search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீடி இலைகள் பறிமுதல்"

    • ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர்.
    • போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பீடி இலை பண்டல்கள், மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் காயல்பட்டினம் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான கடற்கரை வழியாக போதைப்பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், காவலர்கள் இருதய ராஜகுமார், ராமர் உள்ளிட்ட குழுவினர் குறிப்பிட்ட கடற்கரை பகுதிக்கு சென்று கண்காணித்து வந்தனர்.

    இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர். படகு ஒன்றும் தனியாக நின்று கொண்டிருந்தது. உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.

    ஆனால் உஷாரான அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    விசாரணையில் அவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அந்தோணிதுரை (52) என்பது தெரியவந்தது. அவர், தன்னை தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் ரூ.5 ஆயிரம் தந்து இங்கு அழைத்து வந்ததாகவும் வேறு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மர்ம பண்டல்களை ஆய்வு செய்தபோது, 50 மூட்டைகளில் சுமார் 2 டன் எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரிந்தது.

    இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 3 பேர், படகின் உரிமையாளர் குறித்த விவரங்களை கேட்டு பிடிபட்ட அந்தோணி துரையிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ் , செல்வகுமார், ராமச்சந்திரன், தலைமை காவலர் இருதயராஜ், ராமர், காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணிக்கு மினிலாரியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பைபர் படகில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் பீடி இலைகள் கடத்தி செல்ல இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, மினி லாரி ஆகியவற்றை கைப்பற்றினர். லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் எடை சுமார் 1400 கிலோ. இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும்.

    • தூத்துக்குடி பீச் ரோடு வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி நகர தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • படகுகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் 2 லோடு ஆட்டோக்களை நிறுத்தி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பீச் ரோடு வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி நகர தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இன்று அதிகாலை தனிப்படை போலீசார் மாணிக்கராஜ், திருமணிராஜ், செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ரோஜ் பூங்கா அருகே படகுகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் 2 லோடு ஆட்டோக்களை நிறுத்தி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்று அதனை சோதனை செய்தபோது அதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 83 மூட்டைகளில் 4,150 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது.

    மேலும் அதை படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் லோடு ஆட்டோக்களை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் கூத்தன்குழியைச் சேர்ந்த தினேஷ் (வயது30), எடிசன் (20) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் 2 பேரையும் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து அதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனத்தில் 40 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,236 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், மினிலாரி, இரண்டு பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிகவும் அருகாமையில் உள்ள இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக தங்கக்கட்டிகள், பீடி இலைகள், மஞ்சள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதும் அதனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

    இந்தநிலையில் தமிழக கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து, கடற்படையினர் தலைமன்னார், நெடுந்தீவு முதல் புத்தளம் கடற்பகுதி மற்றும் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், புத்தளம் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற வாகனத்தை நிறுத்திய கடற்படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,236 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி கைப்பற்றப்பட்டதோடு இரண்டு பேரை கைது செய்தனர். இந்த பீடி இலைகள் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து படகு மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த இலங்கை படகில் மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், மினிலாரி, இரண்டு பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக தொடர்ந்து கஞ்சா, பீடி இலைகள் கடத்தப்படுவதாகவும் இதற்கு பதிலாக தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் பெற்று செல்லுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • கடற்கரையோரமாக சந்தேகத்திற்க்கு இடமாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.
    • போலீசார் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் 32 மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இல்லைகள் இருப்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடலோர பகுதி வழியாக பீடி இலைகள், மஞ்சள் மற்றும் டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையோர பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி தாளமுத்துநகர்-ராஜபாளையம் கடற்கரையோரமாக சந்தேகத்திற்க்கு இடமாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது திடீரென போலீசார் வருவதை கண்டதும் மினிலாரியில் இருந்தவர்கள் அதனை நிறுத்தி விட்டு கீழ இறங்கி தப்பி ஓடி விட்டனர். போலீசார் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் 32 மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இல்லைகள் இருப்பது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் யார்? மினி லாரியில் இருந்து தப்பி ஓடியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடற்கரையோர பகுதியில் சந்தேகத்திடமாக மினிலாரி மற்றும் படகுடன் 6 பேர் நின்றிருந்தனர்.
    • படகு மற்றும் லோடு ஆட்டோவில் இருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், சுரேஷ், தலைமை காவலர்கள் ராமர் இருதயராஜ், பழனி, இசக்கி மற்றும் போலீசார் கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை வேம்பார் கலைஞானபுரம் கடற்கரையோர பகுதியில் சந்தேகத்திடமாக மினிலாரி மற்றும் படகுடன் 6 பேர் நின்றிருந்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் படகு மற்றும் மினிலாரியை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் பீடி இலைகள் 40 மூட்டைகளில் மொத்தம் 1,200 கிலோ இருந்தது தெரியவந்தது. மேலும் அவை தூத்துக்குடியில் இருந்த இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இதனைத் தொடர்ந்து படகு மற்றும் லோடு ஆட்டோவில் இருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடத்தலில் ஈடுபட்ட மணக்கரை கீழூரை சேர்ந்த சரவணன் (23), மாரியப்பன் (38), பாளையங்கோட்டை சாந்திநகர் 3-வது தெருவை சேர்ந்த லூர்து அந்தோணி (41), கம்பராமாயண தெருவை சேர்ந்த முத்துக்குமார் (38), நெல்லை கான்சாபுரம் நொச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூர் (20), முருகன் கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (40) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வள்ளத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக 600 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் 30 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது.
    • கூடங்குளம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் சரகத்திற்குட்பட்ட கடல் பகுதியில் கடலோரபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாரன், சுரேத்திரகுமார், ஏட்டுகள் முருகன், ரவிசந்திரன், ஐசக் சாம், போலீஸ்காரர்கள் ஜெகதீஸ், கிருஷ்ணகுமார் ஆகியோர் ரோந்து சென்றனர்.

