search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி முருகன் கோவில்"

    • திருத்தணி, முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும்.
    • தேரோட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் புலி வாகனம்,

    வெள்ளி மயில் வாகனம், சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்நிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் கோவில் மாட வீதியில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    மரத்தேரினை கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா அரோகரா என்ற கோஷம் மலைக்கோவில் முழுவதும் பக்தி மயமாக காட்சி அளித்தது.

    கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் திரிபுராந்தக சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 23-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் இந்த பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாளான நேற்று காலை திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திரிபுராந்தக சுவாமி, திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். இரவு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் நாகேஸ்வர சாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபா ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு உற்சவ மூர்த்திகளான நாகவல்லி சமேத நாகேஸ்வரர் சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    • தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
    • வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினந்தோறும் வள்ளி தெய்வ யானை சமேதராய் உற்சவர் முருகன் காலை, மாலை என இருவேளைகளிலும் புலி வாகனம், சிங்க வாகனம், வெள்ளி நாக வாகனம், ஆட்டுக்கிடாவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சித்திரை பிரம்மோற்சவ தொடக்க விழாவையொட்டி இன்று அதிகாலையில் மூலவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலவருக்கு தங்க கவசம், பச்சைக்கல் மரகத மாலை. அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுகசாமி கோவிலில் இருந்து 1008 பால்குடங்கள் எடுத்து வந்தனர். இதில் கோவில் இணைஆணையர் ரமணி,அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் உஷாரவி,மோகனன். சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருப்போரூரில் உள்ள கந்தசாமிகோயில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில், இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் காலை, மாலையில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி தங்க ஹம்ச வாகனம், 20-ந் தேதி தங்க கிளி வாகனம், 21-ந்தேதி ரதம் உற்சவம், 23-ந்தேதி வெள்ளி ரத உற்சவம், 26-ந்தேதி காலை விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது. அன்று இரவு விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    திருத்தணி

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று இரவு 7 மணிக்கு முருகப்பெருமான் கேடய உலா உற்சவத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அன்ன வாகனம், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி-தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாணம், 23-ந் தேதி கதம்ப பொடி விழா 24-ந் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன். மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன் சுரேஷ் பாபு, நாகன் செய்து வருகிறார்கள்.

    திருப்போரூர்

    திருப்போரூரில் உள்ள கந்தசாமிகோயில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் செய்துள்ளனர்.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
    • மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் பாதுகாப்புடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட திருக்கோவில் ஊழியர்கள் பங்கேற்று, துணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 28 நாட்களில் பக்தர்கள் ரூ.1 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 988 ரூபாய் பணம், 711 கிராம் தங்கம், 8 ஆயிரத்து 880 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

    தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 5-வது படைவீடாக இருப்பது திருத்தணி.
    • திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 5-வது படைவீடாக இருக்கும், திருத்தணி முருகப்பெருமானின் ஆலயத்தில் உள்ள சிறப்புகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * வள்ளலார், கண்ணாடியில் முருகப்பெருமானின் தரிசனத்தைக் கண்டு அருள்பெற்றவர். அந்த முருகப்பெருமான், திருத்தணிகை முருகப்பெருமான் என்பது குறிப்பிடத்தக்கது. திருவருட்பா நூலில் `சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்' என்ற பாடலில், முருகனின் திருவருள் தரிசனம் பெற்ற அற்புதத்தைப் பற்றி வள்ளலார் கூறியுள்ளார்.

    * கர்நாடக சங்கீத மேதைகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், ஒருமுறை திருத்தணி வந்தார். மெய்மறந்து உள்ளம் உருகி முருகனை வணங்கி துதித்துக் கொண்டிருந்தபோது ஆறுமுகப்பெருமானே ஒரு சிறுவன் வடிவில் வந்து ஒரு கற்கண்டை தீட்சிதர் வாயில் போட்டதாகவும், அன்று முதல் இவர் அற்புதமான கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.

    * முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

    * காதர் என்னும் இஸ்லாமியரால் கட்டப்பட்ட நவாப் மண்டபத்தில் ஆடிக்கிருத்திகை போன்ற திருவிழா காலங்களில் இஸ்லாமிய நண்பர்கள் வாத்தியம் இசைக்கின்றனர்.

