search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவைகள் கணக்கெடுப்பு"

    • வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர்.
    • பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், தேவதானப்பட்டி, பழனி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

    இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக மும்பை, டெல்லி, கேரளா, பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களுடன் கொடைக்கானலில் பயிலும் உள்ளூர் மாணவ-மாணவிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மற்றும் வனப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து 25 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கரடிச்சோலை, ரெட் ராக், பாம்பே சோலா, புலிச்சோலை, வட்டக்கானல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் கணகக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த கணக்கெடுப்பில் பாரடைஸ், பிளைகேட்சர், சாம்பல் நெற்றி, பச்சைபுறா, மாம்பழச்சிட்டு, நீல நிற கரும்பிடாரி, கருந்தலை மாங்குயில், கருந்தலை குயில் கீச்சான் உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டன. இன்றும் 2-வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • மஞ்சள் மூக்கு நாரை உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யப்பட்டன.

    ஓசூர்:

    ஓசூர் வனக்கோட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில், 200-க்கும் மேற்பட்ட பறவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்ட காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி உட்பட மொத்தம் 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். மேலும், தொலைநோக்கு கருவிகள், கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி, பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, சிறிய காட்டு ஆந்தை, செந்நாரை, மீன்கொத்திகள், சுடலை குயில் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யப்பட்டன. 

    குறிப்பாக ஓசூர் டி.வி.எஸ்., தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நீர்நிலையில் மஞ்சள் மூக்கு நாரை பறவை கண்டறியப்பட்டது. இந்த பறவைகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த நீர்நிலையில் தங்கி பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து பராமரித்து அங்கிருந்து செல்வது வழக்கம்.

    டி.வி.எஸ்., வளாகத்திலுள்ள ஏரியில், மரங்கள் மற்றும் புதர் செடிகள் அதிகளவில் காணப்படுவதாலும், சீதோஷ்ண நிலை இப்பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருப்பதாலும், கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இந்த பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.
    • சிறப்பு கேமிராக்கள், பைனாகுலர்கள், ஒலிஅறியும் கருவிகள் கொண்டு கணக்கெடுப்பு பணிகள் 2 நாட்கள் நடைபெறும் என வனத்துறையினர் கூறினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கி 20 இடங்களில் நடைபெறுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

    கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. கிரேஹெட்டட் கென்னடி பிளேகேட்சிங், ஆரஞ்சு பிளைகேட்சிங், யுரேசியன்பிளாக் பேர், நீலகிரி பிளைகேட்ச்சர், ஓரியண்டல் ஒயிட்ஐ, பழனி லாபிங்திரஸ், ரஸ்டிடைல்டு பிளைகேட்சர் உள்ளிட்ட அரியவகை பறவை இனங்கள் உள்ளன.

    இந்த பறவைகள் அனைத்தும் பழங்களை உண்ணாது. பூச்சிகளை மட்டுமே உண்டு வாழக்கூடியதாகும். இமயமலையில் 4 வகையான மரங்கொத்திகள் உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணிகள் இதுபோன்ற அரியவகை பறவைகள் பாதுகாக்கப்படுகின்றனவா, இனப்பெருக்கம் எந்த அளவில் உள்ளது. வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதா என ஆய்வுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    20-க்கும் மேற்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகின்றது. சிறப்பு கேமிராக்கள், பைனாகுலர்கள், ஒலிஅறியும் கருவிகள் கொண்டு இந்த பணிகள் 2 நாட்கள் நடைபெறும் என வனத்துறையினர் கூறினர்.

    • சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சேலம் வனக்கோட்டம் மிகவும் பழமை வாய்ந்த கோட்டமாகும்.
    • இதை தொடர்ந்து வருகிற 5-ந்தேதி மாநில அளவில் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சேலம் வனக்கோட்டம் மிகவும் பழமை வாய்ந்த கோட்டமாகும்.சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் மலை, ஜருகு மலை, சூரிய மலை கோதுமலை, பாலமலை, நகர மலை, கஞ்சமலை என இயற்கை எழில் கொஞ்சம் மலைகள் மற்றும் குன்றுகள் காணப்படுகின்றன.

    சேலம் வனக்கோட்ட பகுதிகள் காவேரி, சுவேதா நிதி, சரபங்காநதி, வெள்ளாறு, திருமணிமுத்தாறு, காட்டாறு, கோமுகி நதி என சிறு சிறு ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர் ஆதாரமாக இருக்கின்றன.

    சேலம் மாவட்டத்தில் காப்புக்காடுகள் 67532.122 ெஹக்டர் பரப்பளவும் காப்பு நிலங்கள் 3031.925 ஹெக்டர் பரப்பளவு மற்றும் வகைப்படுத்தப்படாத நிலங்கள் 388.015 ஹெக்டர் என ஆக மொத்தம் 70952.062 ஹெக்டர் பரப்பளவில் வளங்கள் உள்ளன.

    இந்த காப்புக்காடுகளில் யானை, காட்டுமாடு, கரடி, மான், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, குரங்குகள், மலைப்பாம்பு, மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான மன உயிரினங்கள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் வாழ்விடமாக கொண்டு வசித்து வருகின்றன.

