search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புது மாப்பிள்ளை"

    • திருமண வாழ்கையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என கடிதம் எழுதி வைத்து உள்ளார்
    • ராஜாராம் மனைவி புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை செய்தனர்

    கோவை.

    கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 29). ஐடி ஊழியர். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜாராம் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

    ஆனால், மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் மாயமாவதற்கு முன்பு கம்பெனியில் உள்ள நோட்டில் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

    அதில் "திருமண வாழ்கையை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை. இதன் காரணமாக நான் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்." இவ்வாறு அதில் எழுதியிருந்தார். இதுகுறித்து ராஜாராமின் மனைவி போத்தனூர் போலீசில் தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான புது மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

    • ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (38). கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணி முடிந்து ரவிக்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது ரவிக்குமார் மது அருந்தி உள்ளார். ஊரில் உள்ளவர்களுக்கு போன் செய்து கொண்டு அப்படியே தூங்க அங்குள்ள அறைக்கு சென்று விட்டார்.

    இதனையடுத்து ரவிக்குமார் உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் செல்போன் உடைந்து கிடந்து உள்ளது.

    மேலும் ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை கீழே இறக்கி வைத்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரவிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

    புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் கார்த்திக். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகுலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. கார்த்திக்கிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. மருத்துவரிடம் காண்பித்தும் பலனில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் சம்பவத்தன்று விஷம் குடித்து தல்லாகுளம் பகுதியில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுமதி (வயது 25). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமதி எல்லீஸ் நகரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். வாழ்க்கையில் விரக்திய டைந்த அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • ஷங்கரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரி மீது சங்கரின் பைக் திடீரென மோதியது.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ளது வாய்க்கால்புதூர். இங்குள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவரது மனைவி பவித்ரா. சங்கர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு அருகே இரவு நேரத்தில்  சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஷங்கரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரி மீது சங்கரின் பைக் திடீரென மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த சங்கரை பெருந்துறையில் உள்ள ஐ ஆர்.டி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கர் இறந்து விட்டார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×