search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவர் குருபூஜை"

    • தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சாமிநாதன், மனோஜ் தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் அணி அணியாக வந்து மாலை அணிவித்தனர்.

    சென்னை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் பகுதியில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அரசின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

    முத்துராமலிங்க தேவர் படத்திற்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சாமிநாதன், மனோஜ் தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மேலும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, தாயகம் கவி, வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், டி.ஜெயக்குமார், பச்சைமால், ஓ.எஸ்.மணியன், மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வக்கீல் முருகவேல் பாபு, வேல் ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஜி.ஆர்.வெங்கடேசன், சைதை மனோகரன், ஆர்.எஸ்.முத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செந்தமிழன், சுகுமார் பாபு உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

    தேவர் ஜெயந்தியையொட்டி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் அம்பத்தூர் பாலமுருகன், அப்புனு, தாமு ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அஸ்லாம், கவியரசன், நரேஷ்குமார், கருணாகரன், கார்த்திகேசன், சுரேஷ், வினோ விஜய், கோபிநாத், பிரவீன், ஆனந்த் உள்பட சென்னை மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

    முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் அணி அணியாக வந்து மாலை அணிவித்தனர்.

    • தேவர் திருமகன் என அன்போடு அழைத்தவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா.
    • தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதல் நாளான 28-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழா நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. அங்கு தமிழக அரசு சார்பில் தேவரின் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேவர் திருமகன் என அன்போடு அழைத்தவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி.

    தேவர் நூற்றாண்டு நூலகம், தேவர் புகைப்பட கண்காட்சி அரங்கம் போன்றவற்றை அமைத்தவர் கருணாநிதி. மதுரை மேம்பாலத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டியவர் கருணாநிதி.

    கமுதி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவர் பெயரில் கல்லூரி அமைய காரணம் கருணாநிதி.

    பசும்பொன்னில் பொதுமக்கள் எளிதாக அஞ்சலி செலுத்த இரண்டு மண்டபங்கள். பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் ரூ.2.05 கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மீனவர்களை மீட்க திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீவர்கள் பிரச்சனைகளை பேச மீனவ பிரதிநிதிகளோடு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு டெல்லி சென்றார்.

    கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. கவர்னர் பாரதிய ஜனதா கட்சியாக மாறிவிட்டார், ஆளுநர் மாளிகையும் பாரதிய ஜனதா அலுவலகமாக மாறிவிட்டது. இதுதான் வெட்கக்கேடு.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    • பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இதனை வருடந்தோறும் அ.தி.மு.க. பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக் குழுவினரிடம் வழங்கி வந்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக கோர்ட்டு உத்தரவுப்படி தங்க கவசம் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி பெற்று விழாக்குழுவிடம் வழங்கினார். தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    இதையடுத்து தங்களிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    • தேவர் குருபூஜை விழாவையொட்டி உள்ளூர், பிற மாவட்டங்களில் இருந்து 250 பஸ்கள் கூடுதலாக இயக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • முத்துராமலிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை முன்னிலையில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    பசும்பொன் தேவர் நினைவிடம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை போதிய எண்ணிக்கையிலான கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க 'நிர்வாக நடுவர்கள்' நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிர்வாக நடுவர்கள் சட்டம்-ஒழுங்கு ஏற்படும் சமயத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய காவல் துறை அலுவலர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும்.

    பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்படும் அரசு பஸ்களில் ஒவ்வொரு பஸ்சிலும் ஒரு போலீசாரை நியமிக்க வேண்டும்.

    தனி நபர்கள் அமைக்கும் அன்னதான பந்தலின் உறுதித்தன்மையை சரி பார்க்க வேண்டும். நினைவி டத்தின் மேற்குப்புறம் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மரத்தாலான தடுப்புவேலி அமைக்க வேண்டும்.

    கோட்டை மேடு வளைவு முதல் நினைவிடத்தில் உள்ள வளைவு வரை தற்காலிக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். குருபூஜை விழாவிற்கு வரும் மக்கள் காலணிகள் அகற்றுவதற்கு ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும். நுழைவு பகுதிகளிலிந்து வெளிப்பகுதி வரை சாலை செப்பனிடும் பணி அனைத்தும் விரைவில் முடித்திருக்க வேண்டும்.

    பசும்பொன் கிராமத்தில் மட்டும் 27 சின்டெக்ஸ், 30 நகரும் கழிப்பறைகள், 30 குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். 90 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் அமர்த்த வேண்டும். 29 மற்றும் 30-ந் தேதிகளில் 200 மற்றும் 250 பஸ்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக இயக்க வேண்டும்.

    சுமார் 19 இடங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். 2 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மின் கம்பிகளில் பழுது ஏற்பட்டால், அவைகளை உடனே சரிசெய்ய போதுமான பணியாளர்களை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் ஜெனரேட்டர், மற்றும் பாதுகாப்பு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்கழிப்பறைகள் அருகில் கண்டிப்பாக மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பசும்பொன் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை பரிசோதித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அலுவலர்கள் நாளை (27-ந் தேதி)க்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், ராமநாதபுரம் கோட்டாட்சியர் மரகதநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், அருண் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
    • இந்த தகவலை கடலாடி ஒன்றிய குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-ம் ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா, 34-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 5-ம் ஆண்டு வருஷாபிஷேகம் ஆகிய விழாக்களை முன்னிட்டு ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் நடத்தும் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையுடன் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு பந்தயம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக கடலாடி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் கூறியதாவது:-

    வருகிற (27-ந் தேதி) கடலாடியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி தேவர் உறவின்முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகிக்கிறார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் சூரி முனியசாமி தொடங்கி வைக்கிறார்.

    சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைக்கிறார். பெரிய மாடு, நடமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி வாங்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ரேக்ளா ரேஸ் முன்னாள் மாநில தலைவர் மோகன் சாமி குமார் வழங்குகிறார்.

    பெரிய மாடு, நடமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி கொடுக்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ராமேசுவரம் துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி வழங்குகிறார். விழாவை முன்னிட்டு வெற்றி பெறும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நினைவுப் பரிசை கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் வழங்குகிறார். விழாவையொட்டி பொது அன்னதானம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×