    சேலம் வனக்கோட்டம் 6 வனங்களின் ஆற்று சரகமாக பிரிக்கப்பட்டு முறையை சேர்வராயன் தெற்கு வன சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ் பேட்டை, மேட்டூர், ஏற்காடு, மற்றும் வாழப்பாடி தமிழ்நாடு வனத்துறை மூலமாக ஈர நிலப்பறவைகள் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 29-ந்தேதி நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து வருகிற 5-ந்தேதி மாநில அளவில் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ப விருப்பமுள்ள தன்னார்வலர்கள் https:forms.gle/m85jUz9kavYKvGrD8 என்ற லிங்க் முகவரியில் நாளை(புதன்கிழமை) மாலை 6 மணிக்குள் பதிவு செய்யுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    3-ந் தேதி பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்தான முன்னேற்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து வருகிற 4,5-ந் தேதிகளில் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
    • கடல் சார்ந்த பகுதிகளான ஓதியூர் மற்றும் முதலியார் குப்பம், கழிவெளி பகுதியில் வாழக் கூடிய பறவைகளை கணக்கெடுத்தனர்.

    மதுராந்தகம்:

    தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நீர் பறவைகள், நிலப்பறைவைகள் என்று 2 கட்டமாக நடைபெற்றது. இதில் வன அதிகாரிகள், பறவை ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

    இதில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பில் நீர், நிலத்தில் வசிக்கும் பறவைகள் மொத்தம் 22 ஆயிரத்து 800 உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வேடந்தாங்கல் ஏரி, கரிக்கிலி ஏரி, மதுராந்தகம் ஏரி, அண்டவாக்கம் ஏரி, உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை பகுதிகளில் வசிக்கக் கூடிய பறவைகளின் எண்ணிக்கையை வேடந்தாங்கல் வனசரக அலுவலர் லெஸ்லி தலைமையிலான வனத்துறை குழுவினர் பைனா குலர், தொலை நோக்கி கருவிகளை கொண்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 49 வகையான 9050 பறவைகள் இருந்தது.

    மதுராந்தகம் வனக்கோட்டத்தின் சார்பில் வனகோட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறை குழுவினர் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட கடலும், கடல் சார்ந்த பகுதிகளான ஓதியூர் மற்றும் முதலியார் குப்பம், கழிவெளி பகுதியில் வாழக் கூடிய பறவைகளை கணக்கெடுத்தனர். இதில் 40 வகையான 13 ஆயிரத்து 750 பறவைகள் இருப்பது தெரியவந்தது.

    • தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும்.
    • பள்ளிக்கரணை பகுதியிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

    மதுராந்தகம்:

    தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீர்பறவைகள், நிலப்பறவைகள் என இரண்டு பரிவாக நடைபெறுகிறது. இதில் நீர்பறவைகளின் கணக்கெடுப்பு நேற்று (28-ந்தேதி) தொடங்கியது. இது இன்று வரை நடைபெறுகிறது.

    வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், நீர்நிலைப் பகுதிகள் மற்றும் பறவைகள் தங்கக் கூடிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    வன சரக அலுவலர் லெஸ்லி தலைமையில் வேடந்தாங்கல், கரிக்கிலி, மதுராந்தகம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அதிநவீன தொலை நோக்கு கருவிகளைக் கொண்டு பறவைகள் கணக்கிடப்படுகிறது.

    மதுராந்தகம் வன கோட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில் ஓதியூர் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளிலும் வனத்துறை பணியாளர்களைக் கொண்டு பறவைகள் கணக்கிடப்படுகிறது. நேற்று காலை தொடங்கிய பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று மாலை வரை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பள்ளிக்கரணை பகுதியிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பள்ளிக்கரணை, காரப்பாக்கம், பெரும்பாக்கம் சதுப்புநிலப் பகுதிகளில் வன அதிகாரிகள் நேற்று முதல் பறைவைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் பறவை ஆர்வலர்கள், மாணவர்களும் பங்கேற்று கணக்கெடுத்து வருகின்றனர்.

    நிலப்பறவைகளின் கணக்கெடுப்புபணி மார்ச் மாதம் 4-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி மாவட்டத்தில் நீர்நிலை சார்ந்த 15 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது
    • வனத்துறையினருடன் கைகோர்த்த தன்னார்வலர்கள், மாணவர்கள்

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் மற்றும் நிலம் சார்ந்த பகுதிகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இதன் மூலம் அரியவகை பறவை யினங்கள் வருகை குறித்த தகவல்கள் வெளியாகும். இந்த பறவைகள் இயற்கை சூழலுக்கு ஏற்ப வருகை தரு–கின்றன. திருச்சி மாவட்டத்தில் உள்ள வனசரக அலுவ–லகங்களுக்கு உட்பட்ட 15 ஈர நிலங்களில் இரண்டு நாட்கள் பறவைகள் கணக் கெடுப்புப் பணி நடை–பெறுகிறது.

