search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் காப்பீடு திட்டம்"

    • மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் சீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட வாகனத்தை கொடியசைத்து, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் சீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேளாண் உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவிலான பயனை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனம் முதல் கட்டமாக உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு நவம்பர் 15-ந்தேதி வரை நெல் பயிர்காப்பீடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை திருப்பூர், மூலனூர், குடிமங்கலம், பொங்கலூர், குண்டடம், பல்லடம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளுக்கு நிலக்கடலை, கொத்துமல்லி, மிளகாய், தக்காளி, வெங்காயம், வாழை, மரவள்ளி, கொண்டைக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், பயிர் காப்பீடு தொகை மற்றும் காப்பீடு செய்ய கடைசி நாள் போன்ற விபரங்கள் இவ்வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது விவசாயி களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாத்தி டவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ங்களை கடைபிடிப்பதையும் ஊக்குவிக்கிறது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியி டப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் கடன்பெறும் விவசாயிகள் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய ப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமா கவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமா கவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயி ருக்கு ஏக்கருக்கு ரூ.515 மட்டும் காப்பீட்டு கட்டண மாக செலுத்தினால் போது மானது.

    விவசாயிகள் இத்திட்ட த்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    கும்பப்பூ நெற்பயி ருக்கான இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.34 ஆயிரத்து 351 ஆகும். மேலும் நடப்பாண்டு அறிவிக்கைப்படி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இய லாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும்.
    • விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் மட்டுமே பதிவு  செய்யப்படும்.

    விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பிரீமியம் தொகை, பிரீமியம் தொகையை எவ்வாறு செலுத்துவது மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    விவசாயிகள் யாரும் விடுபடாத வகையில், அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்காக, வங்கிகளுக்கு கடைசி தேதியிலிருந்து 15 நாள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×