    உவரி வேளாங்கண்ணி மாதா கோவில் தூண்டில் வளைவு அருகே சென்றபோது, பதிவு எண் இல்லாத பைபர் வள்ளம் நிற்பதை பார்த்தனர். அதில் தூத்துக்குடி வடக்கு கடற்கரை அண்ணா காலனியை சேர்ந்த பிரவின் (வயது 38), தெற்கு பீச் ரோடு இனிகோ நகரைச் சேர்ந்த கிஷோர் (34) ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து வள்ளத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக 600 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் 30 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தியபோது, அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் ஆகும். அதனை கைப்பற்றிய போலீசார், பிரவிண் மற்றும் கிசோரை கைது செய்தனர்.

    அவர்களோடு வந்த நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் பகுதியை சேர்ந்த துளசிமணி தப்பிச்சென்று விட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க கன்னியாகுமரி கடலோர பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கூடங்குளம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது.
    • கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த லோடு வேனை நிறுத்த சொல்லியபோதும் லோடுவேன் நிற்காமல் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் திரும்பி சென்றது.

    இதனைத்தொடர்ந்து அந்த லோடு வேனை பின் தொடர்ந்து சென்று போலீசார் தடுத்து நிறுத்திய போது டிரைவர் மற்றும் மற்றொருவர் காட்டுப் பகுதியில் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது. இதனால் தப்பியோடிய 2 பேரும் பீடி இலை கடத்தலில் ஈடுபட்டுள்ளதை அறிந்த போலீசார் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடிக்கு வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரை சாலை ரோச் பூங்கா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்ததது. அப்போது போலீசாரை பார்த்ததும் ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பிச் சென்றனர்.

    போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 42 மூட்டைகளில் 35 கிலோ பீடிஇலைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பீடிஇலைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பீடிஇலைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? பீடிஇலைகள் இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா? இதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி, தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பீடிஇலைகள், மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.

    • தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
    • தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதனை தடுக்க கடலோர காவல்படையினரும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி நகர உட்கோட்ட சிறப்பு படை போலீஸ் தலைமை காவலர் மாணிக்கராஜ் மற்றும் மகாலிங்கம், சாமுவேல், செந்தில் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மினிலாரியில் இருந்து சிலர் தப்பி ஓடினர். எனினும் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் அவர் மினிலாரியை ஓட்டிவந்த தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த சார்லஸ் (வயது41) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் மினிலாரியை சோதனையிட்டனர். அதில் 49 மூட்டைகளில் 2,500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவைகள் தூத்துக்குடியில் இருந்த இலங்கைக்கு கடத்த முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சார்லசை கைது செய்தனர்.

    மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து. பீடி இலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதில் தொடர்புடையவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • படகினை சோதனை செய்ததில், அதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1400 கிலோ எடை கொண்ட, 41 பீடிஇலை பண்டல்கள் இருந்தது.
    • கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், படகை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை பகுதியில் மர்ம நபர்கள் சிலர் படகுடன் கடத்தலில் ஈடுபடுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கியூப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், சுரேஷ்குமார், சுரேஷ், கந்தசாமி, தலைமை காவலர்கள் ராமர், பாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், முதல் நிலை காவலர்கள் இருதயராஜ், பழனி பாலமுருகன் ஆகியோர் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து அதனை சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அதிலிருந்து தப்பி ஓட முயன்ற நபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து படகினை சோதனை செய்ததில், அதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1400 கிலோ எடை கொண்ட, 41 பீடிஇலை பண்டல்கள் இருந்தது.

    இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி இந்திரா நகர் பிரபு (41) அலங்கார தட்டு ஜெயக்குமார் (32) தாளமுத்து நகர்-இந்திராநகர் இரட்சகர் (36) திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி ரஞ்சித்(42) மற்றும் திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெரு மெல்வர்(30) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மெல்வருகு சொந்தமான படகையும் பறிமுதல் செய்தனர்.

    ×