    பல்வேறு வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து இனபெருக்கத்திற்காக பற–வைகள் திருச்சி மாவட்டத்திற்கு வருடம் தோறும் பறந்து வருகின்றன. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர் மாதத்திலும், வடகிழக்கு பருவமழை முடிவடையும் கால கட்டத்திலும் பற–வைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். தற்போது வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ள நிலையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட உதவி வனப்பாது காவலர் சம்பத்குமார் கூறியதாவது:- இதில் திருச்சி மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு, தாய–னூர், கள்ளிக்குடி, பூங்குடி, கூத்தைப்பார் பெரிய ஏரி, அரசங்குடி ஏரி, கிருஷ்ணசமுத்திரம், கிளியூர், வாழவந்தான் கோட்டை, துவாக்குடி ஏரி, பூலாங்குடி, மாவடிக்குளம், குண்டூர், ஆலத்துடையான்பட்டி, கீரம்பூர், துறையூர், சிக்கத் தம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று பறவைகள் கணக்கெ–டுக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த பணிக–ளுக்காக தலா 5 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் வனத்துறையினருடன் தன்னார்வலர்கள், பொது–மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்துள்ளனர். வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு பகுதி–யில் மட்டும் 45 வகையான பறவையினங்கள் கண்டறி–யப்பட்டு உள்ளன. அவற்றில் உள்ளூர் பற–வைகள் 50 சதவீதமும், வெளிநாட்டு பறவைகள் 50 சதவீதமும் இடம் பெற்றுள்ளன. சைபீரியா நாட்டில் இருந்து நத்தைக்குத்தி நாரை, பெலிக்கான் ஆகிய பறவைகள் அதிகம் வந்துள்ளன. அவை இங்குள்ள இயற்கை சூழல், உணவு ஆகியவற்றை நாடி வந்துள்ளது.

    டிசம்பர் மாத தொடக்கத்தில் வருகை தரும் பறவைகள் ஜனவரி மாத இறுதியில் புறப்பட்டு செல்லும். இதேபோல் மலைப்பகு–தியில் பறவைகள் கணக்கெ–டுக்கும் பணியானது வருகிற மார்ச் மாதம் 4 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெறும் என்றார். முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் ஜான்சிராணி, பாரஸ்டர்கள் தாமாதரன், திவ்யா ஆகியோர் கலந்து–கொண்டனர்.


    • ஊசிவாய்தாரா என்ற வகை பறவை சைபிரியா நாட்டை சேர்ந்தது.
    • நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு பறவைகள் கணக்கெடுப்பானது நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தாழையூத்து அருகே ராஜவல்லிபுரம் குளத்தில் அதிகாலையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

    இதனை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை நீர்வளம் அமைப்பு, மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    தாமிரபரணி, அதன் துணை ஆறுகள் மற்றும் பாசன குளங்கள் உள்ளிட்டவை நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், வாழை உற்பத்தி மையமாகவும் செழிப்புற செய்கின்றன.

    இப்பாசன குளங்கள் எண்ணற்ற நீர்வாழ் பறவைகளுக்கு குறிப்பாக குளிர் காலங்களில் வலசை வரும் பறவைகளுக்கு புகலிடமாக உள்ளன. இக்குளங்களில் இதுவரைக்கும் 100-க்கும் அதிகமான பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், நயினார் குளம், கங்கைகொண்டான், சூரங்குடி ஆகிய குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் திருப்பணி செட்டிக்குளம், மூப்பன்பட்டி கண்மாய் ஆகிய நீர்நிலைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம், ராஜகோபாலப்பேரி குளங்கள் பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு வாய்ப்பளிப்பதை கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தில் பறவைகள் ஆராய்ச்சியாளர் மரிய அந்தோணி தலைமையில், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் 15 பேர் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

    திருக்குறுங்குடி பெரியகுளம், ஊச்சிகுளம், செங்களாகுறிச்சி குளம், கொடுமுடியாறு அணை, பச்சையாறு அணை பகுதிகளுக்கு சென்று அங்கு வாழும் பறவைகள் குறித்து கணக்கெடுத்தனர். இதில் களக்காடு, பகுதியில் கூலகிடா, முக்குளிப்பான், மீசை ஆலா, சிறு கொக்கு, நெட்டை கொக்கு, குளத்து கொக்கு, அரிவாள் மூக்கன், வர்ண நாரை, சின்ன அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், சங்கு வளை நாரை, ஊசிவாய்தாரா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வகையிலான பறவைகள் வாழ்வது கண்டறியப்பட்டது.

    இதில் ஊசிவாய்தாரா என்ற வகை பறவை சைபிரியா நாட்டை சேர்ந்தது ஆகும். இதுபோல நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திலும் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.

    • தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும்.
    • நீர் பறவைகளின் கணக்கெடுப்பு வரும் வருகிற 28, 29 நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023-ம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப்பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது இவ்வரும் வருகிற 28, 29 ஆகிய தேதிகளிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 4 மற்றும் 5-ந்தேதிகளிலும் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நீர் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக 20 இடங்களிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பிற்காக மாவட்டந்தோறும் 20 இடங்களிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    பறவைகள் கணக்கெடுப்பானது தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளதால் இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டுமாயின் அந்தந்த மாவட்ட வன அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×