search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் தூதரகம்"

    புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    அவ்வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

    பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது, பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    உள்நாட்டு தலையீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் மூடப்பட்ட பாகிஸ்தான் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. #Pakistanconsulate
    காபுல்:

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள இடங்களின்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கேயுள்ள ஜலாலாபாத் நகரில் இயங்கிவரும் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் காரில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை கடத்திச் சென்றதாக செய்திகள் வந்தன.

    மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு விசாவுக்காக விண்ணப்பித்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கபடும் நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்கர் மாகாண கவர்னர் ஹயாத்துல்லா ஹயாத் கண்டனம் தெரிவித்திருந்தார்.


    இதன் விளைவாக தங்கள் நாட்டின் விவகாரங்களில் அண்டைநாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு மாகாண கவர்னர் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜலாலாபாத் நகரில் உள்ள துணை தூதகரத்தை மூடுமாறு பாகிஸ்தான் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஜலாலாபாத் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று நூற்றுக்கணக்கானவர்கள் இந்த தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். #Pakistanconsulate #Jalalabadconsulate
    ×