முன் கூட்டியே தயாராக இருங்கள்.
    இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.
    இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 51 சதவிகிதம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதில் இருந்து 49 வயது வரை (மாதவிடாய் தொடங்கும் பருவகாலத்தில் இருந்து மெனோபாஸ் கால கட்டம் வரை) இந்தப்பிரச்னை பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

    சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் இரத்தசோகை. இந்த இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.

    இரத்த சோகைக்கான அறிகுறிகள்

    சோர்வு, தோல் வெளுத்துப்போதல், மூச்சு வாங்குதல், இதய படபடப்பு, மயக்கம், தலைவலி, நெஞ்சு வலி, குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள்.இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த அறிகுறிகள் அதிகமாகும் போது இரத்த சோகைப் பிரச்னையும் அதிகமாகி விடுகிறது.

    இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- தேவையான அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாமல் இரும்புச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை தான் உலகத்தில் அதிகபட்ச இரத்த சோகைக்கான காரணமாக இருக்கிறது. தேவையான அளவு இரும்புச்சத்து இல்லையென்றால் இரத்த சிவப்பணுக்களுக்கான ஹீமோகுளோபினை எலும்பு மஜ்ஜையால் உருவாக்க முடியாது.ஊட்டச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உருவாக இரும்புச்சத்தை தவிர ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை தேவை. இந்த சத்துக்கள் உணவில் குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைகிறது. குடல் பிரச்னைகள்- இரத்த அணுக்கள் உருவாக தேவையான சத்துக்களை உறிஞ்சும் சக்தியினை தடை செய்யும் குடல் பிரச்னைகள்.

    மாதவிடாய் - இரத்த போக்கை ஏற்படுத் தும் மாதவிடாயானது பெண்களுக்கு ஆண்களை விட இரத்த சோகை அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலம்- கர்ப்ப காலங்களில் இரு உயிருக்கு தேவையான அளவு ஹீமோகுளோபின் கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டும். அதற்கேற்ற அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாத போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் தட்டுப்பாடு ஏற்படுவதால் இரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத போது இரத்தசோகைக்கான ரிஸ்க் அதிகரிக்கிறது. நாட்பட்ட நோய்களினால் ஏற்படும் இரத்தசோகை- கேன்சர், சிறுநீரகக்கோளாறு, கல்லீரல் கோளாறு போன்ற நாட்பட்ட நோய்களின் காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது.

    நாட்பட்ட நோய்கள் மற்றும் வலி நிவாரண மருந்துகளால் ஹீமோகுளோபின் உருவாவது தடைபடுவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்- லுகோமியா மற்றும் மைலோஃபைப்ரோஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களின் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறையும். தேவையான அளவு இரத்த சிவப்பணுக்கள் உருவாகாதது.இரத்த சிவப்பணுக்கள் விரைவில் அழிந்து போதல் - இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வேகத்தை விட அதன் அழிவு விகிதம் அதிகமாக இருக்கும் போது இரத்த சோகை பிரச்னை ஏற்படும். இதனை ஹீமோலிடிக் அனீமியா என்பார்கள். மரபு வழியாக ஏற்படும் சில இரத்த நோய்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.
    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
    உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், நாம் அவற்றை காட்டி மருத்துவரிடம் பரிசோதிப்போம். அதற்கான மருந்துகளை உபயோகிப்போம். ஆனால், அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை பற்றி மற்றவரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூற தயக்கம் ஏற்படும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும்.

    பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால் எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் அழகை மேம்படுத்த பலவற்றை செய்யும் பெண்கள், அவர்களின் அந்தரங்க பகுதி சுத்தத்தை மறந்துவிடுகிறார்கள்.

    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

    முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.



    எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் தொற்றை தவிர்க்கும். எலுமிச்சை டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்திற்குத் அவசியமான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றன.

    தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும். உடலை குளிச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.

    சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

    முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

    அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் அந்தரங்க உறுப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கவும், வளர்ச்சி அடையாமல் தவிர்க்கவும் உதவுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரியில் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வறட்சியை தவிர்க்க உதவுகிறது. 
    ஆண்களுக்கு பித்த நோய் வந்தாலும் பெண்களுக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. இந்த பிரச்சனைக்கு வீட்டில் கிடைக்கும் பொருளை கொண்டு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    ஆண்களுக்கு பித்த நோய் வந்தாலும் பெண்களுக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. அதிகம் காபி, டீ போன்றவை அருந்துவதாலும் பித்த நோய் வரும்.

    பித்த நோய் பெண்களை மிகவும் சிரமப்படுத்திவிடும். காலையில் வெறும் வயிற்றில் வாந்தி, உடலில் என்ன செய்கிறதென்றே சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்தும். பசிக்காது, சரியாக தூக்கம் வராது. தலைசுற்றல் வாந்திவருவது போன்ற நிலை இருந்து கொண்டே இருக்கும்.

    இதற்கு சிறந்த மருந்தாக கருதப்படுவது கீழே காணும் மருந்துதான் இதை மிஞ்சிய வைத்தியம் பித்தத்திற்கு எதுவுமில்லை.

    சீர் + அகம் = சீரகம். அகத்தை அதாவது நமது இரைப்பையை சீராக இயங்க வைக்கும் ஓர் முக்கியமான உணவு பொருள் சீரகம். காரச் சுவையுடைய சீரகம், ஜீரணத்தை தூண்டும் இயல்புடையது. மேலும் பல மருத்துவ குணங்கள் சீரகத்தில் நிறைந்துள்ளது.

    சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். பித்த நோய்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், அதிக உடல் சூடு, பசியின்மை இப்படி பல நோய்களுக்கு சீரகம் சிறந்த மருந்தாகிறது.

    மேலும் அரைக் கீரைச் சாறில் இஞ்சியை அரைத்துக் குடித்தால் பித்த நோய் குறையும்.
    அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அந்தக் குறைந்த சதவீதத்தினரிலும் பெண்களே மதுப் பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

    மேற்கத்திய நாடுகளிலும், மது அருந்துபவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகம். ஆனால் அங்கு பெண்கள் மது அருந்தும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    அதிலும், 1991 முதல் 2000 ஆண்டு வரை பிறந்த பெண்கள் ஆண்களுக்கு நிகராக மது அருந்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் மேலை நாடுகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் மது அருந்துபவர்களாகக் கூட மாறிவிடுவார்களாம்.

    பொதுவாக மது அருந்துவதால் பெண்களே அதிக பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். அமெரிக்காவில் 2000-2015-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 45 முதல் 64 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் விகிதம் 57 சதவீதமாக இருந்தது.

    இது ஆண்களில் 21 சதவீதமாக மட்டுமே இருந்தது. 25 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பெண்களில் சிரோசிஸ் இறப்பு விகிதம் 21 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில், ஆண்களில் இது 10 சதவீதமாகக் குறைந்திருந்தது.

    மது அதிகம் அருந்தி மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அளவுக்கு அதிகமாக, ஆபத்தான அளவுக்கு மது அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக இந்தப் போக்கு பெண்களிடையே அதிகம் உள்ளது. ஆனால் அதிகளவில் பெண்கள் மது அருந்துவது மட்டுமே இங்கு பிரச்சினை அல்ல. மதுவானது ஆண்களின் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை ஒப்பிடும்போது பெண்கள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு வேறுவிதமாக உள்ளது.

    மது அருந்தும் பெண்களின் உடலில் குறைந்த அளவில் ஏடிஎச் என்ற நொதிப்பொருள் உற்பத்தி ஆகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் இத்திரவம், மதுவின் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. உடலிலுள்ள கொழுப்புச்சத்து, மதுவை தக்கவைத்துக் கொள்கையில் நீர் அதைக் கரைக்க முற்படுகிறது.



    பெண்கள் உடலில் கொழுப்பின் அளவு இயற்கையாகவே அதிகமாகவும் நீரின் அளவு குறைவாகவும் இருப்பதால் இயல்பாகவே அவர்களின் உடலில் மதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

    இந்த அம்சம்தான் ஆண்களைவிட பெண்களுக்கு மதுவால் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார், டான் ஷுகர்மேன். இவர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் உடலியக்கத் துறை பேராசிரியராக உள்ளார்.

    அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இந்த நிகழ்வு டெலஸ்கோப்பிங் எனப்படுகிறது.

    ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு மதுப்பழக்கம் தாமதமாகவே ஏற்படுகிறது. அதேநேரம், ஆண்களை விட பெண்கள் விரைவாகவே மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அவர்களுக்கு கல்லீரல் தொடர்பான கோளாறுகள் சீக்கிரமே ஏற்பட்டுவிடுகின்றன. இதயங்களும் நரம்புகளும் விரைந்து பழுதடைகின்றன.

    ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் மது ஏற்படுத்தும் பல பாதிப்புகள் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படவில்லை.

    அதிலும், மது தொடர்பான மருத்துவ ரீதியான சோதனைகள் அனைத்தும் 1990கள் வரை ஆண்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. மது என்பது ஆண்கள் தொடர்பான பிரச்சினை என நம்பப்பட்டதுதான் அதற்குக் காரணம்.

    மருத்துவ சோதனைகள் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆரோக்கியத்துக்கான அமெரிக்க தேசிய நிறுவனம் உத்தரவிட்டது. இதன் பின்பே நிலைமை மாறத் தொடங்கியது.

    அதன் விளைவாகத்தான் தற்போதைய உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. 
    பெண்கள் சில பொருட்களை பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் அலர்ஜிகளின் வகைகள் பற்றியும் அதனை குணப்படுத்தும் முறையையும் பார்க்கலாம்.
    பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அலர்ஜி வகைகள் மற்றும் அதிலிருந்து குணமாவதற்கான தீர்வுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    * இன்றைய பெண்களுக்கு இளநரை தொல்லையை மறைக்க கலரிங், டை பயன்படுத்துகிறார்கள். அலர்ஜி உள்ளவர்கள் தங்கள் தலை முடிக்கு டை போட்டதுமே, வகிடு பகுதியில் அரிப்பு, சிவப்பாக பொரி பொரியாகத் தோன்றுதல்…. மாதிரியான அலர்ஜி அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.

    முகம் கருமை படர்ந்ததுபோல் இருக்கும். ‘ஹெர்பல் ஹேர் டை’ என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான டைகளில் மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுவதே இல்லை. அதுதான் பிரச்சனைக்கு காரணம். மூலிகைகள் சேர்க்கப்பட்ட டையை அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது.

    அல்லது ‘லெஸ் பொட்டென்ஷியல் ஹேர் டை’ என்கிற பெயரில் கிடைக்கும் டைகளை பயன்படுத்தலாம். எந்த டையானாலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்வது அவசியம்.

    * நெற்றியில் வைத்துக் கொள்ளும் சாந்து, தரமற்ற குங்குமம் மற்றும் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள பசையினால் வரக்கூடிய அலர்ஜி இது. இதனால் நெற்றிப் பகுதி தோல் உரிந்து சிவப்பாகத் தடித்துவிடும்.



    நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில், வாஸ்லின் தடவி, அதன் மேலாக வீட்டில் உள்ள காபிப் பொடியை பொட்டு வடிவில், தொட்டு வைத்துக் கொள்ளலாம். அலர்ஜி பிரச்சனை தீரும்.

    * முகம், கை, கால்களில் உள்ள முடியை நீக்குவதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துவதால் இந்த அலர்ஜி ஏற்படலாம். இந்த வகை க்ரீம்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் அலர்ஜி ஏற்பட்டு, தோலில் கோடு போட்டது போல் பொரி பொரியாக சிவந்து தடித்துப் போகும்.

    நாளடைவில், அந்த இடம் வெள்ளையாகவே மாறிவிடும். இதை முழுமையாக சரி செய்யவும் முடியாது. எனவே உடனடியாக அந்த க்ரீம்களை தவிர்த்துவிடுவது தான் நல்லது.

    * அழகழகாக மின்னும் சில நவீன வகை மெட்டல் நகைகளை அணியும்போது கை, கழுத்து, காது பகுதிகளில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு தங்கம்கூட அலர்ஜியை ஏற்படுத்தும்.

    இவர்கள் உலோகத்தால் ஆன ஆபரணங்களைத் தவிர்த்து, மர வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களையோ, தோலினால் செய்யப்பட்ட நகைகளையோ பயன்படுத்தலாம்.
    ×