    * சேத்துப்பட்டிற்கு (போளூர்) அருகாமையில் உள்ள தேவிகாபுரம் மலையில் குடிகொண்டிருக்கும் சிவனுக்கும் அனுதினமும் வெந்நீர் அபிஷேகம் நடந்து வருகிறது. அதேபோல திருத்தணி கோவிலில் முதல் பிரகாரத்தில் உள்ள பாலமுருகனுக்கு ஆருத்ரா அன்று வெந்நீர் அபிஷேகம் நடைபெறும்.

    • முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஆங்கில புத்தாண்டை யொட்டி காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இங்குள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்படுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

    திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று கோவில் நிர்வாகம் சார்பில், 365 படிகளுக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி ஒவ்வொரு படிக்கும் தேங்காய் உடைத்து பூஜை செய்யப்பட உள்ளது.

    மேலும் நாளை காலை 10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர் காலை 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒவ்வொரு படிகள் தோறும் பக்தி பாடல் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர்.

    மேலும், ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு தரிசனம் மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. மேலும் மலைக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் மூலவரை தரிசனம் செய்வதற்கு வரிசை அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் மலைக்கோவிலுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் விடப்பட்டுள்ள பஸ்களில் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரில் வீரராகவர் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சிவா விஷ்ணு கோவில், திருப்பாச்சூர் வாசீஷ்வரர் கோவில், திருவா லங்காடு வடார ண்யேஸ்வரர் கோவில், காக்களூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துகு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவில்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. இங்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட உள்ளன. காஞ்சிபுரம் வரதரா ஜபெருமாள் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசன செய்யலாம். வல்லக்கோட்டை முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    திருப்போரூர் முருகன் கோவிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலையிலிருந்து இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கென அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் திருக்கோயிலில் 1-ந்தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மீஞ்சூர் முப்பத்தி அம்மன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் டிச.31-ந் தேதி திருப்படித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • காலை10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை வீடாக உள்ளது. ஆண்டுக்கு 365 நாட்கள் வருவதை குறிக்கும் வகையில் மலைக்கோயிலுக்கு சென்று வர 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் டிச.31-ந் தேதி திருப்படித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 31-ந்தேதி திருத்தணி கோவிலில் திருப்படிதிருவிழா நடைபெற உள்ளது. அன்று காலை10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    படித்திருவிழாவில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பஜனை கோஷ்டியினர் காலை முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒவ்வொரு படிகள் தோறும் பக்தி பாடல் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். பக்தர்கள் அனைத்து படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்வார்கள்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி 31-ந்தேதி நள்ளிரவு தரினம் மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. விழாவையொட்டி மலைக்கோவில், வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் தலைமையில் அறங்காலங்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகன், உஷா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மலைக் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு சரிசெய்யப்பட்டு உள்ளது. இப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. படித்திருவிழாவின் போது மலைக்கோவிலுக்கு அனைத்து வாகனங்ககளையும் அனுமதிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    • திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வெள்ளம்.
    • தடுப்புச் சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக படி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதையும் கோவில் நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையின் ஒரு பகுதியில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 12 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை யொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு மலை ப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் இன்னும் ஒரு வாரம் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
    • கோவில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். அவர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் இணைஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, சுரேஷ்பாபு, நாகன், கோ. மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் மொத்தம் ரூ.64 லட்சத்து 90 ஆயிரத்து 989 ரொக்கம் மற்றும் 161 கிராம் தங்கம், 4கிலோ வெள்ளி காணிக்கையாக இருந்தது. இது கடந்த 19 நாட்களில் மட்டும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது என்று திருத்தணி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடை பெற்றது.
    • 401 கிராம் தங்கம், 2 கிலோ 475 கிராம் வெள்ளி ஆகிய வற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா, சுரேஷ்பாபு, நாகன், மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடை பெற்றது.

    இதில் கடந்த 15 நாட்களில் ரூ.65 லட்சத்து 48 ஆயிரத்து 194 ரொக்கப்பணம் மற்றும் 401 கிராம் தங்கம், 2 கிலோ 475 கிராம் வெள்ளி ஆகிய வற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

    இதேபோல் திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 469 காணிக்கை செலுத்தி உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
    • கோவிலில் உள்ள உண்டியல்கள் ஒரு மாதத்துக்கு பின்னர் தேவர் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் 5-ம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

    இந்நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் ஒரு மாதத்துக்கு பின்னர் தேவர் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மொத்தம் ரூ.1கோடியே 55லட்சத்து 56 ஆயிரத்து 4 ரொக்கம், தங்கம் 960 கிராம், வெள்ளி 11 கிலோ, காணிக்கையாக கிடைத்து இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×